கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய “சில்ப நவோதா”–2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள்.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய “சில்ப நவோதா”–2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் எமது பாடசாலை மாணவிகள் மூவர் வெற்றியீட்டியுள்ளனர். இவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு 11.09.2018 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

வெற்றியீட்டிய மாணவர் விபரம்

மாணவர் பெயர்                                                 பெற்ற இடம்                                       பரிசுத்தொகை
1. செல்வி இ.நிறோஜினி                                     2ம் இடம்                                                  ரூ15000.00
2. செல்வி.ப.யாழினி                                           3ம் இடம்                                                   ரூ10000.00
3. செல்வி.S.பிரியங்கா                                       3ம் இடம்                                                   ரூ  5000.00

கல்லூரி அதிபர் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி. தமிழினி ஜோசப்மேரி அவர்களுக்கும் தனது நன்றி கலந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.