முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த

முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

கனடா-காரை கலாசார மன்ற வரலாற்றில் முக்கியமான மைல் கல் முதலாவது காரை வசந்தத்தின் வெற்றி எனலாம். 2000ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி கென்னடி & லோறன்ஸ் சந்திப்பிலுள்ள கல்லூரி மண்டபத்தில் கனடா-காரை கலாசார மன்றத்தின் முதலாவது “காரை வசந்தம்” வீச ஆரம்பித்தது. கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் அதன் தலைவராகவும் பணியாற்றியிருந்த அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களது தலைமையில் அமைந்திருந்த நிர்வாகத்தின் பெருமுயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்த முதலாவது காரை வசந்தமானது பாராட்டும்படியான சிறந்த கலை நிகழ்வுகளுடன் மண்டபம் நிறைந்த காரை மக்களுடன் பெரு வெற்றி விழாவாக அமைந்திருந்தது. முதலாவது காரை வசந்தத்தத்தின் இந்த வெற்றியானது பெரும் ஊக்குவிப்பாகவும் தொடர்ந்து இவ்விழாவினை முன்னெடுத்து நடாத்துவதற்கான அடித்தளமாகவும் அமைந்துவிட்டது எனலாம். காரை வசந்தம் 22வது ஆண்டாக நடைபெறவிருக்கும் இத்தருணத்தில் முதலாவது காரைவசந்தத்தின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்: