Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 28.06.2016 அன்று நடைபெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 28.06.2016 நடைபெற்ற 4ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 28.06.2016  நடைபெற்ற 4ம் பகல் திருவிழா காட்சிகள்

 

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 28.06.2016 நடைபெற்ற 4ம் இரவு திருவிழா காட்சிகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கான கொடுப்பனவு எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபை ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட  2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கான கொடுப்பனவு எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபை ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாக வறிய மக்களுக்கான கண் அறுவைச்சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016இல் காரை அபிவிருத்திச் சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 25.03.2016இல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப்பேருக்கு 31.03.2016இலும், இதுவரை மொத்தமாக 27 பேருக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 4பேருக்கு மூக்குகண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது.  31 பயனாளிகளுக்கு  சிகிச்சை நடைபெற்றது. இவர்களுக்கான செலவுத்தொகை ஐந்துலட்சத்து அறுபத்திரெண்டாயிரத்து இருநூற்றிப்பத்து (567210.00) ரூபாய்கள் எமது தாய்சங்கத்திடம் 28.06.2016இல் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை  அறியத்தருகின்றோம். 

2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கு எம்மோடு சேர்ந்து உழைத்த காரை அபிவிருத்திச்சபை தலைவர், திரு.ப.விக்கினேஸ்வரன், செயலாளர், திரு.திருப்புகலூர்சிங்கம், பொருளாளர் திரு.க.பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், இச் செயற்பாட்டிற்கு உன்னதமான ஆதரவு வழங்கிய சுவிஸ் வாழ் காரைநகர் நல்உள்ளங்களுக்கும். எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


                                  "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

                                                         நன்றி

                                                                                                             இங்ஙனம்.
                                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                            29.06.2016

   

 

          

 

 

 

காரைநகர் இ.போ.சபையின் பொன்விழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள்.

காரைநகர் இ.போ.சபையின் பொன்விழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள்.

இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் காரைநகர் சாலை அபிவிருத்திக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பொன்விழாச் சபையினரால் காரைநகர் அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் எமது காரைநகர் சாலை 1976ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. 1990இல் இடம்பெற்ற யுத்தத்தினால்   இச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை மீளவும் திருத்துவதற்கு இ.போ.சபையின் மான்புமிகு அமைச்சரிடம் நிதியுதவி கேட்டபோது திருத்துவதற்கான நிதி தங்களிடம் இல்லையென்று கூறிவிட்டார்கள்.

தற்போதும் எமது காரைநகர் சாலை தொடர்ந்தும மிகமோசமாகப் பழுதடைந்தே காணப்படுகின்றது. எமது சாலையை அழியவிடாது மீளவும் புனரமைத்துத் தருவதற்கு காரைநகருக்கு வெளியேயும்  வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த காரைநகர் மக்கள் நிதியுதவி செய்து தருமாறு தங்களை காரைநகர் சாலையின் பொன்விழாவுக்கும், அபிவிருத்திக்குமான குழு சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். கீழ்கானும் வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளன.


காரைநகர் சாலையினுள் பஸ் வண்டிகள்

செல்லும் பாதை புனரமைப்பு                                      180000.00


பஸ் பழுதுபார்க்கும் ராம்ப்                                            500000.00


சுற்றுவேலி                                                                           300000.00


வயறிங்வேலை                                                                   200000.00


கட்டிடத்திருத்தம்                                                               200000.00


மொத்தம்                                                                           1,380000.00

 

karainagar-development-society-29.06.2016

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

1.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/swisskarainews2-28.06.2016.pdf

 

2.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/karainagar-development-society-29.06.2016-1.pdf

 

 

 

 

 

 

 

இளைப்பாறிய K.குலேந்திரன், T.ராஜேந்திரம் அவர்களின் பிரிவு உபசார விழா 26-06-2016 அன்று நடைபெற்றது!

இளைப்பாறிய  K.குலேந்திரன், T.ராஜேந்திரம்  அவர்களின் பிரிவு உபசார விழா  26-06-2016 அன்று நடைபெற்றது! 

  26-06-2016 அன்று நடைபெற்ற காரைநகர் அஞ்சல் விடுமுறை விடுதியில் பிரிவு உபசார விழாவில் தலைவர் திரு .S.சக்திதாஸன் தலைமையில் நடைபெற்றது (தபால் அதிபர் தபாலகம் காரைநகர்)  விருந்தினர்களாக திரு.T. ஜெயராஜ்  தபால் அதிபர் தபாலகம் யாழ்ப்பாணம்,  திரு .K.குலேந்திரன் ஓய்வு நிலை அஞ்சல் ஊழியர் தபாலகம் காரைநகர், திரு.T. ராஜேந்திரம் அஞ்சல் ஊழியர் தபாலகம் காரைநகர் ஆகியோர் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2016 நடைபெற்ற 3ம் திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2016  நடைபெற்ற 3ம் பகல் திருவிழா காட்சிகள்

View all

 
 

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2016  நடைபெற்ற 3ம் இரவு திருவிழா காட்சிகள்

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை!

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை 

YG24W

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான (Best Hardware Application Team) வெற்றிக் கேடயத்தை காரைநகர் இந்துக் கல்லூரியின் அணி இவ்வாண்டும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub பெருமையுடன் நடத்திய Yarl Geek Challenge 5 Juniorsபோட்டிக்கான மாகாண மட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 2016.06.26அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. வடமாகாணத்தைச் சேர்ந்த 12கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் முன்னணிப் பாடசாலைகளின் அணிகள் உட்பட 31 மாணவ அணிகள் மேற்படி போட்டியில் பங்குபற்றியிருந்தன.

வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக் கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் “சிறந்த வன்பொருள் அணி” (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி தமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக காரை இந்துவின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு அறியத்தந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற Yarl Geek Challenge 5 Juniors – 3 மற்றும் Yarl Geek Challenge 5 Juniors – 4 போட்டிகளிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக்கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி வெற்றிக் கேடயத்தைத் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அணியில் பங்குபற்றிய மாணவர் விபரம் வருமாறு :

SelectedTeam

இவ்வணியினருக்கான வெற்றிக் கேடயத்தையும் சான்றிதழையும் Yarl IT Hubநிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வன் க. கஜந்தன், செல்வன் சி. தூயவன், செல்வன் க. சிவதர்சன் ஆகியோர் பெற்றுக் கொள்வதனையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.

YG24YG22YG23

இச்சாதனையை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரிய மணிகளுக்கும் பாடசாலையை வழிநடத்திவரும் அதிபர், பதில் அதிபர், பகுதித் தலைவர் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2016 இன்று நடைபெற்ற 3ம் திருவிழா காணொளி

 

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2016 நடைபெற்ற 2ம் திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2016  நடைபெற்ற 2ம் பகல் திருவிழா காட்சிகள்

 

 

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2016  நடைபெற்ற 2ம் இரவு திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2016 நடைபெற்ற 2ம் இரவு திருவிழா நாத சங்கமம் இசை நிகழ்வு காணொளி

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2016 இன்று நடைபெற்ற 2ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2016 இன்று நடைபெற்ற கொடியேற்ற காணொளி

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று நடைபெற்ற 1ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலய 1ம் திருவிழா பகல் காட்சிகள்

View all

 
 
 
 
 

காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலய 1ம் இரவு திருவிழா காட்சிகள்

காரைநகர் அஞ்சல் விடுமுறை விடுதி பிரிவு உபசார அழைப்பிதழ் 26.06.2016 நாளை காலை 11.00 மணிக்கு

IMG_9414 (Copy)IMG_9413 (Copy)

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!

CKCA logo

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக இதுவரை 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் கடந்த வருடம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.


அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்தடவையாக 05.11.2015 அன்று முதல் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 29,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. 


நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp content/uploads/2016/06/School_submission_for_interest_PMTS-2.pdf

 

 

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

மேற்படி விழா கல்லூரியின் அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் 24.06.2016 அன்று நடைபெற்றது. இவ் விழாவில்,

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) தீவக கல்வி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.T.மயுரன் (முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.S.கணநாதன் (உரிமையாளர் Quency Distributors Colombo)  அவர்களும் அவர் வராமையால் அவர் சார்பில் திரு.வி.நாகேந்திரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அத்துடன் இவ் விழாவிற்கு அனுசரணையாளராக இருக்கும் Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்களுக்குத் தனது உளம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவ் விழாவில் 

க.பொ.த (சா.த) பரீட்சை 2015 5A யும் அதற்குக் கூடிய பேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்(Memento) பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏனைய க.பொ.த (உ.த) தகைமை பெற்ற சகல மாணவர்களுக்கும் பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழா ஆரம்பமாக முன்னர் கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

DSC02387 DSC02389 DSC02390 DSC02391 DSC02392 DSC02393 DSC02394 DSC02395 DSC02397 DSC02398 DSC02400 DSC02401 DSC02402 DSC02404 DSC02406 DSC02407 DSC02410 DSC02413 DSC02414 DSC02417 DSC02421 DSC02422 DSC02423 DSC02424 DSC02426 DSC02427 DSC02429 DSC02431 DSC02432 DSC02433 DSC02434 DSC02436 DSC02438 DSC02442 DSC02443 DSC02444 DSC02445 DSC02446 DSC02447 DSC02448 DSC02449 DSC02450 DSC02451 DSC02452 DSC02453 DSC02454 DSC02456 DSC02457 DSC02458 DSC02459 DSC02460 DSC02461 DSC02466

காரை இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

காரை இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (12.06.2016) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் வழிநடத்தலிலும், உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன்.சரவணபவானந்தசர்மா பிரதாபசர்மா தலைமையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.ச.பாஸ்கரன் அவர்களும் பாரியாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் திருமதி.பிரபாலினி தனம் அவர்களும், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.சுமதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.க.நிமலதாசன்; அவர்களும், அயல் பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இவ்விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் "நதி" என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

khc1 khc2 khc4 khc5 khc6 khc7 khc8 khc9 khc10 khc11 khc12 khc13

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016 மற்றும் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்

THIKKARAI MURUGAN KOVIL

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில்  பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016 மற்றும் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்  25.06.2016  சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் மிகச் சிறப்பாக இடம்பெற உள்ளது.

களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் அனைத்து திருவிழாக்களும் நேரடி ஒளிபரப்பு http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்

கொடியேற்றம்: 25.06.2016   சனிக்கிழமை 

சப்பறத்திருவிழா: 02.07.2016  சனிக்கிழமை

தேர்த்திருவிழா: 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை 

 தீர்த்தத்திருவிழா:04.07.2016 திங்கட்கிழமை 

பூங்காவனத்திருவிழா:05.07.2016 செவ்வாய்க்கிழமை

THIKKARAI MURUGAN KOVIL1 (1) 2 (1) 3 (1) 4 (1) 5 (1) 6 (1) 7 (1) 8 (1) 9 (1) 10 (1) 11 (1)

காரைநகர் ஊரி அன்புச்சோலை முன்பள்ளியின் சிறார்களுக்கான விளையாட்டு விழா இன்று 15.06.2016 ஊரி பொது விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது

காரைநகர் ஊரி அன்புச்சோலை முன்பள்ளியின் சிறார்களுக்கான விளையாட்டு விழா இன்று 15.06.2016 ஊரி பொது விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.

 பிரதம விருந்தினராக காரை அபிவிருத்திசபையின் பொருளாளரும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பிராந்திய தலைவர் சி.ஏ.சி.எம் வண.ஜே.ஞானப்பிரகாசம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறார்களின் விளையாட்டு நிகழ்வை கண்டு கழிக்க பிரதேச மக்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர். 

2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

 

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றுகூடலும்,மதிய போசன விருந்துபசார நிகழ்வும் நதி சஞ்சிகை வெளியீடும் 12.06.2016 அன்று நடைபெற்றது.

IMG_1308 IMG_1310 IMG_1313 IMG_1314 IMG_1315 IMG_1316 IMG_1318 IMG_1319 IMG_1320 IMG_1321 IMG_1322 IMG_1323 IMG_1324 IMG_1327 IMG_1328 IMG_1330 IMG_1332 IMG_1334 IMG_1335 IMG_1337 IMG_1338 IMG_1343 IMG_1344 IMG_1346 IMG_1347 IMG_1348 IMG_1350 IMG_1351 IMG_1352 IMG_1353 IMG_1355 IMG_1356

2016ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டம் ( காரைநகர் களபூமி திக்கரை இந்து இளைஞர் மன்றம் )

                                              2016ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டம்
                    ( காரைநகர் களபூமி திக்கரை இந்து இளைஞர் மன்றம் )
 

அன்புடையீர்!
 
            எமது மன்றத்தின் 2016ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 12.06.2016  பிற்பகல் 12.00PM மணியளவில்  காரைநகர் களபூமி திக்கரை இந்து இளைஞர்  மண்டபத்தில்  நடைபெற   இருப்பதால் அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாக தெரிவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கின்றோம்.

  நன்றி

சி.தவரஞ்சன்
உப தலைவர்

 

காரைநகர் பிரதேச செயலர் ஊடாக 220 பேர் பயனளிக்கும் வகையில் காரைநகர் கலாசார மண்டபத்தில் இலவச கண் பரிசோதனையும் இலவச கண்ணாடியும் வழங்கப்பட்டது.

காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்த குருணாகல் வர்த்தகரின் புதல்வர்களின் அனுசரணையில் காரைநகர் பிரதேச செயலர் ஊடாக 220 பேர் பயனளிக்கும் வகையில் காரைநகர் கலாசார மண்டபத்தில் இலவச கண் பரிசோதனையும் இலவச கண்ணாடியும் வழங்கப்பட்டது.

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

காரைநகர் மருதடி விநாயர் ஆலய திரிதள கோபுரத்திற்கான அடிக்கல்நாட்டு விழா 08.06.2016 புதன்கிழமை நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் மேற்படி நிகழ்வுகள் 05.06.2016 பி.ப 12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் யோ.தினேஸ் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக Dr.ப.நந்தகுமார் (YARLTONIAN) (சுகாதார வைத்திய அதிகாரி தெல்லிப்பழை) அவர்களும்,

சிறப்பு விருந்தினராக திரு.G.V.இராதாகிருஸ்ணன் (ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்பாளர் தீவக்க்கல்வி வலயம்) அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) (கோட்டக்கல்விப்பணிப்பாளர் காரைநகர்), திரு.க.பாலச்சந்திரன் (YARLTONIAN) (பொருளாளர் ,காரை அபிவிருத்திச்சபை),திரு.பா.பாலமுரளி (ஆசிரியர் நடேஸ்வராக்கல்லூரி காங்கேசன்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_1379 copy DSC_1382 copy DSC_1383 copy DSC_1384 copy DSC_1385 copy DSC_1386 copy DSC_1387 copy DSC_1388 copy DSC_1389 DSC_1390 DSC_1393 DSC_1394 DSC_1395 DSC_1406 DSC_1410 DSC_1411 DSC_1414 DSC_1415 DSC_1417 DSC_1419 DSC_1420 DSC_1421 DSC_1422 DSC_1423 DSC_1424 DSC_1425 DSC_1427

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KDS LOGO PHOTOCKCA logo

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/canada.pdf

 

canada0001

காரைநகர் தங்கோடை கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளிக் கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை 05.06.2016 நடைபெற்றது.

தங்கோடை கிராம அபிவிருத்திச் சங்கம் தங்கோடை முன்பள்ளி புதிய கட்டடத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக மாண்புமிகு திருமதி.விஜயகலா மகேஸ்வரன் MP( சிறுவர் விவகார இராஜாங்க  அமைச்சர் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இணைத்தலைவர் ஒருங்கிணைப்பு குழு யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டம்) அவர்களும்,

 சிறப்பு விருந்தினராக உயர்திரு.நா.வேதநாயகன் (அரச அதிபர்-யாழ் மாவட்டச் செயலாளர்) அவர்களும்,

கௌரவ விருந்தினர்கள் திரு.சுந்தரலிங்கம் அன்ரூ (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் யாழ் பிரதேச செயலகம்) மற்றும் செல்வி.க.தவமணி (ஆரம்பகால ஆசிரியை தங்கோடை முன்பள்ளி)அவர்களும்  கலந்து சிறப்பித்தனர். 

 அத்துடன் மரம் நாட்டுதல் நிகழ்வும், முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வும் ,முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல் நிகழ்வும்.சிறப்பு பட்டிமன்றமும்  இடம் பெற்றது.

IMG_9064 (Copy) IMG_9065 (Copy) IMG_9066 (Copy) IMG_9067 (Copy) IMG_9068 (Copy) IMG_9069 (Copy) IMG_9071 (Copy) IMG_9072 (Copy) IMG_9073 (Copy) IMG_9074 (Copy) IMG_9075 (Copy) IMG_9077 (Copy) IMG_9078 (Copy) IMG_9079 (Copy) IMG_9080 (Copy) IMG_9081 (Copy) IMG_9082 (Copy) IMG_9083 (Copy) IMG_9084 (Copy) IMG_9085 (Copy) IMG_9086 (Copy) IMG_9087 (Copy) IMG_9088 (Copy) IMG_9089 (Copy) IMG_9090 (Copy) IMG_9091 (Copy) IMG_9092 (Copy) IMG_9093 (Copy) IMG_9094 (Copy) IMG_9095 (Copy) IMG_9096 (Copy) IMG_9097 (Copy) IMG_9098 (Copy) IMG_9101 (Copy) IMG_9102 (Copy) IMG_9103 (Copy) IMG_9104 (Copy) IMG_9105 (Copy) IMG_9107 (Copy) IMG_9108 (Copy) IMG_9109 (Copy) IMG_9110 (Copy) IMG_9111 (Copy) IMG_9112 (Copy) IMG_9113 (Copy) IMG_9114 (Copy) IMG_9115 (Copy) IMG_9116 (Copy) IMG_9117 (Copy) IMG_9118 (Copy) IMG_9119 (Copy) IMG_9120 (Copy) IMG_9121 (Copy) IMG_9122 (Copy) IMG_9124 (Copy) IMG_9125 (Copy) IMG_9126 (Copy) IMG_9127 (Copy) IMG_9128 (Copy) IMG_9129 (Copy) IMG_9130 (Copy) IMG_9131 (Copy) IMG_9132 (Copy) IMG_9133 (Copy) IMG_9134 (Copy) IMG_9135 (Copy) IMG_9136 (Copy) IMG_9137 (Copy) IMG_9138 (Copy) IMG_9139 (Copy) IMG_9140 (Copy) IMG_9141 (Copy) IMG_9142 (Copy) IMG_9143 (Copy) IMG_9144 (Copy) IMG_9146 (Copy) IMG_9147 (Copy) IMG_9148 (Copy) IMG_9149 (Copy) IMG_9150 (Copy) IMG_9151 (Copy) IMG_9152 (Copy) IMG_9153 (Copy) IMG_9154 (Copy) IMG_9155 (Copy) IMG_9156 (Copy) IMG_9157 (Copy) IMG_9158 (Copy) IMG_9159 (Copy) IMG_9160 (Copy) IMG_9161 (Copy) IMG_9162 (Copy) IMG_9163 (Copy) IMG_9164 (Copy) IMG_9165 (Copy) IMG_9166 (Copy) IMG_9167 (Copy) IMG_9168 (Copy) IMG_9169 (Copy) IMG_9170 (Copy) IMG_9171 (Copy) IMG_9172 (Copy) IMG_9173 (Copy) IMG_9174 (Copy) IMG_9175 (Copy) IMG_9176 (Copy) IMG_9177 (Copy) IMG_9178 (Copy) IMG_9179 (Copy) IMG_9180 (Copy) IMG_9181 (Copy) IMG_9182 (Copy) IMG_9183 (Copy) IMG_9184 (Copy) IMG_9185 (Copy) IMG_9186 (Copy) IMG_9187 (Copy) IMG_9188 (Copy) IMG_9189 (Copy) IMG_9190 (Copy) IMG_9191 (Copy) IMG_9192 (Copy) IMG_9193 (Copy) IMG_9194 (Copy) IMG_9195 (Copy) IMG_9196 (Copy) IMG_9197 (Copy) IMG_9198 (Copy) IMG_9199 (Copy) IMG_9200 (Copy) IMG_9201 (Copy) IMG_9202 (Copy) IMG_9203 (Copy) IMG_9204 (Copy) IMG_9205 (Copy) IMG_9206 (Copy) IMG_9207 (Copy) IMG_9208 (Copy) IMG_9209 (Copy) IMG_9210 (Copy) IMG_9211 (Copy) IMG_9212 (Copy) IMG_9213 (Copy) IMG_9214 (Copy) IMG_9215 (Copy) IMG_9216 (Copy) IMG_9217 (Copy) IMG_9218 (Copy) IMG_9219 (Copy) IMG_9220 (Copy) IMG_9221 (Copy) IMG_9222 (Copy) IMG_9223 (Copy) IMG_9224 (Copy) IMG_9225 (Copy) IMG_9226 (Copy) IMG_9227 (Copy) IMG_9228 (Copy) IMG_9229 (Copy) IMG_9230 (Copy) IMG_9231 (Copy) IMG_9232 (Copy) IMG_9233 (Copy) IMG_9234 (Copy) IMG_9235 (Copy) IMG_9236 (Copy) IMG_9237 (Copy) IMG_9238 (Copy) IMG_9239 (Copy) IMG_9240 (Copy) IMG_9241 (Copy) IMG_9243 (Copy) IMG_9244 (Copy) IMG_9245 (Copy) IMG_9247 (Copy) IMG_9248 (Copy) IMG_9249 (Copy) IMG_9250 (Copy)

யாழ் வீரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் 04.06.2016 அன்று காவேரி கலாமன்றத்தின் 12ம் ஆண்டு நிறைவு விழாவில் 2016ம் ஆண்டிற்கான சமூகக்காவலர் விருதை பயிரிக்கூடல்,காரைநகரைச் சேர்ந்த சுகாதாரப் பரிசோதகர் கந்தையா தியாகலிங்கம் அவர்கள் பெற்றுள்ளார்

யாழ் வீரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில்  04.06.2016 அன்று  காவேரி கலாமன்றத்தின் 12ம் ஆண்டு நிறைவு விழாவில் 2016ம் ஆண்டிற்கான சமூகக்காவலர் விருதை  பயிரிக்கூடல்,காரைநகரைச் சேர்ந்த  சுகாதாரப் பரிசோதகர் கந்தையா தியாகலிங்கம்  அவர்கள் பெற்றுள்ளார் 

 

IMG_8964 (Copy) IMG_8966 (Copy) IMG_8969 (Copy) IMG_8970 (Copy) IMG_8971 (Copy) IMG_8975 (Copy) IMG_8978 (Copy) IMG_8979 (Copy) IMG_8980 (Copy) IMG_8982 (Copy) IMG_8983 (Copy) IMG_8987 (Copy) IMG_8991 (Copy) IMG_8996 (Copy) IMG_8998 (Copy) IMG_9006 (Copy) IMG_9009 (Copy) IMG_9010 (Copy) IMG_9011 (Copy) IMG_9012 (Copy) IMG_9013 (Copy) IMG_9014 (Copy) IMG_9015 (Copy) IMG_9016 (Copy) IMG_9017 (Copy) IMG_9018 (Copy) IMG_9019 (Copy) IMG_9020 (Copy) IMG_9021 (Copy) IMG_9022 (Copy) IMG_9023 (Copy) IMG_9024 (Copy) IMG_9025 (Copy) IMG_9026 (Copy) IMG_9029 (Copy) IMG_9046 (Copy) IMG_9047 (Copy) IMG_9051 (Copy) IMG_9052 (Copy) IMG_9055 (Copy) IMG_9056 (Copy) IMG_9058 (Copy) IMG_9059 (Copy) IMG_9060 (Copy) IMG_9061 (Copy) IMG_9062 (Copy) IMG_9063 (Copy)

காரைநகர் தங்கோடை கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளிக் கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 05.06.2016 பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது

12

Letter_0003 (2)Letter_0004 (2)