ஈழத்துச் சிதம்பரத்தில் அக்கரகாராக்களின் (இல்லங்கள்) திறப்பு விழா 09.12.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆலய குருமார்களுக்கும் மங்களவாத்தியக் கலைஞர்களுக்குமான ஆறு அக்கரகாராக்களின் (இல்லங்கள்) திறப்பு விழா நாளை மறுதினம்(09.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற உள்ளது.

சுமார் பத்து மில்லியன் ரூபா செலவில் டி.எம்.சுவாமிநாதனின் ஒத்துழைப்படன் முன்னாள் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராசா பரமேஸ்வரனின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட இந்த வீடுகளின் திறப்பு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற உள்ளதாகவும் இதில் சமயப் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளதாக ஆலய ஆதீனர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.