காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில்

காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கொழும்ப றோட்டரிக் கழகத்தினால் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில்  காலை 9.00 மணிமுதல் இடம்பெற உள்ள இந்தப் பரிசோதனை முகாமில் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதுடன் அதில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கண்சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.

கண் பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை காரைநகர் அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ளதுடன் காரைநகர் மக்களை இப்பரிசோதனை முகாமில் கலந்து பயன்பெறுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் கேட்டுள்ளார்.