Category: களபூமி கலையகம்
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரை மற்றும் அவர் பாடியுள்ள பாட்டும் இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது!
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரை
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் பாடிய பாட்டு
களபூமி கலையகத்தின் சரித்திரத்தில் மீண்டுமொரு பக்கம்
18-01-2015 ஞாயிற்றுக்கிழமை கலையக மாணவர்களும் பெற்றோர்களும் சேர்ந்து தைப்பொங்கல் விழாவினைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் கொண்டாடினார்கள்.
விழாவினை நான்கு வெளியூர் அன்பர்கள் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
விழா பொங்கலுடன் ஆரம்பித்து தலைமையுரையின் பின் மாணவர்களின் வரவேற்பு நடனமும் சங்கிதக் கச்சேரியும் நடைபெற்றன. அவற்றினைத் தொடர்ந்து சென்ற வருடம் சித்தியடைந்த (மாகாண ரீதியுட்பட்ட) கலையக மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்பு வந்திருந்த விருந்தினர்கள் சிறார்களின் திறமைகளை நன்கு இரசித்துப் பாராட்டியது மட்டுமன்றி தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரியப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் பேசும்பொழுது கலை, சமயபாடங்கள் போன்றவற்றுடன் விஞ்ஞானம், கணிதம், மும்மொழிகள் ஆகியவற்றிற்குத் தரவேண்டிண்டிய முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்தனர்.
பொங்கல் அமுது வழங்கியபின் விழா இனிதே நிறைவேறியது. இவ்விழா சிறப்பபுடன் நடைபெற உதவிய நிர்வாக அங்கத்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் முக்கியமாக வெளியூர் நண்பர்கள் அனைவருக்கும் களபூமி கலையகத்தின் சார்பாக நன்றிகலந்த பாராட்டுக்கள்.
தகவல்
சிவா தி மகேசன்