எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில்
காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம்
கொழும்ப றோட்டரிக் கழகத்தினால் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது.
காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00 மணிமுதல் இடம்பெற உள்ள இந்தப் பரிசோதனை முகாமில் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதுடன் அதில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கண்சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.
கண் பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை காரைநகர் அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ளதுடன் காரைநகர் மக்களை இப்பரிசோதனை முகாமில் கலந்து பயன்பெறுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் கேட்டுள்ளார்.
காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆலய குருமார்களுக்கும் மங்களவாத்தியக் கலைஞர்களுக்குமான ஆறு அக்கரகாராக்களின் (இல்லங்கள்) திறப்பு விழா நாளை மறுதினம்(09.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற உள்ளது.
சுமார் பத்து மில்லியன் ரூபா செலவில் டி.எம்.சுவாமிநாதனின் ஒத்துழைப்படன் முன்னாள் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராசா பரமேஸ்வரனின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட இந்த வீடுகளின் திறப்பு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் இதில் சமயப் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளதாக ஆலய ஆதீனர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.
காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழக 10ம் வருட பூர்த்தியும் வருடாந்த தைப்பொங்கல் விளையாட்டு விழா அனுசரணையாளர்கள்:
நந்தகுமார் (அவுஸ்ரேலியா)
பரமநாதர் தவராஜா போசகர் காரை நலன்புரிச்சங்கம் (லண்டன்)
சக்திமேம்பாட்டு நிலையம்
தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் (633 Fulton Street,Medford,MA.USA)
தர்மலிங்கம் புஸ்பலிங்கம் (பழையகண்டி)
காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச முதியோர்,மாற்று வலுவுடையோர் தின விளையாட்டு விழா 2018 , 03/12/2018 திங்கட்கிழமை மாலை2:00 மணிக்கு காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில்.தலைவர் திருமதி.சு.உஷா (பிரதேச செயலர்,பிரதேச செயலகம்,காரைநகர்)அவர்களும் பிரதம விருந்தினர் திரு.வே.ஸ்ரீகுகன் (நிலைய முகாமையாளர்,தொழிற்பயிற்சி நிலையம் காரைநகர்) அவர்களும் சிறப்பு விருந்தினர்கள் திரு.வ.செல்வம் (மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்,யாழ்ப்பாணம்) மற்றும் திரு.நா.ராஜமனோகரன் (தலைமைப்பீட சமூக சேவைகள் அலுவலர் வடமாகாணம்)ஆகியோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
காரைநகர் களபூமியில் காரைநகர் பேரூந்து சாலைக்கு அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் 02/12/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றன.இதில் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் அவர்களும்,காரைநகர் கடற்படை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகளும்,பொதுமக்களும் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.