Tag: CKCA

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2023”

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற

நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

“காரை வசந்தம் 2023”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம்” எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக “காரை வசந்தம் 2023” கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது.

காரை வசந்தம் விழாவில் காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக இம்முறை காரை மண்ணின் பெருமையினை எடுத்தியம்பும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

21வது ஆண்டாக வீசவுள்ள காரை வசந்தம் சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

                நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் கலை விழாவிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் கலை விழாவிற்கு

தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர்

பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

டிசம்பர் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்பும் காரைநகருடன் தொடர்புடைய இளையோர் karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் ஊடாக பின்வரும் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். நிகழ்வுகளின் நிறைவில் இவர்களிற்கு தொண்டர் சேவைச் சான்றிதழ் வழங்கப்படும்.

First Name (முதற்பெயர்) :

Last Name (கடைசிப் பெயர்):

தொலைபேசி இலக்கம்:

 

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து இயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து இயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து பயணித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையின் அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீர் வசதியை மேம்படுத்த உதவியிருந்தது.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தினால் அடையாளம் காணப்பட்ட வியாவில் சைவ வித்தியாலய சத்துணவு,மதிய உணவு சமையல்கூடம் பயன்படுத்த முடியாதளவில் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் இருப்பதை 2019ம் ஆண்டு முதல் அவதானித்து வந்தது. ஆனாலும் இதுவரை சீர்செய்ய எடுத்த முயற்சிகள் பயன்ற்று போன நிலையில் தற்போதைய நிர்வாகம் அதனை புனரமைத்து கொடுக்க முன்வந்துள்ளது.
உத்தேச செலவு 6 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் சுப்பிரமணியம் வித்தியாசாலையின் வகுப்பறை கட்டிடங்களிற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்து வழங்கவும் தற்போதைய கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை முன்வந்துள்ளது. காரைநகர் சுப்பிரமணியம் வித்தியாசாலையின் மேற்கு பகுதி வகுப்பறைகள் பாதுகாப்பற்றவகையில் திறந்த வகுப்பறைகளாக இருந்து வந்திருப்பதை யாவரும் அறிந்ததே, அதன் ஒரு பகுதியை பாதுகாப்புடன் கூடிய அழகிய வகுப்பறைகளாக செப்பனிட்டு வழங்க கல்விக்கோட்டம் 2019 இல் ஒரு தொகை நிதியுதவியளித்து இரண்டு வகுப்பறைகளிற்கான பாதுகாப்பினை செயற்படுத்திக்கொடுத்துள்ளது. மேற்படி கட்டிடத்தின் மேலும் மூன்று வகுப்பறைகள் திறந்த நிலையிலும் கதவுகள் அற்ற வகையிலும் உள்ளது. அதனை முழுமைபெற்ற வகையில் செப்பனிட்டு வழங்குமாறு சுப்பிரமணிய வித்தியாசாலையிடமிருந்து கனடா காரை கலாசார மன்றத்திற்கு வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பாடசாலைக்கு விஜயம் செய்த கனடா காரை கலாசார மன்ற நிர்வாக உறுப்பினர்களிடம் அதிபர் நேரில் தெரிவித்தார். அதனை ஆராய்து அதற்குரிய உத்தேச செலவீனங்களை பெற்றுக்கொண்ட தற்போதைய நிர்வாகத்தினர் அச்செயற்பாட்டினை நிறைவேற்றி வழங்க நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச செலவு 6 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் மேற்குறித்த இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்துஇயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கின்றது.

நிதியுதவி செய்ய விரும்புவோர் மன்ற மின்னஞ்சல் : karainagar@gmail.com அல்லது தொலைபேசி இலக்கம் : 416 418 5697 என்பனவற்றுக்கூடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளில் முக்கியமானதும் காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கியமானதுமான பாடசாலைகளின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயற்பட்டு கனடா வாழ் காரைநகர் மக்கள் மன்றத்திற்கு வழங்கிவரும் அனுசரணைகள் ஊடாக பலவித அத்தியாவசிய அடிப்படை தேவைகள் காரைநகர் பாடசாலைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை வசந்தம்’ நிகழ்வின் ஊடாக பெறப்படும் பெருமளவான நிதி காரைநகர் பாடசாலைகளின் தேவைகளிற்காக நிர்வாக சபையின் தீர்மானங்களிற்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டு காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

எதிர்வரும் Dec 02. 2023 சனிக்கிழமை நடைபெறவுள் “காரை வசந்தம் 2023” நிகழ்வில் கலந்து கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளிற்கு ஆதரவு வளங்கி காரைநகர் பாடசாலைகளை மேம்படுத்த அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி.

     நிர்வாகம்
கனடா காரை கலாசார மன்றம்

 

 

முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த

முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

கனடா-காரை கலாசார மன்ற வரலாற்றில் முக்கியமான மைல் கல் முதலாவது காரை வசந்தத்தின் வெற்றி எனலாம். 2000ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி கென்னடி & லோறன்ஸ் சந்திப்பிலுள்ள கல்லூரி மண்டபத்தில் கனடா-காரை கலாசார மன்றத்தின் முதலாவது “காரை வசந்தம்” வீச ஆரம்பித்தது. கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் அதன் தலைவராகவும் பணியாற்றியிருந்த அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களது தலைமையில் அமைந்திருந்த நிர்வாகத்தின் பெருமுயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்த முதலாவது காரை வசந்தமானது பாராட்டும்படியான சிறந்த கலை நிகழ்வுகளுடன் மண்டபம் நிறைந்த காரை மக்களுடன் பெரு வெற்றி விழாவாக அமைந்திருந்தது. முதலாவது காரை வசந்தத்தத்தின் இந்த வெற்றியானது பெரும் ஊக்குவிப்பாகவும் தொடர்ந்து இவ்விழாவினை முன்னெடுத்து நடாத்துவதற்கான அடித்தளமாகவும் அமைந்துவிட்டது எனலாம். காரை வசந்தம் 22வது ஆண்டாக நடைபெறவிருக்கும் இத்தருணத்தில் முதலாவது காரைவசந்தத்தின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்:

காரை வசந்தம் – 2023

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/11/Karai-Vasantham-2023.mp3″ autoplay=”no”]

காரைதீவு காரைநகராக மாற்றம்பெற்ற நூற்றாண்டுச் சிறப்பிதழாக மலரவிருக்கும் “காரை வசந்தம்-2023” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரைதீவு காரைநகராக மாற்றம்பெற்ற நூற்றாண்டுச் சிறப்பிதழாக மலரவிருக்கும் “காரை வசந்தம்-2023” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரைதீவு காரைநகராக மாற்றம் பெற்ற நூற்றாண்டு நிறைவு மண்ணின் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் காரை வசந்தம் கலை விழாவை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வெளிவரவுள்ள காரை வசந்தம் சஞ்சிகை நூற்றாண்டு சிறப்பிதழாக மலரவுள்ளது.

இச்சஞ்சிகையில் இடம்பெறுவதற்கு தரமான ஆக்கங்கள் கட்டுரை, கவிதை வடிவில் எதிர்பார்க்கப்படுகின்றன. காரைநகரின் தொன்மை, வரலாறு, கல்வி, கலை, கலாசாரம், சமயம், பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியன தொடர்பில் மண்ணின் மகத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய கருத்துக்களையும் தகவல்களையும் உள்ளடக்கியதான ஆக்கங்களை அனுப்பி வைக்க விரும்புவோர் எதிர்வரும் 21-10-2023 சனிக்கிழமைக்கு முன்னதாக karainagar@gmail.com என்ற கனடா-காரை கலாசார மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

காரைநகர் தொடர்புபட்ட அரியவகை புகைப்படங்கள் ஆவணங்கள் வைத்திருப்போர் தந்து உதவினால் அவை திரும்ப ஒப்படைக்கப்படும்.

காரை வசந்தம் – 2023 மலர்க்குழு
கனடா-காரை கலாசார மன்றம்.

 

காரை வசந்தம் – 2023

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள “காரை வசந்தம் 2023”.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை

கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள

“காரை வசந்தம் 2023”.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீயமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் Oct 20, 2023ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி சிவநாதன் 416 418 5697 / நாகேஸ்வரி 647 973 4507 / ஞானாம்பிகை 647 857 2277 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மின்னஞ்சல் விரும்பத்தக்கது.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் Oct 20, 2023ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி சிவநாதன் 416 418 5697 / நாகேஸ்வரி 647 973 4507 / ஞானாம்பிகை 647 857 2277 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி!

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“காரை வசந்தம் 2023”

“காரை வசந்தம் 2023”

Dec 02,2023 அன்று தமிழிசைக் கலா மன்ற அரங்கில் “காரை வசந்தம் 2023” நடாத்துவதற்கு கனடா காரை கலாசார மன்றம் தீர்மானித்துள்ளது.

காரைநகர் என்ற பெயர் மாற்றம் பெற்று நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு “காரை வசந்தம் 2023” சிறப்பு நிகழ்வாக நடாத்துவதற்கும் சிறப்பு மலர் வெளியிடுவதற்கும் கனடா வாழ் காரைநகர் மக்கள் அனுசரணை வழங்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் “காரை வசந்தம் 2023” கலைநிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் வகையில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய விழா குழுவில் இணைந்து கொள்ள கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு அழைப்பு விடப்படுவதோடு கனடிய காரை இளையோர்களை இந்த விழா குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு பெற்றோர்களிற்கு அன்பான வேண்டுகோளையும் விடுக்கிறோம்.

விழா குழுவில் இணைந்து கொள்ள தலைவர் (416 418 5697) அல்லது செயலாளருடன் (647 973 4507) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

                     நிர்வாகம்
கனடா காரை கலாசார மன்றம்.

கனடா வாழ் காரை உறவுகளிற்கும் உறுப்பினர்களிற்கும் கனடா-காரை கலாசார மன்றம் விடுக்கும் அறிவித்தல்.

கனடா வாழ் காரை உறவுகளிற்கும் உறுப்பினர்களிற்கும்

கனடா-காரை கலாசார மன்றம்

விடுக்கும் அறிவித்தல்.

கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் அதன் செயற்பாட்டாளர்களிற்கும் எதிராகத் தொடரப்பட்டு ஒன்ராறியோ உயர்நீதிமன்றில் நடந்துவரும் வழக்குத் தொடர்பில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக எவ்வித அடிப்படையும் ஆதாரமற்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மன்ற நிர்வாகத்தின் மீது முன்வைத்து வருவதுடன் கட்டமைக்கப்பட்ட மன்றத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமற்ற வகையில் அர்த்தமற்ற விமர்சனங்களை பதிவிட்டு மக்களை தவறான வழியில் நடாத்த முற்பட்டு வருவது மன்ற நலன் விரும்பிகளுக்கும் மண்ணின் பற்றாளர்களுக்கும் கவலையளிப்பதாகவுள்ளது.

மன்றத்தின் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், கரிசனைகளையும் முன்வைப்பதையோ அல்லது பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பு விதிகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய நேரிய வழிகளைப் பின்பற்றி அவற்றிற்குத் தீர்வு காண்பதையோ தவிர்த்து சமூக ஊடகங்கள் வாயிலாக எதேச்சையான முறையில் பதிவிட்டு வருவது விதி மீறல் என்பதுடன் சமூகப் பொறுப்பற்ற செயலாகவும் பார்ப்பதுடன் அவர்களது முறையற்ற இந்நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. கருத்துக்களையும், கரிசனைகளையும் முன்வைக்கின்ற உரிமையினை நாம் மறுக்கவில்லையானாலும் அவற்றினை மன்றத்தின் உரிய விதிகளுக்கமைய பொதுக்கூட்டத்திலோ அன்றி மன்றத்தின் உத்தியோகபூர்வமான மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொண்டோ தெரியப்படுத்தினால் அவற்றினை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் நிர்வாகத்துக்கு உண்டு. நிர்வாகத்தின் பதிலில் அல்லது நடவடிக்கைகளில் திருப்திப்படாதவிடத்து மன்றத்தின் யாப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக திட்டமிடல் போசகர் சபைக்கு மேன்முறையீடு செய்து தீர்வுகாண முயற்சிப்பதை விடுத்து மன்றத்தின் விதிமுறைகளைத் தாண்டி முற்றிலும் முரணான வகையில் செயற்படுவது என்பது மன்ற நலனிற்கும் அதன் வளர்ச்சிக்கும் குந்தகத்தினை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதை கருத்திற்கொண்டு இதுபோன்ற முறையற்ற சமூகப் பொறுப்பில்லாத செயற்பாடுகளைத் தவிர்த்து, உரிய வழிமுறைகளில் அணுகுமாறு சம்பந்தப்பட்டவர்களை கனடா-காரை கலாசார மன்றம் கேட்டுக்கொள்கின்றது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தற்போதய நிர்வாகம் அமைந்த நாள் முதலாக குறித்த வழக்கினை சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வத்துடன் முயற்சி செய்து வந்துள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கறிவர். மன்ற நிர்வாகத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாக வழக்காளியும், பிரதிவாதிகளும் சுமுகமான முறையில் வழக்கினை முடிவுறுத்துவதற்கு சென்ற யூலை மாதத்தில் இணக்கம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நியாயமானதும் கௌரவமானதுமான சமாதானத் தீர்வினை எட்டும் வகையிலான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு திரு.சிவசம்பு சிவநாதன் (மன்றத்தின் தலைவர்), திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை (மன்றத்தின் போசகர்), திரு.சிவசுப்பிரமணியம் குகநேசபவான் (மன்றத்தின் முன்னாள் போசகர்) ஆகியோரை உள்ளடக்கிய குழு வழக்காளி, பிரதிவாதிகள் ஆகியோரின் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதும் சமாதானத்தையே விரும்புவபர்கள். சமாதானக் குழு உறுப்பினர்கள் மூவரும் வழக்காளியைச் சந்தித்துப் பேசுவதற்கான முதலாவது கூட்டத்துக்கான அழைப்பு மின்னஞ்சல் ஊடாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கிற்கு ஏற்பட்டுவருகின்ற சட்டவாளர்களிற்கான செலவுகளை சமூக அக்கறையும், ஊர்ப்பற்றும் கொண்ட எம்மண்ணின் மக்களினால் மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்கவேண்டும் என்ற நன்நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்ற நிதியும், பிரதிவாதிகளினால் வழங்கப்பட்டுள்ள நிதியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டவர்கள் தெரிவிப்பது போன்று இவ்வழக்கிற்கு மன்றத்தின் நலன்புரித் திட்டங்களுக்காக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேவேளை நீதி மன்றத்தில் உள்ள ஒரு வழக்குத் தொடர்பிலான அனைத்து விபரங்களையும் பகிர்ந்து கொள்வது என்பது பிரதிவாதிகளின் நலன்களுக்கு பாதகமானதாக அமைந்து விடக்கூடியது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பலதரப்பட்ட சவால்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி காரை.உறவுகளின் நலன்பேணும் செயற்பாடுகளுக்கு உதவுவதில் உண்மையாகவும் உணர்வோடும் உழைத்து வருகின்ற கனடா-காரை கலாசார மன்றத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வருகின்ற பேராதரவு காரணமாக மண்ணின் உறவுகளிற்கான நலன்புரித் திட்டங்களை வகுத்து சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்ற அதேவேளை கனடா வாழ் காரை உறவுகளை ஒன்றிணைத்து அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களாக வருடாந்த நிகழ்ச்சிகளையும் அனைவரும் பாராட்டும்படியாக செயற்படுத்தி வருவதையிட்டு மகிழ்வடைகின்றோம். இளையோரை ஒன்று திரட்டி இளையோர் அமைப்பினை ஏற்படுத்தி அவர்களையும் மன்றப் பணிகளில் ஈடுபடவைப்பதன் ஊடாக எதிர்காலச் சந்ததி மன்ற நிர்வாகத்தினை பொறுப்பேற்று செயற்படக்கூடிய நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எமது நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊர்ப் பற்றும் சமூக அக்கறையும் கொண்டு கடந்த நிர்வாகங்களில் அங்கம் வகித்த சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால் 33 ஆண்டுகளுக்கு மேலாகக் ஒற்றுமையோடு கட்டி வளர்க்கப்பட்ட கனடா-காரை கலாசார மன்றத்தின் பணிகளை இளையோர் அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்ளும் வரை வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு உழைக்க முன்வருமாறு கனடா வாழ் காரையின் உறவுகளை அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

                    நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

வெகு சிறப்பாக நடைபெற்றிருந்த தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் முடிவுகள்.

 

வெகு சிறப்பாக நடைபெற்றிருந்த தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் முடிவுகள்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் காரைச் சிறார்கள் இளையோர் மத்தியில் நடாத்தப்பட்டு வருகின்ற தமிழ்மொழித் திறன் பண்ணிசை ஆகிய போட்டிகள் சென்ற 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை Scarborough Civic Centre இல் வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது.

போட்டியாளர்கள் அவர்களது பெற்றோர் நடுவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவநாதன் உரையாற்றி போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்திருந்தார். ஆறு பிரிவுகளாக நடாத்தப்பட்டிரந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. வெற்றியாளர்களிற்கான பரிசில்களும் போட்டிகளில் பங்குபற்றியவர்களிற்கான பரிசில்களும்  நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள “காரை வசந்தம்” கலை விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பேச்சு

கீழ்ப் பிரிவு:
1வது இடம்: அமுதீசன் சிவானந்தன்
2வது இடம்: மாறன் விமுத்தன்
3வது இடம்: ஷர்வினி சிவசங்கர்

மத்திய பிரிவு:
1வது இடம்: ராகவி சிவானந்தன்
2வது இடம்: இளநிலா விஜயகுமார்
3வது இடம்: ஆரணி செல்வகுமாரன்

மேற் பிரிவு:
1வது இடம்: அருண் செல்வகுமாரன்
2வது இடம்: தீபிகா சிவசங்கர்
3வது இடம்: யதுக்சியா விமலரூபன்

அதிமேற் பிரிவு:
1வது இடம்: அபீஷ்னன் சிவானந்தன்
2வது இடம்: இலக்கியா விஜயகுமார்
3வது இடம்: றுக்சியா விமலரூபன்

 

வாசிப்பு

கீழ்ப் பிரிவு:
1வது இடம்: அமுதீசன் சிவானந்தன்
2வது இடம்: மாறன் விமுத்தன்
3வது இடம்: ஷர்வினி சிவசங்கர்

மத்திய பிரிவு:
1வது இடம்: ராகவி சிவானந்தன்
2வது இடம்: ஆரணி செல்வகுமாரன்
3வது இடம்: இளநிலா விஜயகுமார்

மேற்பிரிவு:
1வது இடம்: அருண் செல்வகுமாரன்
2வது இடம்: தீபிகா சிவசங்கர்
3வது இடம்: அஜீஸ் சண்முகரட்ணம்

அதிமேற் பிரிவு:
1வது இடம்: அபீஷ்னன் சிவானந்தன்
2வது இடம்: இலக்கியா விஜயகுமார்
3வது இடம்: தேனுஜன் கருணாகரன்

உயர் பிரிவு:
1வது இடம்: ஹர்ணி பரந்தாமன்

 

சொல்வதெழுதுதல்

கீழ்ப் பிரிவு;
1வது இடம்: (இருவர்) அமுதீசன் சிவானந்தன்
மாறன் விமுத்தன்
2வது இடம்: (இருவர்) கனிஷா கருணாகரன்
ஷர்வினி சிவசங்கர்

மத்திய பிரிவு:
1வது இடம்: (இருவர்) ஆரணி செல்வகுமாரன்
இளநிலா விஜயகுமார்
2வது இடம்: ராகவி சிவானந்தன்
3வது இடம்: கிருத்திஜன் கருணாகரன்

மேற் பிரிவு:
1வது இடம்: தீபிகா சிவசங்கர்
2வது இடம்: யதுக்சியா விமலரூபன்
3வது இடம்: அருண் செல்வகுமாரன்

அதிமேற் பிரிவு:
1வது இடம்: (இருவர்) அபீஷ்னன் சிவானந்தன்
இலக்கியா விஜயகுமார்
2வது இடம்: தேனுஜன் கருணாகரன்
3வது இடம்: றுக்சியா விமலரூபன்

 

பண்ணிசை

பாலர் பிரிவு:
1வது இடம்: வேந்தன் விமுத்தன்

கீழ்ப் பிரிவு:
1வது இடம்: அமுதீசன் சிவானந்தன்
2வது இடம்: மாறன் விமுத்தன்
3வது இடம்: ஷர்வினி சிவசங்கர்

மத்திய பிரிவு:
1வது இடம்: இளநிலா விஜயகுமார்
2வது இடம்: ராகவி சிவானந்தன்
3வது இடம்: விபுசா விமலரூபன்

மேற் பிரிவு:
1வது இடம்: யதுக்சியா விமலரூபன்
2வது இடம்: தீபிகா சிவசங்கர்
3வது இடம்: அஜீஸ் சண்முகரட்ணம்

அதிமேற் பிரிவு:
1வது இடம்: ராகவி முரளி
2வது இடம்: அபீஷ்னன் சிவானந்தன்
3வது இடம்: (இருவர்) றுக்சியா விமலரூபன்
இலக்கியா விஜயகுமார்

 

 

 

 

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

 

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகள் எதிர்வரும் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் இதுவரை பதிவுசெய்யாத போட்டியாளர்கள் இறுதிவரை பார்த்திராது தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவுசெய்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கான எமது திட்டமிடலுக்கு ஒத்துழைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.

             நிர்வாகம்,
கனடா-காரை கலாசார மன்றம்

 

 

 

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

 

Verification

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்தினர் கனடா-காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உதவிக் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். ஊர் அபிமானம் மிக்க காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்கள் முன்வந்து தனது வெற்றிப் படைப்பான “ஒருத்தி-2” திரைப்படத்தை திரையிட்டு அதன் ஊடாகப் பெறப்படும் நிதியினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து குறித்த திரைப்படம் மே மாதம் திரையிடப்பட்டு திரட்டப்பட்டிருந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட முதலாவது தொகுதி மருந்துப் பொருட்கள் சென்ற மே மாத இறுதியில் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி Dr.K.செந்தூரன் அவர்களிடம் கனடா-காரை கலாசார மன்றத்தினால் வைபவரீதியாக கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது தொகுதி மருந்துப் பொருட்கள் வாங்கப்பட்டு வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் பிரதேச வைத்தியசாலையில் பொது அமைப்புக்களினதும் கொடையாளர்களினதும் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் மருந்துப் பொருட்களின் கையிளிப்பு போன்ற நலன்புரிச் சேவைகள் காரணமாக வெளிநோயாளர் பிரிவிலும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களினது எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நான்கு மருத்துவர்கள் இவ்வைத்திய சாலையில் பாராட்டும்படியாக நோயளர்களிற்கான சேவையினை வழங்கி வருகின்றனர்.

 

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்- 2023

கனடா – காரை கலாச்சார மன்றம்

நடாத்தும் தமிழ் மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2023

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்  September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தப்படவுள்ளன.

இடம்: Scarborough Civic Centre

காலம்: September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30மணி

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்.

1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3.மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4.மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5.அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8)
6.உயர் பிரிவு (தரம் 9, தரம் 10)

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும்.

நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்)

பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
கீழ்ப் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
மேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
அதிமேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்
உயர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்

பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.

வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.

எழுத்து (சொல்வதெழுதுதல்):
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

பங்குபற்ற விரும்பும் பிள்ளைகள் சரியாக காலை 9.30 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை பதிந்து சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் பின்வரும் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

 

Verification

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2023” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

                நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்

 

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.                                         

 

                                                              பிரிவுகள்

 

பாலர் பிரிவு: Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-JK-SK.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-JK-SK.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-JK-SK.pdf

 

கீழ்ப் பிரிவு: Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-1-2.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-1-2.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-1-2.pdf

 

மத்திய பிரிவு: Gr 3 / Gr 4 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-3-4.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-3-4.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-3-4.pdf

 

மேற் பிரிவு: Gr 5 / Gr 6 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-5-6.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-5-6.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-5-6.pdf

 

அதிமேற் பிரிவு: Gr 7 / Gr 8  students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-7-8.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-7-8.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-7-8.pdf

 

உயர் பிரிவு: Gr 9 / Gr 10  students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-9-10.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-9-10.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-9-10.pdf

 

 

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

 

Verification

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  4. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர், நவம்பர் (2022) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது.
  5. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் மற்றும் மோட்டர் அறை என்பன (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16.04.2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 5 மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் படிப்பு முடியும் வரை வேலை கிடைத்தபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். இரண்டு மாணவர்களிற்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக ரூபா 5,000 ஜுலை மாதம் /2023 தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

                    05.08.2023

 

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும். பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்), பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது நான்கு போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்
1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3.மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4.மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5.அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8)
6.உயர் பிரிவு (தரம் 9, தரம் 10)

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை பதிந்து சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக பின்வரும் விபரங்களைபதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name (முதல் பெயர்):
Last Name (கடைசி பெயர்):
தொலைபேசி இலக்கம்:
சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:
பங்குபற்றும் பிரிவு:
பங்குபற்ற விரும்பும் போட்டி:

மேற்படி போட்டிகளிற்கான ஆக்கம் கூடிய விரைவில் இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும் . கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ஆக்கங்களே போட்டிகளிற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்தமாக பிள்ளைகள் வரவேண்டும். வெளியிடப்படவுள்ள ஆக்கங்களை இவ்விணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2023” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

நன்றி

                    நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்.

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

 

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் சென்ற 5ஆம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான இளையோரின் ஈடுபாடு இம்முறை இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர்.

காலையிலிருந்து மாலை வரை பலதரப்பட்ட உணவு வகைகளும் தொண்டர்களினால் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு தொண்டர்களினால் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன.சிறப்பாக மச்ச கூழ், மரக்கறி கூழ், கொத்து றொட்டி ஆகியவற்றுடன் கனேடிய உணவு வகைகள தாராளமாகப் பரிமாறப்பட்டிருந்தன.

சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் பொரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்க்ப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். திரு.சிவநாதன் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு ஆதரவளித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனுசரணை வழங்கி உதவியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/Mp7HhL4jWmEEJJoPA

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside பூங்காவில் (Area 3 and Area 4) வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரை.மண்ணின் உணர்வோடு ஒன்றுகூடி மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்த்து உண்டு உரையாடி விளையாடி மகிழ்கின்ற நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு கனடா வாழ் காரைநகர் மக்களை அன்போடும் உரிமையோடும் கனடா-காரை கலாசார மன்றம் அழைக்கின்றது. அன்றைய தினம் மழையோ அதிக வெப்பமோ இன்றி சௌகரியமான சிறந்த காலநிலை நிலவுகின்றமை அவைருக்கும் மகிழச்சியளிப்பதாகும்.

எம்மண்ணின் பாரம்பரிய உணவுவகைகளுடன் கனேடிய உணவுகளும் பரிமாறப்படவுள்ளதுடன் சிறுவர்கள் இளையோர் முதியோர் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் குழுநிலைப் போட்டிகளான தாம்பிழுவைப்போர் தாய்ச்சி என்பவற்றுடன் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் வகையிலான சிறியோர் வளர்ந்தோர் பங்கேற்கும் விநோதஉடைப் போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போட்டிகளில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும் அதேவேளையில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் Tim Hortons Gift Card வழங்கப்படவுள்ளது.

பூங்காவில் அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பப்பெற்றிருந்தால் பூங்காவிற்கு வெளியே அயலிலுள்ள பாடசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை தரித்து விட்டு நடந்துவந்து நிகழ்விடத்தை அடையலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டுவதுடன் பூங்காவின் அனுமதிக்கப்படாத இடங்களில் உங்கள் வாகனங்களை தரிப்பதன் மூலம் காவல்துறையினதும் நகரசபை அலுவலர்களதும் தண்டப்பணத்திற்கான சிட்டையினை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

கனடா-காரை கலாசார மன்றம்.

 

 

திரு.இராமலிங்கம் மனோகரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/AUDIO-2023-08-01-22-47-59.mp3″ autoplay=”no”]

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்.

 கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2018ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2016, 2017ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2014, 2015ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2012, 2013ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்

10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2004 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
  4. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
19. முதியோர் மெதுநடை – ஆண்கள்
20. முதியோர் மெதுநடை – பெண்கள்

வினோத உடை போட்டி

  1. சிறுவர் (Under 18)
  2. பெரியோர் (Over 18)

 

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளதுபோட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடைஅணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                

BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

 

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 03.08.2023 வியாழக்கிழமைக்கு  முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

03.08.2023 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

 

CKCA GET TOGETHER 2023 VOLUNTEER REGISTRATION

 

Verification

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

 

காரை ஒன்றுகூடல் – 2023

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம்

காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை

கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் 2வது வரலாற்றுப் படைப்பான ஒருத்தி 2 என்ற திரைப்படம் சென்ற மாதம் திரையிடப்பட்டு அதன் ஊடாக ஒரு தொகைப் பணம் திரட்டப்பட்டிருந்தது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் இல்லாது வறிய நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் கனடா காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் திரைப்படக் காட்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை இம் மன்றம் உதவியுள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 13.06.2023 செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் உப தலைவர் இக்கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கனடா-காரை கலாசார மன்றம் பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்து வந்துள்ளதாகவும் சிறப்பாக 2006 ஆம் ஆண்டு ஆண், பெண் நோயாளர்கள் விடுதிகளிற்குத் தேவையான கட்டில்கள் ,மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை உதவியதுடன் இரு ஆண்டுகளிற்கு முன்னர் P.S.சுதாகரனின் ஒருத்தி 1 திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி உதவப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டது முதலாவது தொகுதி மருந்துகள் எனவும் அடுத்த தொகுதி மருந்துகள் தேவைப்படும்போது வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் சிறந்தமுறையில் சேவையாற்றி வருகின்ற வைத்திய அதிகாரி Dr.செந்தூரனதும் ஏனைய மருத்துவர்கள்,அனைத்து வைத்தியசாலை அலுவலர்களதும் சேவையினையும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினது சிறப்பான பணிகளையும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.நா.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன் கலைஞர் P.S.சுதாகரனும் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் மற்றும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்த திரு,வி.நாகேந்திரம், திரு. K.K.நாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

 

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரை மண் தந்த கலைஞ்ர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு Woodside Cinema (McCowan Rd & Finch Ave East) வில் திரையிடப்படவுள்ளது.

கனேடிய கலையுலகு அறிந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்களினால் தயாரித்தும் இயக்கியும் வெளியிடப்பட்ட ஒருத்தி-1, ஒருத்தி – 2 ஆகிய இரு திரைப்படங்களுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவினைப் பெற்று மகத்தான வெற்றியடைந்திருந்தன. இதன்மூலம் கனேடிய தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் சாதனையை ஏற்படுத்திய பெருமையைப் பெற்ற கலைஞரான P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படத்தை பார்க்கத் தவறிய காரை உறவுகளிற்கு பெரு வாய்ப்பாக இத்திரையிடல் நிகழ்வு அமைகின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இத்திரைப்படத்தினை பார்வையிடுவதன் ஊடாக எமதூரின் உன்னதமான ஒரு கலைஞரை ஆதரித்து ஊக்குவிப்பதுடன் நலிவுற்ற வறிய மக்களிற்கு வைத்திய சேவையை வழங்கும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் மனிதாபிமானப் பணியிலும் பங்குகொள்ள வருமாறு காரை வாழ் உறவுகளை கனடா-காரை கலாசார மன்றம் அன்போடு அழைக்கின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416 418 5697

இத்திரைப்படக்காட்சி தொடர்பான விளம்பரப் பிரசுரத்தினை கீழே பார்வையிடலாம்.

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான் முன்னோடிப் பரீட்சை சென்ற 16-04-2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். காரைநகர் இந்துக் கல்லூரி யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களின் முழுமையான உதவியுடனும் பங்களிப்புடனும்; நடாத்தப்பட்டிருந்த இம்முன்னோடிப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.

 

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 03.05.2023 புதன்கிழமை அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!