Category: Google Photos
75ஆவது ஆண்டு பவளவிழா உறியடி வைபவம் 2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
காரைநகர் கிழவன்காடு கதிர்வேலாயுத சுவாமி கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சாத்துப்படி ஊர்வலமாக 4.00 மணியளவில் சிதம்பராமூர்த்தி கேணியடி வைரவர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு வைரவருக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று வெற்றிநாதன் அரங்கின் முன்பாக உறியடி வைபவம் இடம்பெற்றது. அத்தருணம் ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாதகான மழை பொழிந்தனர்.
காரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி 18.04.2015 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பிரதேச விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலர் திருமதி தே.பாபு தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்கள் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் பாண்வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக மகளீர் விவகாரப் பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும்; கலந்துகொண்டனர்.
நிகழ்வில் காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக சுவிஸ் நாட்டில் வதியும் சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன.
தீவக வலய மட்டத்திலான 2014 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான ஆய்வுகூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி Best Laboratory Award விருதினைப் பெற்றுக் கொண்டது
தீவக வலயத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளிலுள்ள (தரம் 6-13) விஞ்ஞான ஆய்வுகூடங்களை சிறந்த முறையில் பேணும் பாடசாலைகள் 10 இனை தீவக வலயக் கல்விப்பணிமனை தெரிவு செய்துள்ளது.
அப்பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரியும் சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பேணுவதற்கும் மாணவர்கள் சிறந்த முறையில் அதனைப் பயன்படுத்துவதற்குமான Best Laboratory Award விருதினை (2014 ஆம் ஆண்டுக்கான) பெற்றுக்கொண்டது.
V. Murugamoorthy
Principal
Yarlton College
காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.
காரைநகர் சிவன் கோவில் இன்று வியாழக்கிழமை (02.04.2015) இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.
பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் சோமாஸ்கந்தப் பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் மாமணிவீதியாம் மூன்றாம் வீதியில் தேரில் உலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
நடராஜப்பெருமானது புதிய சிற்பத்தேர் திருத்தவேலை காரணமாக இம்முறை ஓடாத காரணத்தால் சோமாஸ்கந்தர் அம்பாளின் தேரிலே வலம்வந்தமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை (01.04.2015) இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பறத்திருவிழாக் காட்சிகள்.
பெருந்திரளான பத்தர்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் முழங்க மூன்றாம் வீதியில் சுந்தரேஸ்வரப்பெருமான் தனத பரிவாரமூர்த்திகளுடன் சப்பறத்தில் உலா வந்தது அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்
.இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டபப் பூசையையடுத்து இரவு 8.00 மணிக்கு சப்பறத்தில் ஆரோகனித்த சுந்தரேஸ்வரர் இரவு 11.00 மணியனவில் தனது இருப்பிடம் வந்தார்.
காரைநகர் சிவன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) இடம்பெற்ற ஜந்தாம் நாள் திருவிழா பகல் காட்சிகள்.
ஆலயத்திற்கு வருகைதந்த திருவெண்ணாமலை திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு எழுந்தருளி மகேஸ்வர பூசையில் கலந்துகொண்டதுடன் அடியார்களுக்கும் அருளாசி வழங்கி ஈழத்துச் சிதம்பரத்தில் தாம் கண்ட பெருமைகளையும் எடுத்துக்கூறினார்.இங்கு அமைக்கப்பட்டுள்ள நடராஜரின் 108 தாண்டவங்கள் வேறு எங்கும் இல்லாதவாறு அற்புதமாக அமைக்கப்பட்டள்ளதுடன்,நடராஜர் திருவுருவமும் மிகவும் அற்புதமாக உள்ளது என்றார்.
ஈழத்துச் சிதம்பர மகேஸ்வரன் அறப்பணி நிலையம்,மாணிக்கவாசகர் மடாலயம் என்பவற்றில் அன்னதானமும் தினமும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் கோயில் சங்காபிஷேகம் நேரடி ஒளிபரப்பு
இலங்கை நேரம்: சனிக்கிழமை(21.03.2015) காலை 6:00 மணி முதல்
கனடா நேரம்: வெள்ளிக்கிழமை (20.03.2015) இரவு 8:30 முதல்
மேற்படி நேரலை ஒளிபரப்பு இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும்.
உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்கள் சங்காபிஷேக காட்சிகளைப் பார்த்து அம்பிகை அருள் பெற்று இன்புறலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.