தேசிய சேமிப்பு வங்கியின் காரைநகர் கிளையினால் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் பிரதேச மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 24ம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய சேமிப்பு வங்கிக் காரைநகர் கிளையில் இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர் அ.கெங்காதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலருமான  ப.விக்னேஸ்வரன்,காரை இந்துக்கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.