Tag: காரைச் செய்திகள்
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம்- 5ம்,6ம்,7ம் பகல்,இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 07.07.2016 நடைபெற்ற 7ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 07.07.2016 நடைபெற்ற 7ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 06.07.2016 நடைபெற்ற 6ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 06.07.2016 நடைபெற்ற 6ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 05.07.2016 நடைபெற்ற 5ம் இரவு திருவிழா காணொளி!
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம்- கொடியேற்றம்,1ம்,2ம்,3ம்,4ம் பகல்,இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 04.07.2016 நடைபெற்ற 4ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 04.07.2016 நடைபெற்ற 4ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 03.07.2016 நடைபெற்ற 3ம் இரவு திருவிழா இசை நிகழ்வு காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 03.07.2016 நடைபெற்ற 3ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 01.07.2016 நடைபெற்ற 2ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 02.07.2016 நடைபெற்ற 2ம் பகல் திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 01.07.2016 நடைபெற்ற 1ம் இரவு திருவிழா காணொளி!
காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 01.07.2016 நடைபெற்ற கொடியேற்ற திருவிழா காணொளி!
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2
மேற்படி கருத்தரங்கு-2 06.07.2016 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு யா/யாழ்ற்றன் கல்லூரியில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அணுசரணையுடன் நடைபெற இருப்பதனால் தரம் 5 மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
ப.விக்கினேஸ்வரன்
தலைவர்
காரைநகர் அபிவிருத்திச் சபை
காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்
காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்
பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்
காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் திங்கட்கிழமை (04.07.2016) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளாக” தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சா-த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவி செல்வி.பா.குலமதி அவர்களுக்கும், க.பொ.த (உ-த) பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 8 மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு:
திரு சுப்பிரமணியம் அரிகரன் அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய தந்தை S.P.S என அழைக்கப்படும் அமரர் சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசு க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையில் தோற்றி பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொண்ட கணிதத்துறை மாணவி செல்வி ஹேதினி செல்வராசா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற 6 மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் ‘அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை’ அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும்,
க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவி செல்வி தர்ஜிகா மூர்த்திக்கு ‘அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை’ அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்
பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான சிறப்பு விருதாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. வினோதன் அவர்களுக்கு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ‘அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக” அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதுகளின் வரிசையில் சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் சி. கோகுலன் அவர்களும், சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி தே. றோமிலா அவர்களும் பெற்றுக் கொண்டனர். இவ்விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான ‘அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக’ அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார்.
சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திநான்காயிரம் ரூபா (64,000 ரூபா) நிதி அநுசரணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறப்பு விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார். கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக கல்லூரியின் 2015 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களாக திரு ச. அரவிந்தன் அவர்களும் திருமதி ப. முகுந்தன் அவர்களும் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளையில் இவ்வாண்டு கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கப் பரிசினை” 2015 ஆம் ஆண்டுக்கான சிறப்பு அறிவிப்பாளர் செல்வன் க. வினோதன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்டச் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளர் திருமதி ச.பரமானந்தம்,காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.நிதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் காரைநகர் பிரதேசத்தில் உள்ள விதவைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு பயனாளிகளுக்குத் தென்னம் பிள்ளைகளும் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காரைநகர்அபிவிருத்திச்சபைஉறுப்பினர்கள்,அங்கத்தவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 02.07.2016 இன்று நடைபெற்ற 8ம் பகல் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 02.07.2016 இன்று நடைபெற்ற 8ம் பகல் திருவிழா காட்சிகள்
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 01.07.2016 அன்று நடைபெற்ற 7ம் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 01.07.2016 அன்று நடைபெற்ற 7ம் பகல் திருவிழா காட்சிகள்
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 01.07.2016 அன்று மாலை நடைபெற்ற 7ம் நாள் வேட்டைத்திருவிழா காட்சிகள்
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 01.07.2016 அன்று நடைபெற்ற 7ம் இரவு திருவிழா காட்சிகள்
கனடா- காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் காரை அபிவிருத்தி சபை ஊடாக நடாத்தும் விதவைகள் தினம் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது!
கனடா- காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் காரை அபிவிருத்தி சபை ஊடாக நடாத்தும் விதவைகள் தினம் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இடம்: காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலக மண்டபம்
காலம்: 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி
தலைமை: திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள்
தலைவர் ,காரை அபிவிருத்தி சபை
விழா சிறப்புற அனைவரையும் அழைக்கின்றோம்
காரை அபிவிருத்தி சபை
காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்
காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்
பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வரும் திங்கட்கிழமை, ஜூலை, 4, 2016 அன்று காலை 9:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையில் நடைபெற உள்ளது.
பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.அ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
முழமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.
காரைநகர் மழலைகள் பூங்கா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 18.06.2016 சனிக்கிழமை அன்று பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
காரைநகர் மழலைகள் பூங்கா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 18.06.2016 சனிக்கிழமை அன்று பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மழலைகள் பூங்கா பாலர் பாடசாலையின் தலைவரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபருமான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் பி.செல்வக்குமாரும் சிறப்பு விருந்தினராக தபாலதிபர் க.நிமலதாசனும் கௌரவ விருந்தினராக லண்டனிலிருந்து வருகை தந்துள்ள முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் இ.சிவசுப்பிரமணியமும் கலந்துகொண்டனர்.
காரைநகர் மெய்கண்டான் பாடசாலை நுழைவாயில் திறப்புவிழா 24.06.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது!
காரைநகர் மெய்கண்டான் பாடசாலை நுழைவாயில் திறப்புவிழா 24.06.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது!
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.06.2016 நடைபெற்ற 6ம் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.06.2016 நடைபெற்ற 6ம் பகல் திருவிழா காட்சிகள்
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.06.2016 மாலை நடைபெற்ற மாம்பழத்திருவிழா காடசிகள்
காரைநகர் களபூமி திக்கரை அருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.06.2016 நடைபெற்ற 6ம் இரவு திருவிழா காட்சிகள்