பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் சோமாஸ்கந்தப் பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் மாமணிவீதியாம் மூன்றாம் வீதியில் தேரில் உலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
நடராஜப்பெருமானது புதிய சிற்பத்தேர் திருத்தவேலை காரணமாக இம்முறை ஓடாத காரணத்தால் சோமாஸ்கந்தர் அம்பாளின் தேரிலே வலம்வந்தமை குறிப்பிடத்தக்கது.