கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டத்திலான முப்பாய்ச்சல் போட்டிக்குத் தெரிவான சி.கோகுலனுக்குப் பாராட்டு

 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகிய செல்வன். சிவசக்திவேல் கோகுலன், செல்வி.A.அமிர்தா, செல்வன்.K.விநோதன் ஆகியோருக்கான பாராட்டு விழா 14.07.2015 அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.செல்லையா கங்காதரன் அவர்களும் கோட்டக்கல்விப்பணி மனை அலுவலரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமாகிய திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் சமூகமளித்திருந்தனர்.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வு – 2015 நிகழ்வில் 19 வயது ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன்.சிவசக்திவேல் கோகுலன் 12.91M நீளம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். இவர் தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகியிருந்தார். 

அத்துடன் செல்வன் K.விநோதன் யாழ் மாவட்டபாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்றும் செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்றும் தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர். 
தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகிய கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சோந்த மேற்படி மூன்று மாணவர்களுக்குமான பாராட்டு நிகழ்வே அண்மையில் கல்லாரியில் நடைபெற்றிருந்தது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பிலும் பாராட்டுப் பரிசு வழங்கப்பட்டது. 

சாதனை படைத்து எமது ஊருக்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் விiளாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு. இன்னாசிமுத்து. அன்ரன்விமலதாஸ் அவர்களும் மற்றும் தனிப்பாட்டு அறிவிப்பாளர் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களும் ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபரும் பராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். 

நிகழ்வில எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.