தென் அமெரிக்காவின் பரகுவே நாட்டில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வில் காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த சிவபாலன் நவமணி தம்பதியரின் மகன் திரு.நிமலன் அவர்கள் கலந்து நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர் (42km) தூரத்தினை ஜந்து மணித்தியாலங்கள் இருபத்து மூன்று நிமிடங்கள் ஜம்பத்து மூன்று செக்கன்களில் (5 Hrs 23 Min 53 Sec.)கடந்து நமது காரைநகர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

காக்கை பறக்காத ஊரும் இல்லை காரைதீவான் போகாத இடமும் இல்லை என்பார்கள் நம் முன்னோர் அவ் பழமொழிக்கு இணங்க   தென் அமெரிக்காவின் பரகுவே நாட்டில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வில் காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த  சிவபாலன் நவமணி தம்பதியரின் மகன்  திரு.நிமலன் அவர்கள் கலந்து நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர் (42km) தூரத்தினை ஜந்து மணித்தியாலங்கள்  இருபத்து மூன்று நிமிடங்கள்  ஜம்பத்து மூன்று செக்கன்களில் (5 Hrs 23 Min 53 Sec.)கடந்து நமது காரைநகர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

இது இவரது இரண்டாவது மரதன் ஓட்ட போட்டியாகும் முதலாவது போட்டி கடந்த 2014ம் ஆண்டில் பங்குபற்றி இதே தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 44 நிமிடங்களில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சாதனைகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அவரை வாழ்த்துவதோடு மட்டுமல்லாது இன்னும் பல போட்டிகளில் கலந்து மென்மேலும் பெருமைகளை  நமது மண்ணிற்கு பெற்று தர வேண்டும் என்ற அன்பு கோரிக்கையினை விடுக்கின்றோம். 

a1 a2 a3 a4 a5 a6 a7