தேசியமட்டப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

இலங்கை "வாழ்வின் எழுச்சி" திணைகளத்தின் கெக்குலு சிறுவர் கழகங்களுக்கு இடையிலான 2014இம் ஆண்டுக்கான தேசிய மட்ட போட்டிகள் 26.07.2015 கொழும்பில் நடைபெற்றன.

இதில் கிராமிய நடனத்திற்கான போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

தேசிய மட்டபோட்டியில் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றமை கல்லூரி வரலாற்றில் இது முதல் தடைவ என்பது குறிப்பிட தக்கதாகும்.

தேசிய மட்டத்திலான இதே போட்டியில் 2012ஆம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்கு பயிற்ச்சிகளை வழங்கி திறமையான நெறியாளுகை மேற்கொண்ட கல்லூரியின் நடனத்துறை ஆசிரியை திருமதி.சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபரும் கல்லூரி சமூகமும் தங்கள் மனமுவந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியரும் படத்தில் காண்கின்றோம்.

image001