காரைநகர் மணிவாசகர் சபையினரால் அமரர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Tag: காரைச் செய்திகள்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் சிவன் ஆலய அக்ரகார 6 வீடுகள் புனரமைக்க வடகடல் நிறுவன தலைவர் தியாகராஜா பரமேஸ்வரனின் முயற்சியால் 97 இலட்சம் நிதி ஒதுக்கீடு.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் சிவன் ஆலய அக்ரகார 6 வீடுகள் புனரமைக்க வடகடல் நிறுவன தலைவர் தியாகராஜா பரமேஸ்வரனின் முயற்சியால் 97 இலட்சம் நிதி ஒதுக்கீடு.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் சிவன் ஆலய வடக்கு வீதியில் ஆலய நித்திய பூஜைகளில் ஈடுபட்டு வந்த கணபதீஸ்வர குருக்கள் ,மங்களேஸ்வர குருக்கள்,வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் கைலாயக்கம்பர் பரம்பரையைச் சேர்ந்த மங்களவாத்திய கலைஞர்கள் வசித்து ஆலயத்திற்கு நித்தியபூசைகள் குறைவின்றி நடைபெற சேவையாற்றிய வீடுகள் 90 ம் ஆண்டு யுத்தசூழநிலையால் பெரும் சேதத்திற்குள்ளானது. இவ்வீடுகளை புனரமைப்பதற்கு முன்னாள் இந்துகலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரனும் வடகடல் நிறுவன தலைவருமான திரு. தியாகராஜா பரமேஸ்வரனின் விடாமுயற்சியால் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அறங்காவலரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மற்றும் இந்துகலாச்சார அமைச்சர் திரு.டீ.எம்.சுவாமிநாதனின் பணிப்பின்பேரில் அவரது அமைச்சின் ஊடாக ரூபா 97இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வீடுகளை பாரம்பரிய ஆகம முறைப்படி புனர்நிர்மாணம் செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய ஆதீனகர்த்தாவும் பிரபல கட்டிடக்கலைஞருமான திரு. குமாரதாஸ் சயந்தன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறவிருக்கின்றது.
காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.
காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.
காரைநகரில் உள்ள நீலிப்பந்தனைக் கேணி,சடையாளிக் கேணி,சடையாளி தண்டாயுதபாணி கேணி,ஆலடிக் கேணி,திண்ணபுரம் தாமரைக் குளம் என்பன தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து ஆலங்கன்று கேணி தூர்வாரி இறைத்து துப்புரவு செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஏனைய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் இறைத்து துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட் உள்ளதாகவும் அவ்வாறு துப்புரவு செய்யும் பட்சத்தில் மாரிகாலத்தில் மழைநீர்நிறைந்து ஏனைய பிரதேசங்கள் நன்நீராக மாறும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைநகர் ஆலடிக் கேணி இறைத்துத் தூர்வாரித் துப்புரவு செய்யும்போது.
ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் கமீத் ஏ.கே. அல்முலா கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம்,காரைநகர் பிரதேச செயலர் இ.தயாரூபன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை கல்வி பயிலும் 1613 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது
ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் பணிமனையினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபாகார்த் மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை பி.ப 1:00 மணிக்கு நடைபெற உள்ளது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் அப்துல்ஹமீட் A.K. அல்முலா அவர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.
காரைநகர் பிரதேச செயலக அலுவலர்கள், தீவக வலயக் கல்விப்பணிமனை அலுவலர்கள், காரைநகர் கோட்டக்கல்விப் பணிமனை அலுவலர்கள், ஒய்வுநிலை அதிபர், பாடசாலை அதிபர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
முழுமையான நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறுகின்ற மண்டலாபிஷேக திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 06/09/2017 அன்று நடை பெற்ற மண்டலாபிஷேக 7ம் நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 05/09/2017 அன்று நடை பெற்ற மண்டலாபிஷேக 6ம் நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 04/09/2017 அன்று நடை பெற்ற மண்டலாபிஷேக 5ம் நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 03/09/2017 அன்று நடை பெற்ற மண்டலாபிஷேக 4ம் நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 02/09/2017 அன்று நடை பெற்ற மண்டலாபிஷேக 3ம் நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆரம்ப கிரியைகள்! 29.08.2017, 30.08.2017 காணொளி
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆரம்ப கிரியைகள்! 30.08.2017 காணொளி
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆரம்ப கிரியைகள்! 29.08.2017 காணொளி
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 31.08.2017 வியாழக்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காட்சிகள்!
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 31.08.2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காட்சிகள்!
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://photos.app.goo.gl/NyhAoVniB1GGPAJZ2
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 31.08.2017 வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வசந்தமண்டப பூஜை மற்றும் விநாயகப்பெருமான் திருவீதியுலாவரும் காட்சிகள்!
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
29.08.2017 செவ்வாய்க்கிழமை அன்று 108 பால்குட பவனி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து தன்னை சித்தி விநாயகர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டு புதிதாக செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டன!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறுகின்ற ஆரம்ப கிரியைகள்! 29.08.2017
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://photos.app.goo.gl/BgA1UCsT1E4XE7L83
29.08.2017 செவ்வாய்க்கிழமை அன்று 108 பால்குட பவனி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து தன்னை சித்தி விநாயகர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டு புதிதாக செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டன.
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://photos.app.goo.gl/eQsiDRu3y1a4v5Ly1
காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் 22.08.2017 அன்று இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு நிகழ்வு!
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://goo.gl/photos/vEMWL8KJvpM1BPp68
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா!
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்!
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் 31.08.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மஹா கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பு காலை 6.30மணி தொடக்கம் (இலங்கை நேரப்படி) http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்.
காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் மஹா கும்பாபிஷேக கிரியைகள் முதலாம் நாள்,இரண்டாம் நாள் காணொளி!
காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் மஹா கும்பாபிஷேக கிரியைகள் இரண்டாம் நாள் மாலை காணொளி!
காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் மஹா கும்பாபிஷேக கிரியைகள் இரண்டாம் நாள் காலை காணொளி!
காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் மஹா கும்பாபிஷேக கிரியைகள் முதலாம் நாள் காணொளி!
காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான 5வது சமூக சேவை வேலைத்திட்டம்!
காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான 5வது சமூக சேவை வேலைத்திட்டம்!
நமது மண்ணின் மீதும் நமது மக்களின் மீதும் பற்றுக்கொண்டு எம்மால் மேற்கொள்ளபட்டுவரும் சமூக சேவை வேலைத்திட்டங்களின் அடிப்படையில் 5வது வேலைத்திட்டமாக ''நமது மண்ணை நாம் நேசிப்போம் நமது மண்ணை அழகாக்குவோம்'' எனும் தொனிப்பொருளில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் நமது ஆதார வைத்தியசாலையின் முற்புற மதில் நீண்டகாலமாக பாசிகள் பிடித்து காணப்பட்டது.
அருகில் பாடசாலைகள் கோவில்கள் அழகாக இருந்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வைத்தியசாலையினை அழகாக வைத்திருக்கும் பொருட்டு நமது கழக அங்கத்தவர் திரு.சுகந்தன் அவர்களின் பூரண நிதி அனுசரணையில் நமது கழக இளைஞர்கள் அனைவரும் இரவு பகல் பாராது பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ச்சிகாக சேவைபுரிந்து இவ்வாறு அழகுற வர்ணம்பூசபட்டுள்ளது. இன்னும் பல சமூகத்திற்கு பயன்மிக்க சேவைகள் எம்மால் மேற்கொள்ளபட உள்ளது அதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.
''வாழப்போவது சிறிது காலம் அதற்குள் யாருக்காவது பிரஜோசனமாக இருப்போம்''
வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்
வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்
சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன். தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார வசதிகளற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திறமை மிக்க மாணவியான உஷாந்தினி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் வரைக்குமான இரண்டு ஆண்டுகளுக்கும் ஏற்படக்கூடிய கற்றல் செயற்பாட்டிற்கான உதவியை வழங்கி உதவ முன்வரவேண்டும் என கல்லூரி அதிபர் பரிந்துரை செய்திருந்தார். கனடாவில் வதியும் கல்லூரியின் பழைய மாணவரான திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வுதவியை வழங்க முன்வந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக இதனை வழங்கியுள்ளார். திரு.மாணிக்கம் கனகசபாபதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். செல்வி உஷாந்தினி இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கருசனையுடன் செயலாற்றிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் மாணவியின் குடும்பநிலையைப் புரிந்துகொண்டு உதவிய திரு.கனகசபாபதிக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
திரு.மாணிக்கம் கனகசபாபதி கல்லூரிக்கு பயணம் செய்தபோது இவ்வுதவியின் முதலாவது தவணைக்கான உதவிக் கொடுப்பனவினை செல்வி உஷாந்தினி சோதிநாதனிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்க்கலாம். அருகில் கல்லூரியின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் காணப்படுகின்றார்.
![OLYMPUS DIGITAL CAMERA](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Ushanthini-Photo.jpg?resize=645%2C448)
OLYMPUS DIGITAL CAMERA
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா 04.08.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு வே. புவனேந்திரராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு N. லோகநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பொருளாளர் திரு மா. கனகசபாபதி அவர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு ந. யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 12 மாணவர்களும், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 8 மாணவர்களும், 2017ஆம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் ரொக்கப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் ரொக்கப் பரிசில்களை வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முப்பத்தையாயிரம் ரூபாவினை வழங்கி உதவியிருந்தது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறான சிறப்புச் சித்திகளை பெற காரணமாக இருந்த ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களுக்கான பாராட்டு விருதினை வழங்க பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினரும் யோகா றான்ஸ்போட் நிறுவனத்தின் அதிபருமான திரு.ந.யோகநாதன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
தென் அமெரிக்காவின் பரகுவே நாட்டில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வில் காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த சிவபாலன் நவமணி தம்பதியரின் மகன் திரு.நிமலன் அவர்கள் கலந்து நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர் (42km) தூரத்தினை ஜந்து மணித்தியாலங்கள் இருபத்து மூன்று நிமிடங்கள் ஜம்பத்து மூன்று செக்கன்களில் (5 Hrs 23 Min 53 Sec.)கடந்து நமது காரைநகர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
காக்கை பறக்காத ஊரும் இல்லை காரைதீவான் போகாத இடமும் இல்லை என்பார்கள் நம் முன்னோர் அவ் பழமொழிக்கு இணங்க தென் அமெரிக்காவின் பரகுவே நாட்டில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வில் காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த சிவபாலன் நவமணி தம்பதியரின் மகன் திரு.நிமலன் அவர்கள் கலந்து நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர் (42km) தூரத்தினை ஜந்து மணித்தியாலங்கள் இருபத்து மூன்று நிமிடங்கள் ஜம்பத்து மூன்று செக்கன்களில் (5 Hrs 23 Min 53 Sec.)கடந்து நமது காரைநகர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது இவரது இரண்டாவது மரதன் ஓட்ட போட்டியாகும் முதலாவது போட்டி கடந்த 2014ம் ஆண்டில் பங்குபற்றி இதே தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 44 நிமிடங்களில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சாதனைகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அவரை வாழ்த்துவதோடு மட்டுமல்லாது இன்னும் பல போட்டிகளில் கலந்து மென்மேலும் பெருமைகளை நமது மண்ணிற்கு பெற்று தர வேண்டும் என்ற அன்பு கோரிக்கையினை விடுக்கின்றோம்.
காரைநகர் பக்தர்கேணியடியை சேர்ந்த சிவபாலன் நிமலன் எதிர்வரும் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரம் மாலை 5.00 மணி) பரக்குவா நாட்டில் 42கி. மீ தூர மரதன் ஓட்டத்தில் சிறீலங்காவுக்காக களமிறங்குகிறார்.
காரைநகர் பக்தர்கேணியடியை சேர்ந்த சிவபாலன் நிமலன் எதிர்வரும் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரம் மாலை 5.00 மணி) பரக்குவா நாட்டில் 42கி. மீ தூர மரதன் ஓட்டத்தில் சிறீலங்காவுக்காக களமிறங்குகிறார். இவர் கடந்த பலவருடங்களாக அந்நாட்டில் பல மரதன் ஓட்டங்களில் வெள்ளி,வெண்கல பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆடி பூர திருவிழா பால் குடபவனி 26.07.2017 புதன்கிழமை நடைபெற்றது!
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய ஆடி பூர திருவிழா பால் குடபவனி 26.07.2017 புதன்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தன்னை பிள்ளையார் வீதி வழியாக வளுப்போடை சந்தி ஊடாக பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
வடமாகாண விளையாட்டுப் போட்டியில் 100அ நிகழ்வில் நான்காமிடம் பெற்று செல்வன் காந்தரூபன் மயூரன் தேசிய மட்டத்திற்கு தெரிவு
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான 10 வது மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 10.07.2017 அன்று துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
10.07.2017 அன்று இடம்பெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 100mபோட்டியில் செல்வன் காந்தரூபன் மயூரன் 11 செக்கன் 9 விநாடியில் ஓடி 4ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன் இம் மாணவன் வடமாகாணப் பாடசாலை விளையாட்டுக்கள் நிறப்பரிசளிப்பையும் (Colours Award) பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் 100 m போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், மாணவன் வெற்றியடைய சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்) அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
செல்வன் காந்தரூபன் மயூரன் அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஆகியோருடன் எடுக்கப்பட்ட நிழற்படத்தையும், மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளையும் கீழே காணலாம்.