காரைக் கதம்பம் போற்றிடும் தைத் திருநாள்-2013

காரைக் கதம்பம் போற்றிடும்
தைத் திருநாள்-2013
02-02-2013
அன்புடையீர் வணக்கம்!
தலைவர்,செயலாளர்,நிர்வாகசபை,பிருத்தானியா

‘தழிழர் போற்றும் நன்னாள்
உழவர் போற்றும் பொன்னாள்’

என்று சிறப்பிக்கப்படும் தைத்திருநாள், சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர்திருநாளாகும். பிருத்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் ‘காரைக்கதம்பம்-2013 16வது  பொங்கல் விழா திக்கெட்டும் பரவி எமது ஊரின் பெருமைசேர்க்க வாழ்த்துகின்றோம்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப அன்று தமிழர் வாழும் தேசங்களில் கொண்டாடப்படும் பொங்கல்விழா. இன்று உலகின் எம் இனத்தின் புலம்பெயர் நாடுகளிலுள்ள கிராம நலனபுரிசங்களால் வெகு சிறப்பாக தமிழிசையை முதன்மைப்படுத்தி கொண்டாடுகின்றார்கள். அதன் வெளிப்பாடே காரைக் கதம்பம்-2013
வெந்தழல் நீராகும்;;;; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே; சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்?

எமது ஊரின் கலை வடிவங்களை நினைவுபடுத்தி இளையவர்களுக்கு கல்வியறிவை மேம்படுத்தவும், பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் ஒன்றினையும் இடமாகவும், காரைக் கதம்பம்- 2013 கலைவிழா பொலிவு பெற்று விளங்க வேண்டும் எனவும்,  ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானையும் ஆண்டிகேணி ஐயனாரையும் பிரார்த்தித்து ஆசிகூறி அமைகின்றோம்.

நன்றி

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.