காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.
காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 11ம் திகதி (11.08.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காரைநகர் சைவமகா சபை மண்டபத்தில் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெறது. இக் கூட்டத்திலேயே சபையின் புதிய தலைவராக இடைப்பிட்டியைச் சேந்தவரும் ஓய்வு நிலை வங்கியாளரும் இலண்டனில் வசித்து தற்போது காரைநகரில் நிரந்தரமாகக் குடியேறி பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான இராமநாதன் சிவசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.
இதில் செயலாளராக சுப்பிரமணியம் செந்தூரனும் (தங்கோடை),பொருளாளராக முருகேசு பரம்தில்லைராசாவும் (களபூமி), உப தலைவராக கணேசபிள்ளை அருள்ராசாவும் (சின்னாலடி), உப செயலாளராக கை.நாகராசாவும் (இலகடி) தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 09 கிராம சேவையாளர் பிரிவகளில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிவாகி உள்ளனர்.
வரதராசா சிறிரங்கன்,
விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்,
இராசசிங்கம் திருப்புகழூர்சிங்கம்,
நித்தியானந்தம் சபேசன்,
வேலுப்பிள்ளை மாணிக்கம்,
கந்தசாமி விக்னேஸ்வரன்,
வேலுப்பிள்ளை சபாலிங்கம்,
நாகலிங்கம் பாலகிருஸ்ணன்,
ஆண்டிஜயா அருள்ராசா ஆகியோர் உறுப்பினர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.