காரைநகர் மழலைகள் பூங்கா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 18.06.2016 சனிக்கிழமை அன்று பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மழலைகள் பூங்கா பாலர் பாடசாலையின் தலைவரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபருமான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் பி.செல்வக்குமாரும் சிறப்பு விருந்தினராக தபாலதிபர் க.நிமலதாசனும் கௌரவ விருந்தினராக லண்டனிலிருந்து வருகை தந்துள்ள முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் இ.சிவசுப்பிரமணியமும் கலந்துகொண்டனர்.