Tag: காரைச் செய்திகள்
2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா
2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா
அமரர்கள் திரு.திருமதி.கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த (உ/த) 3 பாடங்களிலும் A சித்திபெற்ற மாணவிக்கும், மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா 2017-07-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்), தீவகக் கல்விவலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.விஜயகுமார் (விரிவுரையாளர், தேசியகல்வியியல் கல்லூரி. யாழ்ப்பாணம்) அவர்களும், திரு.S.சதாசிவம் (ஓய்வுநிலை கடதாசிக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.E.ஞானேஸ்வரன்; (ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் கல்லூரியின் "பான்ட்"குழுவினரால் அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமாகியது. விழாவில் 3A சித்திகள் பெற்ற மாணவி செல்வி. மனோகரி சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றமாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குறித்தமாணவர்கள் பெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மாணவர்கட்கு கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதிபர் தனது உரையில் மாணவர் கௌரவிப்பு அனுசரணையாளராக இருந்த அமரர்கள் (பாணந்துறை) முருகேசு கனகலிங்கம் மற்றும் திருமதி பத்மாவதி கனகலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் கல்லூரி அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்கட்கும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார். மற்றும் கைத்தொழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறைக்கு அனுமதி பெற்ற செல்வி சசிகலா அம்பலவாணர் அவர்களும் அதிபருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா
யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்
2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3
பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான
கௌரவிப்பு விழா
காலம் :- 07.07.2017 வெள்ளிக்கிழமை
இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்
நேரம் :-மு.ப 8.00 மணி
தலைவர்
திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்
(கல்லூரி முதல்வர்)
பிரதமவிருந்தினர்
திரு.S.செல்வராசாஅவர்கள்
(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்
சிறப்புவிருந்தினர்
திரு.N.விஜயகுமார் அவர்கள்
(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)
திரு.S.சதாசிவம் அவர்கள்
(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)
கௌரவவிருந்தினர்
திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்
(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)
அனுசரணை
அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்
திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்
யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர்
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017
எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது
3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்
4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள்
7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின்
• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
செல்வி கே. லாவண்யா
செல்வி ந. ஜஸ்மினா
செல்வி கி. சுதர்சனா
• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது.
4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A" தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்
காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியருமாகிய திரு.வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிறுவுனர் தின உரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.பொன் சிவானந்தராசா அவர்கள் ஆற்றவிருக்கின்றார்.
விழாவிற்கான நிதி அநுசரணை மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டும் 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இலிருந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் ‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
காரைநகர் இந்துக் கல்லூரியின் 'மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2015ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும்.
காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில் மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர் மருத்தவக்கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் சென்ற ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி வைப்பிலிட்டிருந்தார். மீண்டும் யூன்27 மேலும் அரை மில்லியன் ரூபாவினை இவர் வைப்பிலிட்டதன்மூலம் நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்நிதியத்தின் அனுசரணையிலான 3வது பரிசில் தின நிகழ்வு எதிர்வரும் யூலை4ஆம் திகதி நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.
காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
காரைநகரில் ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 8.00 மணியளவில் அதிபர் திருமதி அ.கௌரியாம்பாள் தலைமையிலும் காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் காலை 9.00 மணியளவிலும் இரு மாடிக் கட்டடங்களின் திறப்பு விழா இடம்பெற்றது.
திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் புதிய கட்டடங்களைத் நாடா வெட்டித் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தியும் கௌரவ விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ம.நீரஜாவும் கலந்துகொண்டனர்.
அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடமும் நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசின் நிதி உதவியுடன் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால்சுப்பிரமணியவித்தியாசாலையிலும்,யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் தலா 8..5 மில்லியன் ரூபா செலவில் இரு மாடிக்கட்டடங்கள் அமைக்கப்பட்டதுடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் 6 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை
காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம்
காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 6ம் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 6ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 6ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!
காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!
காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டமாக நமது காரைநகர் மண்ணிற்கு என்று தனித்துவமான இயற்கை விவசாய பாரம்பரியங்கள் உள்ளன அவை நவீன மயப்படுத்தலின் மூலம் அழிவடைந்து செல்வதை அனைவராலும் உணர முடிகிறது. அப் பாரம்பரியங்களை பாதுகாத்து நமது மண்ணின் தனித்துவத்தினை நிலை நிறுத்துவதற்காக இயற்கை விவசாயத்தினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் காரைநகர் கமநலசேவைகள் நிலையத்தில் காரைநகர் விவசாய பெருங்குடி மக்களுக்கான விசேட கருத்தரங்கம் 24.06.2017 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் இயற்கை விவசாயம் சார்பான உரைகளை முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கமநல ஆணையாளரும் தற்போதய காரைநகரில் பிரதேச செயலருமாக திரு.ஈ.தயாரூபன் அவர்களும் காரைநகர் பிரதேச விவசாய போதனாசிரியர் அவர்களும் வழங்கியிருந்தனர். இந் நிகழ்வில் காரைநகரின் விவசாய சம்மேளனங்கள் சார்பாக பலரும் கலந்துகொண்டு இயற்கை முறையிலான விவசாய முறைகளை கேட்டு அறிந்து பயன்பெற்றனர்.
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 4ம் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் 4ம் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்வு காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 4ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 4ம் பகல் திருவிழா காணொளி!