மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அநுசரணையில் நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

p.g.3

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் கடந்த சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வா.தவபாலன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் திரு.இரதாக்கிருஸ்ணன், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் நலன் விரும்பிகளும் சமூகமளித்திருந்தனர்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய அமரர் R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தினார்.  


கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்' இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் பல்வேறு துறைசார் சிறப்புத்திறன் மிக்க 11 மாணவர்களுக்கு 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளும்'  வழங்கப்பட்டிருந்தன.  
மேலம் சிறப்பு விருதுகளாக தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகளையும் பாடசாலை மட்ட சிறப்பு அணியினருக்கான விருதுகளையும் தேசிய மட்ட சாதனையாளருக்கான விருதுகளும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் வழங்கப்பட்டன.


ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர்.


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் 'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திமூவாயிரம் ரூபா (ரூபா 63,000 ரூபா) நிதி அநுசரiணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் 'அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை' அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 


விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. 


இவ்வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளுக்கு நிகரானதாக மிகநேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு இவ்வாண்டும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.