தேசிய மட்டப்போட்டிகளுக்குத் தெரிவாகி கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மூன்று மாணவர்கள் சாதனை

gold_medals

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட மட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். 


மாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வன் K.விநோதன் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


இதேவேளையில், செல்வி. S.புருசோத்தமி வடமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 


வெற்றி பெற்ற மாணவர்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்