காரைநகர் சிவன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) இடம்பெற்ற ஜந்தாம் நாள் திருவிழா பகல் காட்சிகள்.

ஆலயத்திற்கு வருகைதந்த திருவெண்ணாமலை திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு எழுந்தருளி மகேஸ்வர பூசையில் கலந்துகொண்டதுடன் அடியார்களுக்கும் அருளாசி வழங்கி ஈழத்துச் சிதம்பரத்தில் தாம் கண்ட பெருமைகளையும் எடுத்துக்கூறினார்.இங்கு அமைக்கப்பட்டுள்ள நடராஜரின் 108 தாண்டவங்கள் வேறு எங்கும் இல்லாதவாறு அற்புதமாக அமைக்கப்பட்டள்ளதுடன்,நடராஜர் திருவுருவமும் மிகவும் அற்புதமாக உள்ளது என்றார்.

ஈழத்துச் சிதம்பர மகேஸ்வரன் அறப்பணி நிலையம்,மாணிக்கவாசகர் மடாலயம் என்பவற்றில் அன்னதானமும் தினமும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.