Tag: காரைச் செய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியின் காரைநகர் கிளையினால் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் பிரதேச மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 24ம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய சேமிப்பு வங்கிக் காரைநகர் கிளையில் இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர் அ.கெங்காதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலருமான  ப.விக்னேஸ்வரன்,காரை இந்துக்கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

தேசியமட்டப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

இலங்கை "வாழ்வின் எழுச்சி" திணைகளத்தின் கெக்குலு சிறுவர் கழகங்களுக்கு இடையிலான 2014இம் ஆண்டுக்கான தேசிய மட்ட போட்டிகள் 26.07.2015 கொழும்பில் நடைபெற்றன.

இதில் கிராமிய நடனத்திற்கான போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

தேசிய மட்டபோட்டியில் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றமை கல்லூரி வரலாற்றில் இது முதல் தடைவ என்பது குறிப்பிட தக்கதாகும்.

தேசிய மட்டத்திலான இதே போட்டியில் 2012ஆம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்கு பயிற்ச்சிகளை வழங்கி திறமையான நெறியாளுகை மேற்கொண்ட கல்லூரியின் நடனத்துறை ஆசிரியை திருமதி.சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபரும் கல்லூரி சமூகமும் தங்கள் மனமுவந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியரும் படத்தில் காண்கின்றோம்.

image001

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

Memento

மேற்படி விழா 17.07.2015 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சபாநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. S. கணநாதன் (yarltonian, உரிமையாளர் Quency Distributors) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. S. அருளானந்தசிவம்(UK), திரு. S .செல்வரத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தமது உரையில் இன்றைய மாணவர் பாராட்டு விழாவின் நிதி அனுசரணையாளராக செயற்பட்ட திரு.S. கணநாதன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பிரதவிருந்தினர் தனது உரையில் தீவகக்கல்வி வலயத்தில் 70.4% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் படிக்க தகைமை பெற்று 2014ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றமையை பாராட்டினார். தொடர்ந்து அவர் தனது உரையில் 2014 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியிலே அதிகூடிய மாணவர் எண்ணிக்கை (தீவக வலயத்தில்) சித்தி அடைந்தமையும் அவர் குறிப்பிட்டு தேசிய பரீட்சைகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 1ம் இடத்தில் இருப்பதையிட்டு அவர் அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார். சென்ற முதலாம் தவணைப் பரீட்சையில் (2015) 90 உம் அதற்கு மேல் சராசரி எடுத்த மாணவர்களுக்குமான Super  Merit என்ற Medal அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் க. பொ.த சா/த மாணவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

க. பொ. த சா/த பரீட்சை 2014 இல் 5A உம் அதற்கு மேல் சித்திகளைப் பெற்ற பின்வரும் மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி(Memento) கௌரவிக்கப்பட்டார்கள்.

1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டத்திலான முப்பாய்ச்சல் போட்டிக்குத் தெரிவான சி.கோகுலனுக்குப் பாராட்டு

 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகிய செல்வன். சிவசக்திவேல் கோகுலன், செல்வி.A.அமிர்தா, செல்வன்.K.விநோதன் ஆகியோருக்கான பாராட்டு விழா 14.07.2015 அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.செல்லையா கங்காதரன் அவர்களும் கோட்டக்கல்விப்பணி மனை அலுவலரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமாகிய திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் சமூகமளித்திருந்தனர்.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வு – 2015 நிகழ்வில் 19 வயது ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன்.சிவசக்திவேல் கோகுலன் 12.91M நீளம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். இவர் தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகியிருந்தார். 

அத்துடன் செல்வன் K.விநோதன் யாழ் மாவட்டபாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்றும் செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்றும் தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர். 
தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகிய கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சோந்த மேற்படி மூன்று மாணவர்களுக்குமான பாராட்டு நிகழ்வே அண்மையில் கல்லாரியில் நடைபெற்றிருந்தது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பிலும் பாராட்டுப் பரிசு வழங்கப்பட்டது. 

சாதனை படைத்து எமது ஊருக்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் விiளாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு. இன்னாசிமுத்து. அன்ரன்விமலதாஸ் அவர்களும் மற்றும் தனிப்பாட்டு அறிவிப்பாளர் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களும் ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபரும் பராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். 

நிகழ்வில எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் பூங்காவனத்திருவிழாவில் இடம்பெற்ற பட்டிமன்றம் 2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் கிழவன்காடு கலா மன்றம் ஆடிப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இசைப்பேருரை நிகழ்வினை கலா மன்ற மனோன்மனி கலையரங்கில் நடாத்தியது.இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி இசைப் பேருரையை நிகழ்த்தினார்

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 15.07.2015 இடம்பெற்ற கொடியிறக்கக் காட்சிகளை இங்கே காணலாம்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 15.07.2015 இடம்பெற்ற தீர்த்தோற்சவக் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 14.07.2015 செவ்வாய்கிழமை இடம்பெற்ற இரவுத் திருவிழாக் காட்சிகள்.

தேசிய மட்டப்போட்டிகளுக்குத் தெரிவாகி கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மூன்று மாணவர்கள் சாதனை

gold_medals

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட மட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். 


மாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வன் K.விநோதன் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


இதேவேளையில், செல்வி. S.புருசோத்தமி வடமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 


வெற்றி பெற்ற மாணவர்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்

 

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை

p.g.101ST

2014ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின  அறிக்கை

 

நூற்றாண்டு கடந்து கல்விப்பணியாற்றி வரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தனது 127 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2014ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.

இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவிக்க, பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பெருமதிப்புக்குரிய யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வாழ்நாள் பேராசிரியர் வைத்திய கலாநிதி திரு சி. வை. பரமேஸ்வரன் அவர்களே! சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. தி. ஜோன் குயின்ரஸ் அவர்களே! கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ஆ. ராசேந்திரன் அவர்களே, நிறுவுநர் நினைவுப் பேருரையை ஆற்ற வருகை தந்திருக்கும் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சி. நடராசா அவர்களே,

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களே,

தீவக வலயக்கல்விப்பணிமனையைச் சார்ந்த கல்வி அதிகாரிகளே,

ஓய்வு நிலை அதிபர்களே,

அயற்பாடசாலைகளின் அதிபர்களே, ஆசிரியர்களே,

எமது பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்களே,

பாடசாலை அபிருத்திச்சங்க உறுப்பினர்களே,

பாடசாலை அபிருத்திக்குழு உறுப்பினர்களே,

பழையமாணவர் சங்க உறுப்பினர்களே,

பெற்றோர்களே, நலன்விரும்பிகளே,

எனது அன்பான ஆசிரியர்களே,

கல்விசாரா ஊழியர்களே,

அன்புநிறை மாணவச்செல்வங்களே,

உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய வணக்கங்களைக் கூறிவரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றைய பரிசளிப்பு நன்னாளில் எமது மாணவச்செல்வங்களுக்கு பரிசில்களை வழங்கிப் பாராட்ட வருகை தந்திருக்கும் காரை மண்ணின் மைந்தனும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடப் பீடாதிபதியுமான வாழ்நாள் பேராசிரியர் வைத்திய கலாநிதி திரு சி. வை . பரமேஸ்வரன், பணிப்பாளர் Human Resources & Training, Northern Centerl Hospitals Pvt. Ltd. அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்தமையால் எம் கல்லூரி அன்னை பெருமை அடைகின்றாள. நீங்கள் உடற்கூற்றியல் துறையில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தiயும், கலாநிதி பட்டத்தையும் பெற்று உடற்கூற்றியல் சிரேஸ்ட விரிவுரையாளராகவும், மருத்துவ பீட பீடாதிபதியாகவும், ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் பதில் துணைவேந்தராகவும் அதியுன்னத பதவி வகித்துள்ளீர்கள். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பட்டப்பின் படிப்புகள் துறையின் முகாமைத்துவ குழுவின் அங்கத்ததுவராகவும் செயற்பட்டதுடன,  மருத்துவ கல்வி அலகின் பாடத்திட்ட குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளீர்கள.; மேலும் யாழ் பல்கலைக்கழக ஆளணிவள மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றியதுடன் தங்களுடைய சேவைக் காலத்தில் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் IBRO  Fellowship, WHO Fellowship போன்ற புலமைப்பரிசில்களையும் பெற்றுள்ளீர்கள். ஓய்வின் பின்னரும் மருத்துவ விஞ்ஞானம்PATHE Academy  கொழும்பு பீடாதிபதியாகவும், Para Medical studies, வெற்றிவேல் ஞாபகார்த்த பணிப்பாளராகவும் கடமையாற்றும் நீங்கள் மருத்துவ உலகின் சிகரமாக திகழ்வது கண்டு எமது காரை மண் பெருமை கொள்கிறது. நீங்கள் மட்டுமின்றி உங்கள் பிள்ளைகளான Dr.P.ஆனந்தன் Dr.A.சியாமளா ஆகியோரும் மருத்துவத் துறையில் கால் பதித்து சேவையாற்றுவது மனமகிழ்வைத் தருகின்றது. உங்கள் கரங்களால் எமது கல்லூரி மாணவர்கள் இன்றைய பரிசில் தின நன்நாளில் பரிசில்களை பெறும் பேறு பெற்றுள்ளார்கள். இன்றைய நாளில் எமது மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்க வருகை தந்தமையையிட்டு நன்றிகளை தெரிவிப்பதோடு, தாங்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ எமது கல்லூரிச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றேன்.

தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளரும், தீவக மண்ணின் மைந்தனுமான பெரு மதிப்பிற்குரிய திரு. தி .ஜோன் குயின்ரஸ் அவர்களே! இவ்விழாவிற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கலைப்பட்டதாரியான தாங்கள் கல்வியியல், பண்பாட்டியல், தமிழ் போன்ற துறைகளில் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்று சிறந்த கல்விமானாக உங்களை உயர்த்திக் கொண்டீர்கள். உங்களின் திறமையினால் ஆசிரியராக, விரிவுரையாளராக கடமையாற்றினீர்கள். கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்த்தப்பட்ட நீங்கள் பின் தீவகக் கல்வி வலயத்தில் மாணவர் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினீர்கள். உங்களின் சேவைத்திறமையால் தீவகக் கல்வி வலயத்தின் வலயகல்விப்பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு தீவகச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையை வழங்கி வரும் நீங்கள் இன்றைய பரிசில் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பதில் எம்கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வடைகின்றது. உங்களின் இக் கல்விப்பணி எமது தீவக வலயத்தின் உயர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

அன்புக்கும் பெரு மதிப்பிற்கும் உரிய ஓய்வுநிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு. ஆறுமுகம் ராஜேந்திரன் அவர்களே எம்கல்லூரியின் வரலாற்றுப் பெருமைமிக்க பரிசில்தினவிழாவில் தாங்கள் 37 ஆண்டுகள் கல்விச்சமூகத்திற்காக ஆற்றிய அளப்பெரும் பணியை மதித்து தங்களின் 60ஆவது அகவையில் தங்களை கௌரவிப்பதில் எமது கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வடைகின்றோம். நீங்கள் தீவக மண்ணிற்கும், வடமாகாணக் கல்விச் சமூகத்திற்கும் ஆற்றிய பணி மகத்தானது, போற்றுதற்குரியது. கலைமாணிப்பட்டத்தையும், கல்விமுதுமாணிப் பட்டத்தையும் பெற்ற நீங்கள் 1977ம் ஆண்டு இலங்கை ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டீர்கள். நீங்கள் ஆசிரியராக நு/கோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, பின் யா/கட்டைவேலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றினீர்கள். இக்காலத்தில் கல்விநிர்வாகசேவைக்கு தெரிவு செய்யப்பட்டு 1990ம் ஆண்டில் வடமராட்சிக் கல்வி வலயத்தில் கல்வி நிர்வாகப் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றிPர்கள். தொடர்ந்து கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்விவலயங்களில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் பின் தீவகம், வலிகாமம் கல்விவலயங்களில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினீர்கள். அதன் பின்னர் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றிய காரணத்தால் வடமாகாணக்கல்விக் கூடங்களின் சிகரமான மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மாகாணக்; கல்விப்பணிப்பாளராகவும் செவ்வனே கடமையாற்றி 2015 மார்ச் 15ஆம் நாள்60ஆவது அகவையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றீர்கள். தீவகக் கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும், வடமாகாணக கல்வித் திணைக்களத்தில் மாகாணக்; கல்விப் பணிப்பாளராகவும்; நீங்கள் பணியாற்றிய காலம் எமது பொற்காலமாகக் கருதுகின்றோம். உங்களின் சுறுசுறுப்பும், கடமையுணர்வும் எம்எல்லோரதும் பணிக்கு நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் ஓய்வுக்காலத்தில் அன்பு மனைவி சறோஜினி ராஜேந்திரன் (நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர்) அவர்களுடனும், பாசமிகு பிள்ளைகள் திருமதி கீர்த்தனா திவாகர் (பேராதனைப்பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரி), மற்றும் செல்வி சகானா ராஜேந்திரன் (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி மாணவி) ஆகியோருடனும் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்.

பாடசாலை விபரம்

1AB தரத்தைச் சேர்ந்த 1000 பாடசாலை வகுதிக்குட்பட்ட தரம் 6-13 வரையான வகுப்புகளைக் கொண்ட காரைநகர்ப் பிரதேசத்தின் வளம்மிக்க ஓர் பாடசாலையாகவும் தீவகக் கல்வி வலயத்தின் முதன்மைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது. கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் 3 சமாந்தர வகுப்புகளையும், உயர்தரத்தில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழினுட்பப் பாடத்துறைகளையும் கொண்டு சிறப்பாக இயங்குகின்றது.

ஆளணி விபரம்

1. மாணவர் விபரம்

தரம் 6-13 வகுப்பு வரை கனிஸ்ட இடைநிலைப்பிரிவில் 297 மாணவர்களும், சிரேஸ்ட இடைநிலைப் பிரிவில் 268 மாணவர்களுமாக மொத்தம் 565 மாணவர்கள் கற்றனர்.

2. ஆசிரியர் விபரம்

2014ஆம் ஆண்டில் 38 ஆசிரியர்கள் இக்கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். இவர்களில், 02 முதுதத்துவமானி, 01 முதுவிஞ்ஞானமானி, 01 முதுகல்விமானி;, 02 முதுகலைமானி பட்டஆசிரியர்களும், 03 கலைமாணி, 04 விஞ்ஞானமானி, 05 வணிகமானி, 06 நுண்கலைமானி பட்டம் பெற்ற ஆசிரியர்களும், 5 தேசிய கல்வியியல் டிப்ளோமா ஆசிரியர்களும, 9 விசேட பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர்.

இவர்களில் 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் 4 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் அவர்களின் விபரம்,

இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள்

திரு.ந.விஐயகுமார் – உபஅதிபர்

திருமதி ச. உலககுருநாதன் – தமிழ்

திருமதி சாமினி சிவராஜ் – சுகாதாரம்

திரு வே சிவனேசன்; – நூலகர்

இவர்கள் இப் பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள். திரு.ந.விஜயகுமார் உப அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் தனது முகாமைத்துவப் பணிகளை ஆற்றினார். அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகம் 5ளு முறைக்குட்படுத்துவதில் அவருடைய செயற்றிறன் அளப்பரியதாகக் காணப்பட்டது. அவரிடம் வழங்கப்படும் எப்பணியாக இருப்பினும் அவற்றை மிகவும் சிறப்பாகவும் குறித்த நேரத்திலும், செம்மையாகவும், நிறைவேற்றும் பண்புமிக்கவர். தாமாக முன்வந்து கடமைகளை நிறைவேற்றுவார். முகாமைத்துவக் கடமைகளுடன் நின்றுவிடாது கற்பித்தற் பணியையும் மாணவர்கள் எளிதில் விளங்கக் கூடியவகையில் விளக்கும் ஆற்றல் அவரிடம் காணப்பட்டது. நீங்கள் ஆற்றிய சேவைக்கு கல்லூரி சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சென்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்றி பல்புகழ்களையும் பெற வாழ்த்துகின்றேன்.

திருமதி ச உலககுருநாதன் பாலாவோடை இ.த.க.பா. யின் அதிபராகப் பதவியேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். அவர் இப்பாடசாலையில் கற்பித்த காலத்தில் மெல்லக் கற்கும் மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டவராகக் காணப்பட்டார். தமிழ்ப் பாடத்துடன் வழிகாட்டல் ஆலோசனை சேவைப் பொறுப்பாசிரியராகவும் பொறுப்பேற்று கடமையை சிறப்புற மேற் கொண்டார். திருமதி சா. சிவராஜ் அவர்கள் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் வருடாந்த விளையாட்டுவிழாவை சிறப்பாக ஒழுங்குபடுத்தி செயற்படுத்தி வந்ததுடன் மட்டுமல்லாது, மாணவர்களை மெய்வல்லுநர், உள்ளக விளையாட்டு, பெருவிளையாட்டுகளிலும் பயிற்சிகளை வழங்கி வலய மட்டம், மாகாணமட்டங்களில் பங்குபற்றச் செய்து பல சாதனைகளை பாடசாலைக்குப் பெற்றுத் தந்துள்ளார். அவ்ஆசிரியரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகி;ன்றேன். திரு வே. சிவனேசன் அவர்கள் நூலகப் பொறுப்பாசிரியராகவும், உயர்தர மாணவர் ஒன்றியப் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டுவந்தார். அவ்ஆசிரியரும் சென்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்ற ஆண்டவன் அருள்புரிவாராக.

திரு.த.பரமசாமி ஆய்வுகூட உதவியாளராக 10 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அலுவலக உதவியாளர் இல்லாத நிலையிலும் அக்கடமையையும் இணைத்து மேற்கொண்டார். அவர் தனது ஓய்வுக்காலத்தில் நோய்நொடியின்றி சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

புதிதாக இணைந்து கொண்ட ஆசிரியர்கள்

2014 ஆம் ஆண்டில் எமது பாடசாலைக்கு 08 ஆசிரியர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். இவர்களில்

1. திருமதி.தயாழினி, ஜெயக்குமார் – வர்த்தகப் பட்டதாரி

2. திருமதி புஸ்பரஞ்சினி கம்சன் – வர்த்தகம் விசேட பயிற்சி

3. செல்வி சிவரூபி நமசிவாயம ; – சைவசமயம் விசேட பயிற்சி

4. திருமதி கவிதா சந்திரமோகன் – வரலாறு விசேட பயிற்சி

5. திருமதி சந்திரகலா தவசீலன் ;- சங்கீதம்-(தே.க.டிப்)

6. திரு இராசரத்தினம். வசிகரன் – சித்திரம் விசேட பயிற்சி (ப.நே)

7. திரு. இன்னாசிமுத்து. அன்ரன்விமலதாஸ் – உடற்கல்வி விசேட பயிற்சி

8. திருமதி. உஷா. யோகேந்திரன் – ஆங்கிலம்(தற்காலிக இணைப்பு)

புதிதாக எமது கல்லூரிக் குடும்பத்தில் இணைந்து கொண்ட இவ்வாசிரியர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.

2014 ஆம் ஆண்டில் எமது கல்லூரி ஆசிரியர் திருமதி பி.தனம் கல்வி முதுமாணிப்பட்டத்தைப் பெற்று தனது வாண்மைத் தகைமையை வளர்த்துக்கொண்டார். அவரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

கல்விசாரா ஊழியர்கள்

திரு. ஆ. தியாகலிங்கம் பாடசாலை இரவு நேரக் காவலாளியாகவும், திரு.ஐ.அமுதினகுமார் பகல் நேரக் காவலாளியாகவும் திரு. மு. சிவனேஸ்வரன் சுகாதாரத் தொழிலாளியாகவும் கடமை புரிந்தனர். எமது பாடசாலைக்கு அலுவலகப் பணியாளர் இல்லாத நிலைமையிலும் திரு.த.பரமசாமி, திரு. மு. சிவனேஸ்வரன் ஆகியோர் தமது கடமைகளுடன் அலுவலகப் பணியாளர் கடமைகளையும் இணைத்து நிறைவு செய்தனர். அவ்வகையில் இவர்களின் கடமையுணர்வையும் அர்ப்பணம் மிக்க சேவையையும் இச்சமயத்தில் பாராட்டுகின்றேன்.

இவர்களுடன் கல்விசாரா ஊழியர்களாக தற்காலிகமாக இணைந்து கொண்ட,

திரு.ஐ.அமுதினகுமார்

திரு.ம.மயூரன்

திருமதி பி.குருதர்சினி ஆகியோரையும் வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்வடைகின்றேன்

இவர்களுடன் எமது பாடசாலையின் பழைய மாணவியான செல்வி சி. அமுதா அலுவலக முகாமைத்துவ உதவியாளருக்கான கடைமைகளைச் சிறப்பாக ஆற்றி வருந்தார். செல்வி சோபனா, மற்றும் செல்வி யோ.கஜந்தினி தேசிய தொழிற்பயிற்சி நி;லையத்தில் பயிற்சியை முடித்தபின் 6 மாதங்கள் எமது பாடசாலையில் பயிலுநராகக் கடமையாற்றினாரகள்;. செல்வி யோ. கஜந்தினி பல்லூடக அறை உதவியாளராகவும், செல்வி விம்சியா நூலக உதவியாளராகவும் கடமையாற்றினார்கள். இவர்களுடைய தன்னலமற்ற சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

பௌதிகவளம்

தேவையான பௌதிக வளங்களை தன்னகத்தே கொண்ட வளம்மிக்க பாடசாலையாகும்.

1. பிரார்த்தனை மண்டபம்

2. அழகியல்பாட அறைகள்( நடனம், நாடகம், சித்திரம், சங்கீதம்)

3. விஞ்ஞான ஆய்வு கூடங்கள்( பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், பொது விஞ்ஞானம்)

4. பல்லூடக அறை – பல்லூடக எறியி, மேந்தலை எறியி, வழுக்கி எறியி, தொலைக்காட்சிப் பெட்டி, கணனி, ரேடியோ ஆகிய இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுள்ளது.

5. செயற்பாட்டறை

6. டியிற்றல் நூலகம் 

7. நூலகம் – 6235 வரையிலான புத்தகங்களைக் கொண்டுள்ளது.

8. புவியியல் அறை

9. மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடம் ( கணிதம், மொழி, த.தொ.நு, நனச அறைகளைக் கொண்டுள்ளது)

10. வியைளாட்டு மைதானம் 

போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வளங்கள் யாவும் முழுமையாக மாணவர்களின் கற்றல் – கற்பித்தற் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பாடவிதான செயற்பாடுகள்

2014இல் கல்வித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 43.4% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் நாடகமும் அரங்கியலும, நடனம், புவியியல் ஆகிய பாடங்களில் 100% சித்தியையும், தமிழ், சைவசமயம், வணிகக்கல்வி, தகவல்தொழினுட்பம, சகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களில் 80% தத்திற்கு மேற்பட்ட சித்தியும் பெற்றுள்ளார்கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், குடியுரிமைக் கல்வி, சங்கீதம் ஆகிய பாடங்களில் கட்ந்த வருடத்திலும் சித்தி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 72.3% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். கலை, வர்த்தகத் துறைகளில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 13பாடங்களில்; இந்துநாகரிகம், சங்கீதம், சித்திரம், நடனம், நாடகமும் அரங்கியலும்இ வரலாறு, மனைப்பொருளியல், வணிகம், கணக்கியல் ஆகிய 9 பாடங்களில்100% சித்திகளை பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

பொதுப்பரீட்சைகளின் பெறுபேறு

8A, B எனும் சிறப்பு பெறுபேற்றை க.பொ.த சாதாரண தரத்தில் செல்வன் தியாகராசா பார்த்தீபன் எனும் மாணவன் பெற்றுக் கொண்டார். க.பொ.த. உயர்தரத்தில்; கலைப்பிரிவில் செல்வி கிருஸ்ணமூர்த்தி சிவநிறஞ்சனா 2A ,C எனும் பெறுபேற்றையும், செல்வி ரேணுகா.கதிரமலை A, 2B எனும் பெறுபேற்றையும் வர்த்தகப்பிரிவில் செல்வி கனகரட்ணம் பானுஜா 2A  B பெறுபேற்றைப்பெற்று மாவட்டமட்டத்தில் 17ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றேன. அத்துடன் இவ் வருடம் ஆறு மாணவர்கள் கலைத்துறை மற்றும் நுண்கலைத் துறைக்கு தெரிவாகி பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்

1. விளையாட்டுத்துறை

எமது கல்லூரியின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் விளையாட்டுத் துறைகாத்திரமான சாதனைகளைப் புரிந்து வருகின்றது. உதைபந்தாட்டம், பூப்பந்து;, கரப்பந்து, வலைப்பந்து, கபடி, சதுரங்கம், எல்லே போன்ற பெருவிளையாட்டுக்களிலும், மெய்வல்லுநர் நிகழ்வுகளிலும் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண நிலைகளை தனதாக்கிக் கொள்ளுமளவிற்கு உன்னத வளர்ச்சி பெற்றுள்ளது. வருடாந்த விளையாட்டுவிழா திருமதி சா.சிவராஐ; ஆசிரியரின் நெறியாள்கையில் விழாக்குழுவினர் இணைந்து 100மூ மாணவர்களும் பங்குபற்றும் வகையில் சிறப்பாக செயற்படுத்தியிருந்தனர். இவ்விழாவிற்கு கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.ஸ்ரீ.பாஸ்கரன் (பிரான்ஸ்), திரு.ச.சிவஞானம் (தொழிலதிபர்) ஆகிய இருவரும் முழுமையான அனுசரணை வழங்கியிருந்தனர்.

2. அழகியல்துறை

இசை, நடனம், நாடகம், சித்திரம் ஆகிய அழகியற்துறைகள் சிறப்பாக தமது கலைத்துறை ஆற்றல்களை வெளிப்படுத்துமுகமாக பாடசாலையின் பல்வேறு நிகழ்வுகளிலும் தங்களது ஆற்றுகைகளை மேடையேற்றி வருகின்றார்கள். பாடசாலை விழாக்களை மெருகூட்டுவதுடன், பிரதேச செயலகம், ஆலயங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கும் தமது கலைப்படைப்புகளை வழங்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் பிரதேச கலாசார விழாக்களில் தமது ஆற்றுகைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டம் வரை தமது சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றினுர்டாக பிரதேச கலை, கலாசார, பண்பாடுகளையும் பேணிக்காத்து வருகின்றனர். இவற்றை நெறிப்படுத்தும் அழகியற்துறை ஆசிரியர்களைப் பாராட்டுகின்றேன்.

3. மன்றங்கள்

மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆளுமையையும் விருத்தி செய்வதற்கு மன்றங்கள் உறுதுணையாய் உள்ளன. மன்றச் செயற்பாடுகள் மூலம் பெருந்தொகையான மாணவர்கள்; நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடியவாறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன்கள், ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பின்வரும் மன்றங்கள் கல்லூரியில் செயற்பட்டு வருகின்றன.

1. இந்துமாமன்றம்

திருமதி சங்கீதா பிரதீபன் பொறுப்பாசிரியரின் நெறிப்படுத்தலில்; வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மற்றும் தைப் பொங்கல் விழா, ஆடிப்பிறப்பு, குருபூசை தினங்கள், வாணிவிழா ஆகியவற்;;றை சிறப்பாகக் கொண்டாடியதுடன் நாளாந்தம் காலை நற்சிந்தனை, குறழமுதம், செய்தித்தாள் கண்ணோட்டம் போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றனர். அத்துடன் சைவபரிபாலன சபைப் பரீட்சை, மணிவாசகர் சபைப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்துகின்றனர். இவ்வருடம் செல்வி க.அபிராமி, செல்வி பா.குலமதி ஆகிய மாணவர்கள் மணிவாசகர் சபைப் பரீட்சையில்; தங்கப்பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2. உயர்தர மாணவர் மன்றம்

பொறுப்பாசிரியர்களான திரு.இ.இராஜகோபால், திருமதி.பி.தனம்; ஆகியோரின் வழிகாட்டலில் சிறப்பாகச் செயற்பட்டதுடன் உயர்தர மாணவர் ஒன்று கூடல் மற்றும் மதியபோசன நிகழ்வையும் ஆசிரியர்தின நிகழ்வையும்; சிறப்பாக ஒழுங்குபடுத்தி; நிகழ்த்தினர். ஒன்றியத்தினர் இணைந்து ஆசிரியர் ஓய்வறைக்கு வர்ணம் திட்டற் பணியையும் சிறப்பாக மேற்கொண்டனர்.

3. சுகாதார மன்றம்

சிரமதானம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மற்றும் கருத்தமர்வுகளை நடத்தியதுடன் மாணவர் சுய சுகாதாரம் பேணுதலிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவற்றைவிட கவின்கலை மன்றம், கணித விஞ்ஞான மன்றம், சமூக விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம் ஆகியன கனிஷ்ட பிரிவு சிரேஷட பிரிவு என தனித்தனியாக செயற்படுவதுடன் மாதம் ஒரு தடவை என்ற வகையில் சிரேஷ்ட பிரிவு வியாழக்கிழமைகளிலும், கனிஷ்ட பிரிவு வெள்ளிக்கிழமைகளிலும் ஒன்றுகூடி அவ்வப் பொறுப்பாசிரியர்களின் நெறிப்படுத்தல்களுக்கமைய மாணவர் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் பாடரீதியாக தமிழ்த்தினப் போட்டி, கணித விநாடிவினாப்போட்டி, விஞ்ஞான விநாடிவினாப்போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் மாணவர்களை கோட்ட, வலய மற்றும மாகாண மட்டங்களில் பங்குபற்றச் செய்து சாதனைகளைப் புரிந்துள்ளனர்.

விஞ்ஞான மன்றம் விஞ்ஞான தின நிகழ்வையும், ஆங்கில மனறம் ஆங்கிலதின நிகழ்வையும், ஆங்கில பயிற்சிப் பட்டறையையும் பாடசாலை மட்டத்தில் சிறப்பாக நிகழ்த்தினர். இவற்றை செயற்படுத்திய மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

வணிக மன்றம் வணிகப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதுடன், பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம், மாணவர்களுக்கான வங்கிச் சேவை போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றது.

4. விசேட குழுக்கள்

1. சுற்றாடல் முன்னோடிக்குழு -; 25 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட முதலாவது குழு மஞ்சள் மற்றும் பச்சைவர்ணப் பதக்கங்களையும், 2ஆவது குழு மஞ்சள் வர்ணப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். கடமையுணர்வுடன் செயற்படும் பொறு;பாசிரியர்களான திருமதி.சி. வாகீசன், திருமதி.அ.இராசசிவம் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் குறுகிய காலத்துள் 50 மாணவர்கள் சுற்றாடல் முன்னோடி பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். இவர்கள்; உலக சுற்றாடல் தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் திண்மக் கழிவு முகாமைத்துவம், பாடசாலைப் பசுமைபேணல் நிகழ்ச்சித் திட்டங்களையும் செவ்வனே ஆற்றி வருகின்றனர்.

2. பெண்கள் சாரணியம் – 2013 ஆம் ஆண்டு; உருவாக்கப்பட்ட இக்குழு பொறுப்பாசிரியர்களான செல்வி.சி. சின்னையா, திருமதி.அ.முகுந்தன்; ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் சிறப்பாக சிந்தனை நாள் நிகழ்வையும் நிகழ்த்தியிருந்தனர்.

3. சாரணர் – திரு.நா.கேதாரநாதன் ஆசிரியரின் முயற்சியினால் 7.3.2014 அன்று மீண்டும் எமது பாடசாலையில் ஆண்சாரணர் அணி உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவர்கள் பாடசாலைச் செயற்பாடுகளிலும் பிரதேசத்திலுள்ள ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் சிரமதானம், தாகசாந்தி; மற்றும் சேவைகளை ஆற்றி வருகின்றனர்

4. பாண்ட் அணி-; மேலைத்தேய பாண்ட் அணியும,; எமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இன்னியம் (கீழைத்தேய பாண்ட); அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வணிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இவ் அணிகள் பாடசாலைச் செயற்பாடுகளில் மட்டுமன்றி அயல் நிறுவனங்களின் விழாக்களின் வரவேற்பு நிகழ்வுகளிற்கும் அணிவகுப்பை வழங்கி பாடசாலை சமூக உறவை வலுப்படுத்தி வருகின்றனர்.

5. சென் ஜோன் அம்புலன்ஸ் படையணி

இவ்வணி கடந்த வருடம் இறுதியில் திருமதி.தயாழினி nஐயக்குமார், திரு. பா. செந்தில்குமார் ஆசிரியர்களின்; முயற்சியினால் முதற்கட்டமாக 48 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் செல்வன் சுதர்சன் தலைமையில் 25 மாணவர்களைக் கொண்ட அணி சென் ஜோன் அம்புலன்ஸ் படையணிக்குரிய முழுமையான பண்புகளையும் கொண்டு சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர்.

6. சுகாதாரக்குழு 

திரு.அன்ரன் விமலதாஸ் பொறுப்பாசிரியரின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட இக்குழுவில் 16 மாணவர்கள் நிர்வாகக் குழு அங்கத்தவர்களாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். மதிய உணவு கண்காணிப்பு, உடற் திணிவுச் சுட்டி கணித்தல், பாடசாலைக் குடிநீர்சுகாதாரம் பேணல் போன்ற விடயங்களைக் கண்காணித்து வருகின்றனர்.

7. போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு

திரு.நா.கேதாரநாதன், திரு. தெ. லிங்கேஸ்வரன் ஆசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். இதில் இணைந்து கொண்ட 10 மாணவர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தாலும், ஊர்காவற்றுறை பொலிஸ்பிரிவினராலும் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறை தொடர்பான செய்முறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் வேளையிலும்;, பாடசாலை நிறைவுறும் வேளையிலும் வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்து ஒழுங்கமைப்புக் கடமைகளை மேற்கொள்கின்றனர்.

8. உற்பத்தித்திறன் விருத்திக்குழு 

திரு.இ.ஜீவராஜ் ஆசிரியரின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். 12 பேர் கொண்ட இவ்வணியினர்; பாடசாலைக் கவின்நிலை பேணல் 5ளு அமுலாக்கத்தை கண்காணித்தலும் தொடர்ந்து பேணலும் என்ற வகையில்; பாடசாலையின் உற்பத்தித்திறனை விளைதிறன்மிக்கதாக்கும் வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

புலமைப்பரிசில்

எமது கல்லூரியின் மாணவர்கள் பின்வரும் வகையிலான புலமைப்பரிசில் நிதியுதவியைத் தங்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காககப் பெற்று வருகின்றனர்.

 தரம் 5 ற்கான புலமைப்பரிசில் நிதி – 20 மாணவர்கள்.

 ஜனாதிபதி புலமைப்பிரிசில் நிதி – 6 மாணவர்கள் 

 ஆளுநர் புலமைப்பரிசில் நிதி -12 மாணவர்கள் 

 தியாகராஜா புலமைப்பரிசில் நிதி -40 மாணவர்கள் 

 சிப்தொற புலமைப்பரிசில் நிதி -20 மாணவர்கள்

பாடசாலை முகாமைத்துவக்குழு

எமது பாடசாலையின் முகாமைத்துவக்குழுவில் துறைசார்ந்த 10 ஆசிரியர்கள் இணைந்து பாடசாலை அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலையின் ஐந்தாண்டுத்திட்டம், வருடாந்த அமுலாக்கற் திட்டம் என்பவற்றிற்கமைய பௌதிக வள அபிவிருத்தி, பாடவிதான அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்தி, முகாமைத்துவ அபிவிருத்தி, ஆசிரியர் வாண்மைவிருத்தி ஆகிய செயற்பாடுகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை அபிவிருத்திக்குழு

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், வலயக் கல்வி அலுவலக உறுப்பினர்களை அங்கத்தவராகக் கொண்டு செயற்பட்டு வரும் இக்குழு பாடசாலையின் பலம், பலவீனங்களை இனங்கண்டு பாடசாலை மட்டத்திட்டமிடலை மேற்கொண்டு பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் செயற்படுத்த அங்கீகாரங்களை வழங்குவதுடன் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். செயலாளர் திரு. கு. சரவணபவானந்த சர்மா அவர்கள் மாதாந்தக் கூட்டங்களை ஓழுங்குபடுத்தி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றார்.

பழைய மாணவர் சங்கம்

எமது பாடசாலைப் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தமது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். 2014ஆம் கல்வியாண்டில் செயற்பட்ட நிர்வாகக் குழுவினர் கடந்த வருடம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளிலும், பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு நிழ்வுகளிலும் காத்திரமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். அத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை குறிப்பாக மஹிந்தோதய ஆய்வு கூடத் திறப்புவிழாவில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாடசாலைப் பௌதிகவள விருத்தி, பாடவிதான அபிவிருத்தி மற்றும் இணைப்பாடவிதான அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். மேலும் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெறும் நோக்கில் ஊக்குவிப்புப் பரிசில்களையும் வழங்கினர். அத்துடன் நின்றுவிடாது பாடசாலையின் சாதனைகளை karaihinducanada.com எனும் இணையத்தளத்தினுர்டாக வெளிப்படுத்தி வருகின்றனர். பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையும் அவ்வப்போது வேண்டிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பாடசாலையின் சாதனைகள்

இணைப்பாடவிதான சாதனைகளின் தொகுப்பு

மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசியமட்ட சாதனைகள்

போட்டி வகை மாணவர் பெயர் விடயம் மட்டம்  நிலை

1 ஸ்ரீலங்கா யுத் தேசிய விருது கலாசாரப் போட்டி ஆ.அமிர்தா இசை மாவட்டம் 3

பு.சயிந்தன் ஓவியம் 3

ந.டினோஜா பேச்சு 3

2. சமுர்த்தி

ஆ.அமிர்தா இசை மாவட்டம் 1

க. வினோதன் அறிவிப்பாளர் மாவட்டம் 1

3. லுயசட புநநம ஊhயடடயபெந ச.லித்தியா

ச. சுதர்சன்

ச.விஜயதர்சன் வன்பொருள் அணி மாகாணம் வெள்ளிப் பதக்கம்

க.டிலானி

தே. றோமிலா

சுp.பிரசாந்தி மென்பொருள் அணி குழு-1 மாகாணம் ஆநசவை

அ.துஸ்யந்தினி

ப.சஜிதா

ந.டினோஜா மென்பொருள் அணி குழு-11 மாகாணம் ஆநசவை

4 ஆளுநர் சதுரங்கப் போட்டி ந. யஸ்மினா சதுரங்கப் போட்டி மாகாணம் ஊhயஅpழைn

5 இலங்கை வங்கி ப. நிதர்சன்

சு.டனோஜன்

ந. சசிகரன் சித்திரப் போட்டி மாகாணம் பணப்பரிசில்

6 சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பு 10 பேர் கொண்ட அணி சதுரங்கப் போட்டி மாகாணம் ஊhயஅpழைn

தேசிய மட்டச் சாதனைகள்

நிகழ்வு மாணவர் பெயர் பாடத்துறை ஆண்டு நிலை

புத்தாக்கப்போட்டி 4 பேர் கொண்ட அணி விஞ்ஞானம் 2012 பங்குபற்றியமை

ஓலிம்பியாட்போட்டி சி.விதுஷா கணிதம் 2013 பங்குபற்றியமை

ஸ்ரீலங்கா யுத் தேசிய விருது கலாசாரப் போட்டி ஆ.அமிர்தா இசை 2014 பங்குபற்றியமை

சுவிஸ் காரை கலாசார மன்றத்தால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2014

வெற்றி பெற்ற மாணவர்களிற்கு அம் மன்றத்தினரால் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

• க.சாந்தினி – காரை இளஞ்சுடர் 

• ந. டினோஜா – காரைத் தென்றல்

• அ.துஸ்யந்தினி – காரை இளவறிஞர்

பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் – 2014

1. க.பொ.த சாதாரண தரம் – செல்வன் தி பார்த்தீபன் – 8யுஇ ளு

2. க.பொ.த உயர் தரம் 

வர்த்தகத்துறை செல்வி க.பானுஜா- 2யுஇ டீ (மாவட்டநிலை 17)

கலைத்துறை செல்வி க.ரேணுகா – 2யுஇ ஊ 

செல்வி க.சிவநிறஞ்சனா- யுஇ 2டீ

2014 ஆம் கல்வியாண்டில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விசேடநிகழ்வுகள்

1. தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள்விழா

2. வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 

3. தைப்பொங்கல் விழா

4. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு

5. ஆண்கள் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 

6. சிந்தனை நாள் நிகழ்வு

7. புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

8. உலக சுற்றாடல் தின நிகழ்வு சுற்றாடல் முன்னோடிகளால் ந-றயளவந முகாமைத்துவ வாரம் அனுஸ்டிப்பு

9. நிறுவுநர் தினமும், பரிசளிப்புவிழாவும் மாணவ முதல்வர், வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

10. சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

11. மணிவாசகர் குருபூசை

12. ஆடிப்பிறப்பு விழா 

13. மாணவர்களுக்கான சுகாதார முகாம் 

14. உயர்தர மாணவர் ஒன்றுகூடலும் மதிய போசன நிகழ்வும்

15. பாடசாலை மட்ட விஞ்ஞான தின நிகழ்வு 

16. பாடசாலை மட்ட ஆங்கில தின நிகழ்வு

17. உலக உளநல நாளும்;, சிறுவர் தின நிகழ்வும் 

18. வாணிவிழா 

19. உலக ஆசிரியர் தினம்

20. மகிந்தோதய ஆய்வு கூடத் திறப்புவிழா

21. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலை திறப்பு விழா

2014 ஆம் கல்வியாண்டில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட மாணவர் தேர்ச்சி மேம்பாட்டுச் செயற்றிட்டங்கள்

1. மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான (தரம் 6-9) துரித கற்றற் செயற்றிட்டம் (யுடுP)

2. மாணவ முதல்வர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி 

3. 100மூ மாணவர்களும் பங்குபற்றும் வகையிலான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு 

4. பாடசாலை, கோட்ட, வலய, மாகாண மட்டங்களில் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கிலதினப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை பெறுவதற்கான விசேட பயிற்சிகள் 

5. நாட்டிய நாடகப் பயிற்சிப்பட்டறை 

6. குண்டு போடுதல், தடடு, ஈட்டி எறிதல் போன்ற மைதான நிகழ்ச்சிகளில் தேர்ச்சி பெறும் வகையில் விசேட பயிற்சிகள் 

7. கணித, விஞ்ஞான, சமூகவிஞ்ஞான, அனர்த்த முகாமைத்துவ, வணிகப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை பெறுவதற்கான விசேட பயிற்சிகள் 

8. புவியியல் பாடத்திற்கான படவேலைப் பயிற்சிகள் 

9. க.பொ.த (சாதாரண தர) மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரதான பாடங்களில் வார நாட்களில் காலை, மாலை நேர விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயற்சிகள் 

10. க.பொ.த (சாதாரண தர) மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற புலமை வாய்நத விரிவுரையாளர் மூலம் வாரஇறுதி நாட்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

11. க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சகல பாடங்களிலும் ஆவணி விடுமுறை காலத்தில் விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயற்சிகள் நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டது. 

12. க.பொ.த (சாதாரணதர) மாணவர்களுக்கு மே மாதத்தில் இருந்து வாராந்தம் சகல பாடங்களுக்கும் அலகுப்பரீட்சைகள் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. 

13. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு தமிழ், வரலாறு, புவியியல், இந்துநாகரிகம் ஆகிய பிரதான பாடங்களில் வார நாட்களில் காலை, மாலை நேர விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

14. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு தமிழ், புவியியல், பாடங்களில் வருகை தரு விரிவுரையாளரகள்; மூலமான விசேட பயிற்சிகள் நடத்தப்பட்டது. 

15. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு அலகுரீதியான பரீட்சைகள் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதுடன், மாதிரிப் பரீட்சைகளும் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

16. க.பொ.த (உயர்தர) பொதுத் தகவல் தொழினுட்பப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வலய மட்ட விரிவுரையாளரகள்; மூலமான விசேட பயிற்சிகள் நடத்தப்பட்டது. 

17. தரம் 10 மாணவர்களுக்கு வரலாறு, சுகாதாரம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறும் வகையில் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டது. 

18. தரம் 6-9 வகுப்புகளில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்கக்கு ஆவணிமாத விடுமுறை காலத்தில் விசேட வலுவூட்டல் வகுப்புகள் நடத்தப்பட்டது.

19. தரம் 9 மற்றும் க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டது.

20. க.பொ.த (உயர்தர) 2016 கல்வியாண்டு மாணவர்களுக்கு பாடத் தெரிவு வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

21. க.பொ.த (உயர்தர) செய்முறைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நடனம், நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களிற்கு விசேட பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டது.

22. தரம் 6-9 மற்றும் க.பொ.த (உயர்தர) 2016 கல்வியாண்டு மாணவர்கள் காரைநகர் தொழிற் பயிற்சி நிலையச் செயற்பாடுகளைப் பார்வையிட்டு அனுபவம் பெற இடமளிக்கப்பட்டனர்

23. பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வரம், மடு தேவாலயம், சென் சேவியர் ம.வி. கேரதீவு, சங்குப்பிட்டி ஆகிய இடங்களிற்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

24. தரம் 6, 7 மாணவர்களின் ஒழுக்கவிழுமியங்களை மேம்படுத்தும் வகையில் சத்தியசாயி சேவா மனித மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தினரை வளவாளர்களாகக் கொண்டு மனித மேம்பாட்டுக் கல்வி நிகழ்ச்சித் தொடர் சனிக்கிழமைகளில் யூலை மாத இறுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. .

25. மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்து மாமன்றத்தினரால் காலை நற்சிந்தனை, தினம் ஒரு குறழமுதம், செய்தித்தாள் கண்ணோட்டம் ஆகியன நடத்தப்படுகிறது.

26. ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில் வாராந்தம் வியாழக்கிழமைகளில் கனிஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகளும், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சிரேஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

27. பொதுத் தகைமைத் திறனை விருத்தி செயு;யும் வகையில் தினமும் இடைவேளையில் சகல மாணவர்களும் பொது அறிவு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையிலான நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

28. வாழ்க்கைத் தேர்ச்சிக்கான ஆங்கில விருத்திக்காக English as a Lifeskill வாராந்தம் வியாக்கிழமைகளில் ஆங்கில மொழிமூல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

29. பெண்கள் வழிகாட்டிகளின் ஆளுமையை விருத்தி செய்யும் வகையிலான பயிற்சி வகுப்புகள் பொறுப்பாசிரியர்களால் நடத்தப்படுகிறது.

30. சுற்றாடல் முன்னோடிக்குழுவினரின் தகைமையை விருத்தி செய்யும் வகையிலான பயிற்சிகள் பொறுப்பாசிரியர்களால் வழங்கப்பட்டது.

31. மாணவமுதல்வர்கள் 10 பேர் தலைமைத்துவப் பயிற்சி பெற மாத்தறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர.

32. விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர.

33. உதைபந்தாட்ட அணியினருக்கான பயிற்சிகள் செப்ரெம்பர் மாதத்திலிருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் வார நாட்களில் உடற்கல்வி ஆசிரியரால் வழங்கப்படுகிறது.

34. உதைபந்தாட்ட அணியினர் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்களுடன் நட்பு ரீதியான போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

35. தெரிவு செய்யப்பட்ட 14 மாணவர்களுக்கு வயலின் பக்கவாத்திய இசைப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது

36. மாணவ முதல்வர்கள் மற்றும் விசேட மாணவ குழுக்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடத்தப்பட்டது.

37. சாரணரிற்கான ஆற்றுகை விருத்திப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

38. சுற்றாடல் முன்னோடிக்குழுக்களில் குழு -1 மஞ்சள் வர்ணப்பதக்கம் பெறுவற்கும், குழு-11 பச்சை வரணப் பதக்கம் பெறுவதற்குமான ஆளுமை விருத்திப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

39. சென்Nஐhன்ஸ் அம்புலன்ஸ் படையணி உருவாக்கப்பட்டது.

2014 இல் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை பௌதிக வள அபிவிருத்திப் பணிகள்

1. வயலின், டொல்கி, ஹார்மோனியம், சுருதிப் பெட்டி திருத்தம் செய்யப்பட்டது.

2. இலத்திரனியல் நூலகம் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கு இணையத்தள இணைப்பு வழங்கப்பட்டது.

3. இலத்திரனியல் நுர்லகத்திற்கு 4 கணனிகள் வழங்கப்பட்டது. 

4. பாடசாலைத் தரவுத் தளங்கள் இற்றைப்படுத்தப்பட்டு பனர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

5. பாடசாலையின் வடக்கு வளாகத்தில் பூந்தோட்டத்திற்கான அலங்கார வளைவு கட்டப்பட்டது. .

6. அழகியல் அறைகள் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

7. நடனக் குழு மாணவர்களுக்கான 3 costeem தைக்கப்பட்டது. .

8. 145 தளபாடங்கள் திருத்தம் செய்யப்பட்டது.

9. சயம்பு மண்டபம் திருத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. 

10. விஞ்ஞான ஆய்வுகூட கூரையின் பீலி 60’நீளம் திருத்தம் செய்யப்பட்டது. .

11. உள்ளக விளையாட்டு உபகரணங்கள,மைதான விளையாட்டு உபகரணங்கள், உதைபந்தாட்ட வீரர்களுக்கான காலணி என்பன கொள்வனவு செய்யப்பட்டது.

12. பாடசாலையின் வடக்கு வளாக வடக்கு,கிழக்குபுற 270’ எல்லை வேலி வயர் மெஸ் ஆல் அடைக்கப்பட்டது. 

13. நூலகக் கூரை 140’ Balance Board  அடிக்கப்பட்டு பீலி பொருத்தப்பட்டது.

14. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளில் உள்ள 26 யன்னல்களிற்கு கண்ணாடி இடப்பட்டது.

15. தரம் 10 வகுப்பறையில்உடைந்த நிலையில் காணப்பட்ட 4 மர யன்னல்கள் நீக்கப்பட்டு புதிய யன்னல் கதவுகள் இடப்பட்டது. 

16. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளில் உள்ள சகல யன்னல்களிற்கும் திறாங்குகள் கொழுக்கிகள் சீர்செய்யப்ட்டது.

17. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளின் வெளிப் பார்வைக்குட்பட்ட பகுதிகள் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

18. ஆசிரியர் ஓய்வறை, முகாமைத்துவ மண்டபம் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

19. பாடசாலைப் பூந்தோட்ட்ம் பூங்கன்றுகள் நாட்டி மெருகூட்டப்பட்டது.

20. சரஸ்வதி சிலையின் முற்றம் மாபிள் கற்கள் பதித்து அழகுபடுத்தப்பட்டது.

21. முகாமைத்துவ மண்டபத்தில் கழுவு தொட்டி பொருத்தப்பட்டது.

22. வகுப்பறைகளுக்கு சிக்கன குடிநீர் திட்டத்திற்காக பைப் பொருத்தப்பட்ட வாளிகள் வழங்கப்பட்டது.

23. பாடசாலையின் வடக்கு வளாக வகுப்பறைகள், விசேட அறைகளுக்கான பெயர்ப்பலகைகள் இடப்பட்டது.

24. பாடசாலையின் வடக்கு வளாக பிற்புற நுழைவாயில் Gate ற்கு காறை இடப்பட்டு சுவர்கள் சீமெந்து பூச்சிட்டு வர்ணம் தீட்டப்பட்டது. 

25. பாடசாலையின் வடக்கு, தெற்கு வளாக ஆண்கள் மலசல கூடக்குழி கழிவகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், உடைந்த நிலையில் காணப்பட்ட கொங்கிறீற் தட்டு நீக்கப்பட்டு புதிய தட்டு இடப்பட்டது.

26. பாடசாலையின் வடக்கு வளாக முற்புற உட்பகுதி மதில்களுக்கு சீமெந்து பூச்சிட்டு வர்ணம் தீட்டப்பட்டது.

27. நடராசா மண்டபத்தின் உடைந்த நிலையில் காணப்பட்ட படிகள் திருத்தம் செய்யப்பட்டது.

28. நடராசா மண்டபத்தின் மேற்குப்புற விறாந்தைக் கூரையின் உக்கலடைந்த மரங்கள், சிலாகைகள் மாற்றப்பட்டு புதிய மரங்கள் இடப்பட்டது.

29. பாடசாலையின் வடக்கு வளாக நுழைவாயில் படிகள் திருத்தம் செய்யப்பட்டது.

30. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் பிற்புறம் குவிக்கப்பட்டிருந்த கற்கள் உடைந்த தளபாடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

31. பாடசாலையின் வடக்கு வளாக மழைகால நீர்வடிகால் அமைப்பு சீர் செய்யப்பட்டது.

32. வெற்றிகேடயங்கள் காட்சிப்படுத்துவதற்கான கண்ணாடி அலுமாரி செய்யப்பட்டது.

33. மீன் தொட்டிக்கான கூரை அமைக்கப்பட்டு கவின்நிலைப்படுத்தப்பட்டது.

34. பாடசாலைப் பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் எழுதபப்பட்டது.

35. பாடசாலை மைதான விஸ்தரிப்பிற்காக 6 பரப்புக்காணி மேற்குப்புற எல்லையில் அன்பளிப்பாகப் பெறப்பட்டு பாடசாலைக்கான உறுதி ஆவணப்படுத்தல்கள் பூரணப்படுத்தப்படும் வேலைகள் இடம்பெறுகின்றது.

36. புதிதாகப் பெறப்பட்ட 6 பரப்புக் காணி 150 load மண்நிரவி மட்டப்படுத்தப்பட்டது.

37. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50’ழூ30’ இருமாடி கொண்ட மஹிந்தோதய ஆய்வுகூடத் தொகுதி வளப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்ட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

38. மஹிந்தோதய ஆய்வுகூடயன்னல்களுக்கு திரைச் சேலையிடப்பட்டது.

39. பல்லூடக அறைக்கான பேச்சு மேடை,U வடிவிலான மேசை புதிதாக செய்விக்கப்பட்டது. பழைய மேசைகள் திருத்தம் செய்யப்பட்டது.

40. பல்லூடக அறை மேம்படுத்தல் பணியில் தரை ஓடு பதித்தல், யன்னல் கிறில்களுக்கு கண்ணாடியிடல், திரைச் சேலையிடல், வர்ணம் திட்டல், மேடையமைத்தல், மின்னிணைப்பு சீர் செய்தல் போன்ற செயற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டது. 

41. பல்லூடக அறைக்கான ஒலிவாங்கி கொள்வனவு செய்யப்பட்டது.

42. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சிலை அமைக்கப்பட்டது.

பௌதிக வளங்களின் விளைதிறன்மிக்க பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள்

1. பல்லூடக உதவியாளர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் பழைய மாணவர்சங்க அனுசரணையுடன் நியமிக்கப்பட்டனர்

2. மின் கட்டண மேலதிக கொடுப்பனவு நிதி, இணையத்தளப் பாவனைக்கான தொலைபேசிக் கொடுப்பனவு நிதி அனுசரணை பழைய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது.

3. குடிநீர்ப் பாவனை மேலதிக கொடுப்பனவு நிதி அனுசரணை – காரை அபிவிருத்திச் சபை

4. வருடாந்த பரிசில் தின நிகழ்வை தடையின்றி நிகழ்த்துவதற்காக டாக்டர் திரு. வி.விஐயரட்ணம் நம்பிக்கை நிதியம் உருவாக்கப்பட்டது. 

5. வருடாந்த இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான அனுசரணை லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது.; 

பாடசாலையின் அபிவிருத்திப்பணிகளில் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்புகளை வழங்கிய எமது கல்லூரியின் பகுதித் தலைவர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், எமது கல்லூரி ஆசிரியர் குழாத்தினருக்கும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும், பழைய மாணவர் சங்கத்தினருக்கும், ஏனைய அனுசரணைகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாடசாலை அபிவிருத்தி சார்பாக எதிர்நோக்கும் சவால்கள்

மாணவர்சார்பாக

• ஏறத்தாழ 85மூ மாணவர்கள் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்கள்.

• ஏறத்தாழ 40மூ மாணவர்கள் ஒற்றைப் பெற்றோர்ஃ பெற்றோர் இன்மைஃ சிதைந்த குடும்பப் பின்னணியைக் கொண்டிருத்தல்.

• ஏறத்தாழ 30மூ மாணவர்கள் மெல்லக் கற்போர்.

• கற்றலில் நாட்டம்ஃஆர்வம் இன்மை

• சுய சுகாதாரத்தில் அக்கறையின்மை

• போட்டிகளில் பங்குபற்றுவதில் பின்னிற்றல்

பெற்றோர்/பாதுகாவலர் சார்பாக

• ஏறத்தாழ 90மூ பெற்றோர் நாட்கூலித் தொழிலாளர்கள்

• ஏறத்தாழ 30மூ பெற்றோர் குடும்பத் தலைவன்ஃதலைவியை இழந்திருத்தல்ஃ ஊனமுற்றிருத்தல்;

• பெரிய குடும்பம், வருமானக்குறைவு

• ஏறத்தாழ 60மூ பெற்றோர் கல்வியறிவு குன்றியோர்

• ஏறத்தாழ 20மூ பெற்றோர் எழுத்தறிவற்றோராகக் காணப்படுதல்

• பிள்ளைகளின் நலனில் அக்கறைக்குறைவு

• பாடசாலை நிகழ்வுகளில்ஃவிழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் இன்மை

ஆசிரியர் சார்பாக

• பாடத்துறைக்குப் பொருத்தமான ஆசிரியர்கள் இன்மைஃபற்றாக்குறை

• 70மூ ஆசிரியர்கள் பாடசாலையிலிருந்து சராசரி 25மஅ ற்கு அப்பால் வதிவோர்.

அதிபர்ஃநிர்வாகம் சார்பாக

• பாடசாலைக் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஆளணியினர்; நியமிக்கப்படாமை

• அலுவலக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர் நியமிக்கப்படாமை.

• நூலகர், ஆய்வுகூட உதவியாளர், நியமிக்கப்படாமை.

• ஆசிரியர்ஆளணி தேவைப்பட்டியலுக்கு அமைவாக ஆளணி வளம் வழங்கப்படாமை.

• பாடசாலை வளாகம் வீதியின் இருமருங்கிலும் அமைந்திருத்தல்

நிறைவேற்றப்பட வேண்டிய பௌதிகவள அபிவிருத்தித் திட்டங்கள்

1. பாடசாலையின் தெற்கு வளாகத்தில் பெண் பிள்ளைகளுக்கான மலசலகூடம் அமைத்தல்.

2. வகுப்பறைகளினுள் புறா நுழையாத வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்.

3. பாடசாலை மைதானத்தை எல்லைப்படுத்தி பாதுகாப்பு மதில்/வேலிகளை அமைத்தல்.

4. விளையாட்டு மைதானப் புனரமைப்பும், பார்வையாளர் அரங்கம் (பமிலியன); அமைத்தலும்

5. உள்ளக விளையாட்டரங்கம் அமைத்தல்

6. பாடசாலைக்கான பெயர் வளைவு அமைத்தல்

7. பாடசாலையின் தெற்கு வளாகக் கவின்நிலையை மெருகூட்டும் வகையில் பூந்தோட்ட வளைவு அமைத்தல்

8. மாணவர்களின் குழு நிலைக் கற்றலுக்காக மர நிழல்களின் கீழ் இருக்கைகள் அமைத்தல்.

9. தொங்கு நூலகம் அமைத்தல்

10. கீழைத் தேச, மேலைத்தேச பாண்ட் இசைக் கருவிகள் கொள்வனவு செய்தல்

11. நூலகத்தின் கூரைகள் திருத்தம் செய்தல்.

12. நூலகத்தின் வாசகர் பகுதி மற்றும் கணனிக் கற்கை நிலையத்தின் மாணவர் பயன்பாட்டுப்பகுதி விஸ்தரிக்கப்படல்

13. சயம்பு மண்டபம், தரம் 6,7 வகுப்பறைகளுக்கு மின்னிணைப்பு மேற்கொள்ளல்.

14. தரம் 6 வகுப்பறை, விளையாட்டு அறை திருத்தம் செய்தல்

15. இரசாயனவியல் ஆய்வுகூடத்தின் மின்னிணைப்பை சீர்செய்தல்.

16. வகுப்பறைகளுக்கான காட்சிப்படுத்தல் பலகைகள் அமைத்தல்.

17. வகுப்பறைக் கவின்நிலை இன்றைய கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தல்.

18. பாடசாலையின் வீதியின் இருபுறமும் உள்ள வடக்கு, தெற்கு வளாகங்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளல். 

19. வகுப்பறைகளின் இரும்பு சுருக்கு புயவநள திருத்தம் செய்தல்.

20. தளபாடத்திருத்தம்

21. தளபாடங்களுக்கு வர்ணம் தீட்டல்

22. துடுப்பாட்டம், கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டத் திடல்கள் அமைத்தல்

செயற்படுத்தப்பட வேண்டிய தேர்ச்சி விருத்திச் செயற்றிட்டங்கள்

1. அயற் பாடசாலைகளுடன் நட்பு ரீதியான போட்டிகள் நடத்துவதன் மூலம் விளையாட்டுக் குழுக்களை வலுப்படுத்தல். 

2. ஆங்கில பாடத்தில் அடிப்படை அறிவை விருத்தி செய்வதற்கான விசேட வகுப்புகள் தரம் 6, 9 மாணவர்களுக்கு நடத்துதல

3. அடிப்படைக் கணிதச் செய்கைத் திறனை விருத்தி செய்தல்

4. பாடரீதியான முகாம்கள், பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்.

5. மாணவர்களுக்கான வயலின்,மிருதங்கம், ஓகன், நடனம், சித்திரம் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

6. களப்பயணம் மேற்கொள்ளல்

7. பாடரீதியான கண்காட்சி நடத்துதல்

8. விஞ்ஞான பாடச் செய்முறைப் பயிற்சிப் பட்டறை நடத்துதல்

பாடசாலையால் கௌரவிக்கப்பட்டோர் விபரம்

1. வைத்திய கலாநிதி வி.விஜயரத்தினம் (31.7.2013 ) அவர்கள் கல்லூரியின் 125ஆம் ஆண்டு விழாவின் நிறுவுநர்தின நிகழ்வில் வரவாற்று முக்கியத்துவம் வாய்ந்த சயம்பு மலரை வெளியிட்டு வைத்தமைக்காக கௌரவிக்கப்பட்டார்.

2. யாழ் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் ச. சத்தியசீலன் மற்றும் கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி அ. சத்தியசீலன் (01.8.2013) ஆகியோர் கல்லூரியின் 125ஆம் ஆண்டு விழாவின் கலைவிழா நிகழ்வில் ஆசிரியர் வாண்மைவிருத்திக்காக ஆற்றும் பணிக்காக கௌரவிக்கப்பட்டார்கள்.

3. சிற்பக்கலைஞர் திரு.மு. திருநாவுக்கரசு 13.9.2013 அன்று வாணிவிழா நிகழ்வின் போது பிரதேசக் கலைஞர்களை இனங்கண்டு கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

4. மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 14.10.2014 அன்று பாடசாலைக்கான மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடத்தை அமைத்து வழங்கியமைக்காகவும் நாட்டின் மேதகு ஜனாதிபதி அவர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்தமைக்காகவும கௌரவிக்கப்பட்டார். 

5. தத்துவ கலாநிதி க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் 25.12.2014 அன்று மணிவாசகர் சபைப் பவளவிழா நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போது கல்லூரியின் மூத்த மாணவன் என்ற வகையிலும், அவர் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணிக்காகவும் அவரது 99ஆவது அகவையில் கௌரவிக்கப்பட்டார். 

6. கலாபூசணம் திரு.தி. சண்முகசுந்த்தரம் (ஓய்வுநிலை கிராம சேவையாளர்) அவர்கள் 08.4.2015 அன்று மனிதமேம்பாட்டுக்கல்வி நிறைவுநாளும், விருதுகள் தினமும் நிகழ்வின் போது பிரதேசக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்ட பிரதேச மிருதங்கக் கலைஞர் என்ற வகையில் கௌரவிக்கப்பட்டார். 

7. வைத்திய அதிகாரி திரு.பே. நடராசா அவர்கள் தனது ஓய்வு காலத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காரைநகர் பிரதேசப் பொது இடங்களில் நிழல்தரு விருட்சங்களை நாட்டி பராமரித்து வருகின்றமைக்காக சிறந்த சுற்றாடல் ஆர்வலர் என்ற வகையி;ல் 5.6.2015 அன்று பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். 

8. திரு.ஆறுமுகம் ராசேந்திரன் ஓய்வுநிலை வட மாகாணக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் 37 ஆண்டுகள் கல்விச் சமூகத்திற்கு ஆற்றிய பணிக்காக கல்லூரியின் 127 ஆவது பரிசில் தின விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.

2014 ஆம் கல்வியாண்டின் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள்

1. நாட்டின் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பாடசாலைக்கு விஜயம் செய்து மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடத்தைத் திறந்து வைத்தமை.

2. நாட்டின் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்து உரையாற்றியமை.

3. வலய மட்ட வெளியக மதிப்பீட்டின் அடிப்படையில் 75மூ பண்புத்தரத்தை அடைந்து தீவக வலய முதன்மைப் பாடசாலையாக இனங்காணப்பட்டமை. 

4. பல்லூடக அறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை.

5. இவ்வருடம் நுண்கலைத்துறையில் 5 மாணவர்களும் (சித்திரம், நடனம், இசை), கலைத்துறையில் 1 மாணவியும் மொத்தம் 6 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்துள்ளமை.

6. 2014ஆம் கல்வியாண்டு வர்த்தகத் துறை மாணவி செல்வி பானுஜா 2யுஇ டீ பெறுபேற்றைப் பெற்று யாழ் மாவட்டத்தில் 17ஆம் இடத்தைப் பெற்றமை.

7. செல்வி ஆ. அமிர்தா இளையோர் கழகத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்டப் பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்டப் போட்டியில் பங்கு பற்றியமை.

8. செல்வி புருசோத்தமி மாகாணமட்டப் பண்ணிசைப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றமை

9. செல்வி ந. யஸ்மினா மாகாண மட்ட ஆளுநர் சதுரங்கப் போட்டியில் சம்பியன் வென்றமை.

10. மாகாணமட்ட லுயசட புநநம ஊhயடடநபெந ர்யசன றயசந உழஅpநவவைழைn இல் ர்யசன றயசந அணி; ளுடைஎநச ஆநனயட வென்றமை. இரு ளுழகவ றயசந வுநயஅள ஆநசவை பெற்றமை. 

11. பாடசாலையின் 75மூ ற்கு மேற்பட்ட மாணவர்கள் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆளுமை விருத்திக்குழுவில் தம்மை இணைத்து செயற்படும் வண்ணம் பல்வேறு ஆளுமை விருத்திக்குழுக்கள் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளன. (சுற்றாடல் முன்னோடிக்குழு-100, சென்ஜோன் அம்புலன்ஸ்- 48, பெண்கள்வழிகாட்டி–18,சாரணர்-25,போக்குவரத்துக்குழு–10, சுகாதாரக்குழு-12, உற்பத்தித்திறன் விருத்திக்குழு–12, மாணவமுதல்வர்-40, மன்றங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள்;-72, இசை, நடன, நாடக குழுக்கள்-40, பெருவிளையாட்டு, உள்ளக விளையாட்டுக் குழுக்கள் – 120)

இதனடிப்படையில் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப சமூக உறவினூடாக பௌதிக, மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழினுட்பங்களினூடகத் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஆளுமைமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கல் எனும்; கல்லூரியின் பணிக்கூற்றை நிறைவு செய்யும் பொருட்டான அடித்தளம் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கல்லூரியின் தூரநோக்கான நவீன உலகில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆளுமைமிக்க சமுதாயம் என்பதன் இலக்குப் பயணம் வெகு தூரம் இல்லை என்பதை எம் கல்லூரிக்குடும்பம் பறைசாற்றி நிற்கின்றது எனும் நற்செய்தியை கூறி பரிசில்தின அறிக்கையை நிறைவு செய்கின்றேன்.

நன்றியுரை

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது அழைப்பை ஏற்று இந்நாளில் வருகை தந்து விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, சிறப்பு விருந்தினராக வருகை தந்து விழாவைச் சிறப்பித்த தீவக வலயக் கல்விப்பணிப்பாளர்;திரு. தி. ஜோன்குயின்ரஸ் அவர்களே, கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ஆ.ராஜேந்திரன் அவர்களே, கல்லூரியின் நிறுவுநர் தின உரையை வழங்கிய திருமதி சி.நடராசா அவர்களே உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்றும் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள கல்வியதிகாரிகள், ஓய்வுநிலை அதிபர்கள் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எமது பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு நிதியனுசரணை வழங்கிய வைத்திய கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் உரிமையாளரான கனடா வாழ் பழையமாணவர் வைத்திய கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம்  அவர்களுக்கும் நினைவுப் பரிசில்களை வழங்கிய திருமதி மனோன்மணி தம்பிராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), திரு,திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களுக்கும், திரு. கனக சிவகுமாரன், திரு மா.கனகசபாபதி, திருமதி சி;. நடராசா அவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தோளோடு தோள் கொடுத்து கல்லூரித்தேரை வெற்றிப் பாதையில் முன்நகர்த்திச் செல்லும் எமது பெருமைமிகு ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், அன்புநிறை மாணவச் செல்வங்களுக்கும், மதிப்புமிகு பெற்றோர்கள், கல்வி சாரா ஊழியர்களுக்கும் எனது மனநிறைவான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி

திருமதி வாசுகி தவபாலன், 

அதிபர்

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் – 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் தி.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr. க. கணேஸ்வரராஜா(Yarltonian) அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. ச. சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பரத் திருவிழாக் காட்சிகள்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (27.06.2015) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன்.கதிர்காமநாதன் தர்சிகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


பிரதம விருந்தினராக காரைநகர் மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவ கலாநிதி. மு.இந்திரமோகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) திரு.சி.செல்வராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளரும் கிராம சேவை அலுவலருமாகிய திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அயல் பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இவ்விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 


இந்நிகழ்வில் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் "நதி"  என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

AL.2 AL.3 AL.4 AL.5 AL.6 AL.7 AL.8 AL.9 AL.10 AL.11 AL.12 AL.13 AL.14 AL.15 AL.16 AL.17 AL.18 AL.19 AL.20 AL.21 AL.22 AL.23 AL.24 AL.25 AL.26 AL.27 AL.28 AL.29 AL.30 AL.31 AL.32 AL.33 AL.34 AL.35 AL.36 AL.37 AL.38 AL.39 AL.40 AL.41 AL.42 AL.43 AL.44 AL.45 AL.46 AL.48 AL.49 AL.50 AL.51 AL.52 AL.53 AL.54 AL.55 AL.56 AL.57 AL.58 AL.59 AL.60 AL.61 AL.62 AL.63 AL.64 AL.65 AL.66 AL.67 AL.68 AL.69 AL.70 AL.71 AL.72 AL.73 AL.74 AL.75 AL.76 AL.77 AL.78 AL.79 AL.80
 

 

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஏழாம் திருவிழாவில் வேட்டைத்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 11.07.2015 சனிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழாவில் மாலை இடம்பெற்ற மாம்பழத் திருவிழா காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 11.07.2015 சனிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 10.07.2015 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜந்தாம் திருவிழா இரவுக் காட்சிகள்

மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அநுசரணையில் நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

p.g.3

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் கடந்த சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வா.தவபாலன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் திரு.இரதாக்கிருஸ்ணன், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் நலன் விரும்பிகளும் சமூகமளித்திருந்தனர்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய அமரர் R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தினார்.  


கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்' இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் பல்வேறு துறைசார் சிறப்புத்திறன் மிக்க 11 மாணவர்களுக்கு 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளும்'  வழங்கப்பட்டிருந்தன.  
மேலம் சிறப்பு விருதுகளாக தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகளையும் பாடசாலை மட்ட சிறப்பு அணியினருக்கான விருதுகளையும் தேசிய மட்ட சாதனையாளருக்கான விருதுகளும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் வழங்கப்பட்டன.


ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர்.


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் 'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திமூவாயிரம் ரூபா (ரூபா 63,000 ரூபா) நிதி அநுசரiணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் 'அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை' அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 


விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. 


இவ்வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளுக்கு நிகரானதாக மிகநேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு இவ்வாண்டும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

 

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜந்தாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நான்காம் திருவிழா இரவுக் காட்சிகள்

அமரர் சிவத்திரு கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன

அமரர் சிவத்திரு கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன

 

PHOTOகலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களது 100 ஆவது அகவை வருகின்ற செப்ரெம்பர் 22 நினைவு கூரப்படுவதை முன்னிட்டு அவர்தம் தன்னிகரில்லாப் பணியையும் வாழ்வையும்  பதிவு செய்யும் நூற்றாண்டு விழா மலர் வெளியிடுவதற்காக ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இம்மலரிற்கு சைவசித்தாந்தம்‚ தேவார திருவாசகம் முதலான திருமுறைகளின் பெருமையைக் கூறும் ஆக்கங்கள்‚ ஈழத்தில் சிவ வழிபாடு தமிழிசை‚ தமிழ்மொழி – வரலாறு – கலை – பண்பாடு முதலான துறைகள் சார்ந்த பிற மலர்களிற் பிரசுரமாகாத தனித்துவமான ஆய்வுக் கட்டுரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

கட்டுரைகள் அனுப்பும் அறிஞர்கள் கட்டுரைகளுடன் தங்களைப் பற்றிய குறிப்பையும் ‚ புகைப்படம் ஒன்றையும். கலாநிதி. க.வைத்தீசுவரக்குருக்கள்‚ கந்தரோடை‚ சுன்னாகம் என்னும் அஞ்சல் முகவரிக்கு அல்லது baladhuvarahan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு யூலை 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு நூற்றாண்டு விழா மலர்க் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

 

நூற்றாண்டு விழா மலர்க்குழுவினர் சார்பில்

வே.சிவகுருநாதன்        

பா.துவாரகன் 

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி :

KALANITHI.K.VAITHEESWARAKURUKKAL

KANDERODAI,

CHUNNAKAM,

JAFFNA,

SRI LANKA.

      

மின்னஞ்சல் :  baladhuvarahan@gmail.com                    

 

 

கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான

ஆக்கங்கள் கோரும் விண்ணப்பம்

……………………………………………………………………………………….

……………………………………………………………………………………….

……………………………………………………………………………………….

 

விநாயகப் பெருமான் திருவருள் துணை நிற்க.

 

பெருந்தகையீர்!

வணக்கம் பல.

1518 ஆம்  ஆண்டு குளக்கோட்டு மன்னனது அழைப்பின் பேரில் திரு உத்தரகோசமங்கை யென்னுந் திருத்தலத்திலிருந்து வந்து  காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலில் குடியேறிய எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய மங்களேசுவரக் குருக்கள்  பரம்பரை வழிவந்த கலாநிதி க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் சைவத்துக்கும் தமிழிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணி தமிழ் கூறும் நல்லுலகால் ஈழமணித் திருநாட்டால் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று.

 

கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பணியை ஆயிரம் தலையுடைய ஆதிசேடனாலும் கூறிவிடமுடியாது என்பார் சபாரத்தினம் ஆசிரியர் அவர்கள். அவரது பதிப்பு முயற்சிகள் பலவற்றுக்குத் தனித்தனி கலாநிதிப் பட்டம் கொடுக்கத் தகும் என்பார் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள். அவர் ஒரு பௌத்தராக இருந்திருந்தால் அவரது மறைவின் போது இந்த நாட்டில் 3 நாள்கள் துக்கம் அனுட்டிக்கப்பட்டிருக்கும்‚ அவரது பெருமையை மாகாணத்தை ஆள்பவர்கள் அறியாமல் உள்ளமை எமது காலத்துயரம் என்பார் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் விஜயசுந்தரம் அவர்கள். அவருடன் நட்புக்கொண்டவர்கள் அவர்தம் பெருமை அறிந்தவர்கள் பெரும்பேறு பெற்றவர்களே.

 

வரும் செப்ரெம்பர் 22‚ ஐயா அவர்களது 100 ஆவது அகவையை நினைவு கூரும் வேளை அவர் தம் தன்னிகரில்லாப் பணியை‚ வாழ்வை வரும் தமிழ்ச் சந்ததிக்கு ஆவணப்படுத்தி கையளிக்கும் முகமாக முதற்கண் அறிஞர்களிடம் இருந்து கட்டுரைகளைப் பெற்று நூற்றாண்டு விழா மலர் வெளியிட சித்தங் கொண்டோம். கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலர் வியாவில் கணபதீஸ்வரக்குருக்கள் நூலக வெளியீடாக மலர்வதற்கு திருவருள் கை கூடியுள்ளது.

 

வரும் யூலை 31 ஆம் திகதிக்கு (31.07.2015) முன்னதாக கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் அவர்களது பணியை எடுத்துக் கூறும் எழுத்தாக்கங்களை உலகெங்கும் பரந்து வாழும் தகைசான்றோரிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.  மேலும் சைவ சித்தாந்தம்தேவார‚ திருவாசகம் முதலான திருமுறைகளின் பெருமையைக் கூறும் ஆக்கங்கள்‚ ஈழத்தில் சிவ வழிபாடு மற்றும் தமிழ் – மொழி – வரலாறு – கலை – பண்பாடு ஆகிய துறைகள் சார்ந்த பிற மலர்களில் பிரசுரமாகாத தனித்துவமான ஆய்வுக் கட்டுரைகளையும் அறிஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

கட்டுரைகளை க.வைத்தீசுவரக்குருக்கள்‚ கந்தரோடை‚ சுன்னாகம் என்னும் அஞ்சல் முகவரிக்கு அல்லது baladhuvarahan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

ஐயா அவர்கள் 1940 இல் மணிவாசகர் சபையை ஆரம்பித் போது யோகர் சுவாமிகள் ஐயாவுக்கு நினைவு படுத்திய வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ என்ற திருவாசக வரிகளே இம் மலரையும் மணங்கமழச் செய்யும்.

காரைநகர் ஈழத்துச்சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் உடனுறை ஆண்டிக்கேணி ஐயனாரும் வியாவில் ஐயனாரதும் திருப்பாதங்களைப் பணிந்து விண்ணப்பிக்கின்றோம்.

 

நூற்றாண்டு விழா மலர்க்குழு சார்பில்

………………………………………………………..                                             ………………………………………………..

வே.சிவகுருநாதன்                                                                             பா.துவாரகன்         

 

Kindly post your articles to the following address:   

KALANITHI.K.VAITHEESWARAKURUKAL

KANDERODAI,

CHUNNAKAM,

JAFFNA,

SRI LANKA.                   

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நான்காம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.