Tag: காரைநகர் இந்துக் கல்லூரி
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி
சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.
பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து கணித பாடப் பிரிவில் செல்வி கம்சிகா தேவராசா 3A சித்திகளைப் பெற்று தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட ரீதியிலான தரவரிசைப் பட்டியலில் 37 வது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவில் 2A C சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
செல்வி கம்சிகா தேவராசா கணிதப்பிரிவு 3A
செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவு 2A C
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.
கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் பிரதம விருந்தினராகவும்; காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் கௌரவ விருந்தினராகவும், தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.சகீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
கடந்த ஆவணி 2017 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
அம்மாணவர்களின் விபரம் வருமாறு:
1. செல்வன் தர்மலிங்கம் நாகரஞ்சன் – முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், யாழ் பல்கலைக்கழகம்.
2. செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன் – உயிர்முறைமைகள் தொழினுட்பவியல், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
3. செல்வி டர்மிதா யோகநாதன் – உயிர்முறைமைகள் தொழினுட்பவியல், கொழும்பு பல்கலைக்கழகம்
4. செல்வி சரண்யா பேரின்பநாயகம் – கலைப்பீடம், யாழ்பல்கலைக்கழகம்.
5. செல்வி யுசிதா யோகரத்தினம் – கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவிற்கு முதல்முறையாக இரு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2018 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க இருந்த திருமதி சுமதி ஸ்ரீசுந்தரராஜா அவர்கள் சுகயீன காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நினைவுப் பேருரையை எமது பாடசாலை ஆசிரியர் திருமதி பிரபா பிரபாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்
- ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி பிரியா கிருபானந்தராஜா பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கணித பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வன் ஏ. கோபிநாத் பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வி க. அபினோசா பெற்றுக் கொண்டார்.
- 2017ம் ஆண்டு மாகாண மட்ட 100m ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் 13.9செக்கன்களில் ஓடி முடித்தமைக்கான வர்ணச் சான்றிதழையும் (Colors award) பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் கா. மயூரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மாகாண மட்ட Yarl Geek Challenge போட்டியில் Best Hardware விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் க. அனுசாந்
- செல்வன் க. கஜந்தன்
- செல்வன் சி. தூயவன்
சுவிஸ் காரை அபிவிருத்தச் சபையினால் நடாத்தப்பட்ட தியாகத்திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் சி. அறிவரசன்
- செல்வன் ர. சயுவண்ணன்
- செல்வன் ஏ. துஸ்யந்தன்
- செல்வன் ச. யோன்
- செல்வன் த. சுகிர்தன்
- செல்வி க. டிலோசினி
- செல்வி தே. ஜென்சிகா
- செல்வி வ. பவீனா
பாடகர்கள்
1. செல்வி சி. புருசோத்தமி
2. செல்வி யோ. அஸ்மிலா
3. செல்வி கி. சர்மிளா
இப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய செல்வி யோ. விம்சியா விருதினைப் பெற்றுக் கொண்டார்
இப் போட்டிக்கான பயிற்றுவிப்பாளர் திருமதி வி. ரமணன் ஆசிரியர் விருதினைப் பெற்றுக் கொண்டார்
2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வன் ஏ. கோபிநாத் 9A
2. செல்வி பா. சிவராஜினி 9A
3. செல்வன் அ. பிரணவரூபன் 8A, B
4. செல்வி ச. தாரணி 4A, 3B, C, S
5. செல்வன் அ. ஜீவரங்கன் 4A, B, 2 C, S
6. செல்வி ஆ. அமிர்தா 4A, 3B, C
7. செல்வி கோ. பிருந்தா 3A, 2B, 3C, S
2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வி பே. சரண்யா 2 A, B கலைத்துறை
2. செல்வன் த. நாகரஞ்சன் 2 A, B வர்த்தகத்துறை
3. செல்வி யோ. யுசிதா A, B, C கலைத்துறை
4. செல்வன் கோ. பாலசயந்தன் A, C, S தொழில்நுட்பப் பிரிவு
5. செல்வி யோ. டர்மிதா 2B, C தொழில்நுட்பத்துறை
6. செல்வி வி. விதுசா B, 2S விஞ்ஞானத்துறை
2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருது
1. செல்வி கா. டிலானி வர்த்தகத்துறை
2. செல்வன் சி. கோகுலன் கலைத்துறை
3. செல்வி ந. யாழினி கலைத்துறை
4. செல்வன் ப. மகீபன் கலைத்துறை
5. செல்வன் க. வினோதன் கலைத்துறை
2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருது
1) செல்வி சிந்துயா பரமநாதன்
2) செல்வி டினோஜா நவரட்ணராஜா
3) செல்வி குயிலினி பேரானந்தம்
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
1. செல்வன் ஏ. கோபிநாத்
2. செல்வி பா. சிவராஜினி
அமரர் வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் அ. பிரணவரூபன் பெற்றுக் கொண்டார்
அமரர் பொன்னம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவி செல்வி ச. தாரணி பெற்றுக் கொண்டார்
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (A சித்தி)பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
- செல்வி ஆ. அமிர்தா
- செல்வி கோ. பிருந்தா
- செல்வி சி. சர்மிளா
- செல்வி ச. தாரணி
அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசில்களை 2017 ஆம் ஆண்டின்
சிறந்தமெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் க. வசந்தரூபன் பெற்றுக் கொண்டார்
சிறந்தமெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி சு. சிந்துஜா பெற்றுக் கொண்டார்
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. கஜந்தன் பெற்றுக் கொண்டார்
அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத் துறை, தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- செல்வி வி. விதுசா – விஞ்ஞானத்துறை
- செல்வன் கோ. பாலசயந்தன் – தொழில்நுட்பத் துறை
- செல்வி யோ. டர்மிதா – தொழில்நுட்பத் துறை
அமரர் R. கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராஜா அவர்களால் தனது அன்புக்குரிய தந்தை அமரர் சு. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பின்வரும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- திருமதி கலாநிதி சிவனேசன்
- திருமதி கலாசக்தி றொபேசன்
- திரு இராசரத்தினம் ஜீவராஜ்
- திருமதி சகுந்தலா கேசவன்
- திரு முத்துத்தம்பி ஜெயானந்தன்
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திருமதி சி. லக்ஸ்மன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழா நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2018 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க இருந்த திருமதி சுமதி ஸ்ரீசுந்தரராஜா அவர்கள் சுகயீன காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நினைவுப் பேருரையை எமது பாடசாலை ஆசிரியர் திருமதி பிரபா பிரபாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்
- ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி பிரியா கிருபானந்தராஜா பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கணித பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வன் ஏ. கோபிநாத் பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வி க. அபினோசா பெற்றுக் கொண்டார்.
- 2017ம் ஆண்டு மாகாண மட்ட 100m ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் 13.9செக்கன்களில் ஓடி முடித்தமைக்கான வர்ணச் சான்றிதழையும் (Colors award) பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் கா. மயூரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மாகாண மட்ட Yarl Geek Challenge போட்டியில் Best Hardware விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் க. அனுசாந்
- செல்வன் க. கஜந்தன்
- செல்வன் சி. தூயவன்
சுவிஸ் காரை அபிவிருத்தச் சபையினால் நடாத்தப்பட்ட தியாகத்திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் சி. அறிவரசன்
- செல்வன் ர. சயுவண்ணன்
- செல்வன் ஏ. துஸ்யந்தன்
- செல்வன் ச. யோன்
- செல்வன் த. சுகிர்தன்
- செல்வி க. டிலோசினி
- செல்வி தே. ஜென்சிகா
- செல்வி வ. பவீனா
பாடகர்கள்
1. செல்வி சி. புருசோத்தமி
2. செல்வி யோ. அஸ்மிலா
3. செல்வி கி. சர்மிளா
இப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய செல்வி யோ. விம்சியா விருதினைப் பெற்றுக் கொண்டார்
இப் போட்டிக்கான பயிற்றுவிப்பாளர் திருமதி வி. ரமணன் ஆசிரியர் விருதினைப் பெற்றுக் கொண்டார்
2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வன் ஏ. கோபிநாத் 9A
2. செல்வி பா. சிவராஜினி 9A
3. செல்வன் அ. பிரணவரூபன் 8A, B
4. செல்வி ச. தாரணி 4A, 3B, C, S
5. செல்வன் அ. ஜீவரங்கன் 4A, B, 2 C, S
6. செல்வி ஆ. அமிர்தா 4A, 3B, C
7. செல்வி கோ. பிருந்தா 3A, 2B, 3C, S
2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வி பே. சரண்யா 2 A, B கலைத்துறை
2. செல்வன் த. நாகரஞ்சன் 2 A, B வர்த்தகத்துறை
3. செல்வி யோ. யுசிதா A, B, C கலைத்துறை
4. செல்வன் கோ. பாலசயந்தன் A, C, S தொழில்நுட்பப் பிரிவு
5. செல்வி யோ. டர்மிதா 2B, C தொழில்நுட்பத்துறை
6. செல்வி வி. விதுசா B, 2S விஞ்ஞானத்துறை
2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருது
1. செல்வி கா. டிலானி வர்த்தகத்துறை
2. செல்வன் சி. கோகுலன் கலைத்துறை
3. செல்வி ந. யாழினி கலைத்துறை
4. செல்வன் ப. மகீபன் கலைத்துறை
5. செல்வன் க. வினோதன் கலைத்துறை
2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருது
1) செல்வி சிந்துயா பரமநாதன்
2) செல்வி டினோஜா நவரட்ணராஜா
3) செல்வி குயிலினி பேரானந்தம்
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
1. செல்வன் ஏ. கோபிநாத்
2. செல்வி பா. சிவராஜினி
அமரர் வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் அ. பிரணவரூபன் பெற்றுக் கொண்டார்
அமரர் பொன்னம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவி செல்வி ச. தாரணி பெற்றுக் கொண்டார்
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (A சித்தி)பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
- செல்வி ஆ. அமிர்தா
- செல்வி கோ. பிருந்தா
- செல்வி சி. சர்மிளா
- செல்வி ச. தாரணி
அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசில்களை 2017 ஆம் ஆண்டின்
சிறந்தமெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் க. வசந்தரூபன் பெற்றுக் கொண்டார்
சிறந்தமெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி சு. சிந்துஜா பெற்றுக் கொண்டார்
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. கஜந்தன் பெற்றுக் கொண்டார்
அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத் துறை, தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- செல்வி வி. விதுசா – விஞ்ஞானத்துறை
- செல்வன் கோ. பாலசயந்தன் – தொழில்நுட்பத் துறை
- செல்வி யோ. டர்மிதா – தொழில்நுட்பத் துறை
அமரர் R. கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராஜா அவர்களால் தனது அன்புக்குரிய தந்தை அமரர் சு. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பின்வரும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- திருமதி கலாநிதி சிவனேசன்
- திருமதி கலாசக்தி றொபேசன்
- திரு இராசரத்தினம் ஜீவராஜ்
- திருமதி சகுந்தலா கேசவன்
- திரு முத்துத்தம்பி ஜெயானந்தன்
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திருமதி சி. லக்ஸ்மன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழா நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்
காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு
காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு
காரைநகர் மக்களின் ஒப்பற்ற உயர் நிலைக்கு இந்துக் கல்லூரியின் பணி அருணாச்சல உபாத்தியாயர் காலத்திலிருந்து இன்றுவரை அளப்பரியது. பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மடத்துக்கரை அம்மன் அருளாட்சியும், கல்லூரி மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தாயின் அருட்கடாட்ச்சமும் மாணவர்களை தொடர்ந்து அதிஉன்னத நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு தீவக வலயத்தில் சிறந்த பாடசாலையாக சகல துறைகளில் திகழ்வதும் மற்றும் மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளும் சான்று பகர்கின்றன. இக்கல்லூரிக்கு ஊரவர்கள் மட்டுமல்லாது மூளாய், அராலி, சுழிபுரம், வட்டுக்கோட்டை போன்ற அயற்பிரசேதங்களில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் படித்தும், படிப்பித்தும் பயன்பெறுகின்ற சிறப்பும் அனைவரும் அறிந்ததே.
மண்ணின் மகத்தான பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி பணிகள் தொடங்ககூடிய நிலையில்இருந்தன. இத்தகைய சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தில் கடற்படையினர் அத்துமீறி முகாமிட்டுருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முகாமை அகற்றி கல்விசார் சமூகத்தினதும், ஊரவர்கள் அனைவரதும் பீதியற்ற நிலைமையை உருவாக்க பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்கமுடியாததொன்றாகும். மன்றத்தின் தலைவரும் கடற்படையினரின் முகாமை அகற்றுவதற்காக தொடர்ச்சியாக பிரதேச செயலாளர், பாடசாலை நிர்வாகம் மற்றும் உரிய அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்புகளை பேணி வருகின்றார். மேற்கொண்டு விரைவில் அரச அதிபர், மாவட்ட கட்டளை அதிகாரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் மகஜர் அனுப்பப்படவுள்ளது.
க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை
க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை
12 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்
கடந்த டிசம்பர் மாதம் 2017 இல் நடைபெற்ற க.பொ.த சா-த பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.
மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 9A என்ற பெறுபெற்றினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபெற்றினைப் பெற்ற பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி திகழ்கின்றது.
செல்வி சிவராஜினி பாலேந்திரா, செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் ஆகிய இரு மாணவர்களுமே எல்லாப் பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தி (9A ) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்குக் கிடைக்கப்பெற் 9A முதன்மைப் பெறுபேற்றுக்குப் பின்னர் 2017 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் என்ற மாணவன் 8A B என்ற பெறுபேற்றினையும், மேலும் 3 மாணவர்கள் 4A இனையும் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 7 மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு – 2017
மாணவர் பெயர் | பெறுபேறு | |
1. | செல்வி சிவராஜினி பாலேந்திரா | 9A |
2. | செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் | 9A |
3. | செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் | 8A B |
4. | செல்வி தாரணி சடாட்சரம் | 4A 3B C S |
5. | செல்வி அமிர்தா ஆனந்தராசா | 4A 3B C |
6. | செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன் | 4A B 2C S |
7. | செல்வி பிருந்தா கோவிந்தராசா | 3A 2B 3C S |
கீழே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், ஆசிரியர்களுடன் மாணவர்களின் படங்களையும் காணலாம்.
செல்வி சிவராஜினி பாலேந்திரா – 9A
செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் – 9A
செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் – 8A, B
செல்வி தாரணி சடாட்சரம் 4A 3B C S
செல்வி அமிர்தா ஆனந்தராசா 4A 3B C
செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன 4A B 2C S
செல்வி பிருந்தா கோவிந்தராசா 3A 2B 3C S
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட போட்டிகள்
பாடசாலையின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் இப்போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இப்போட்டிகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 19.01.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.
ஆண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வக் K. வசந்தரூபன் – தியாகராஜா இல்லம்
2ம் இடம் – செல்வன் S. சஜிந்தன் – பாரதி இல்லம்
3ம் இடம் – செல்வன் K. மயூரன் – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வன் A. கிருசிகன் – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வன் S. சஞ்ஜீவன் – நடராஜா இல்லம்
பெண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வி S. அசந்தா – நடராஜா இல்லம்
2ம் இடம் – செல்வி M. ரூபிகா – சயம்பு இல்லம்
3ம் இடம் – செல்வி K. சுயாளினி – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வி S. சரண்யா – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வி S. சிந்துஜா – தியாகராஜா இல்லம்
டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.
டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் நடத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோய் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலையை தெரிவு செய்வதற்கான போட்டியில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பாராட்டு விருதும் ஐயாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வருகின்ற காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டின் ஓர் அங்கமாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.
சுகாதாரத்தைப் பேணி நோய்கள் வராது தடுப்பது தொடர்பில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ என்கின்ற திட்டம் நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்துள் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு குறித்த திட்டச் செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டக் குழுவின் உப-குழுவே மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெரியப்படுத்தி டெங்கு காய்ச்சல் அற்ற பாடசாலையாக எமது பாடசாலை விளங்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
அந்தவகையில் இவ் உப குழுவின் தலைவரான அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் உப குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்களான திரு ச. அரவிந்தன், திரு ஞா. கிரிதரன், திருமதி க. சுபத்திரா, திருமதி க. சந்திரமோகன், செல்வி வி. தாட்சாயினி, செல்வி சி. கிருபாலினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினையும் சான்றிதழையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:
காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு நடைபெற்றது.
கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்ம சாந்திக்காக இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.
கலாநிதி கென்னடி அவர்கள் சிறந்த கல்விமானாகவும் மக்களின் தொண்டனாகவும் விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான பணியிலும் காரை.மண்ணின் மக்களுக்கான பணியிலும் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி அனைவர் நெஞ்சங்களிலும் நிலைபெற்றுவிட்ட உன்னதமான மக்கள் சேவையாளன் என திருமதி சிவந்தினி தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டிருந்தார். கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017
காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017
காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு கா. குமாரவேலு அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆங்கில பாடத்துறைக்கான தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு ந. பத்மராஜா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், பேச்சு, வினாடி வினா, நாடகம் போன்ற பல நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. அத்துடன் வலய மட்ட ஆங்கில தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழெ காணலாம்.
காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.
காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.
கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.
இதற்கமைய இக்கண்காட்சி காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இத்துறை சார்ந்த ஆசிரியர்களினதும் வலயக் கல்வி அலுவலர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும்; வெகு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
சென்ற 17-10-2017 செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கணித விஞ்ஞான ஆய்வுகூடத்தில் காலை 9.00மணிக்கு அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்த இக்கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளிப் பள்ளிக்கூடம்)பாடசாலையின் அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
கல்லூரி மாணவர்களின் மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறைத் திறமையினை வெளிக்கொணர்ந்ததுடன் அவர்களின் செய்முறை அறிவினையும் மேம்படுத்த உதவிய இக்கண்காட்சியை அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
இக்கண்காட்சி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:
காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையுடன் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் பெருங்காப்பாளரும் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.
உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் கதிர்காமநாதன் கஐந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.கார்த்திகேசு குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்திருந்தனர்.
மாணவர்களுக்கு அறிவு என்னும் ஞானச் சுடரினை ஏற்றி வைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பா மூலமாக வாழ்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததுடன் பசுமையை நிலைநாட்டும் முகமாக மரக் கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் அதிபரும் ஆசிரியர்களும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்நத நன்றியை அதிபர் தமது உரையின்போது தெரிவித்திருந்தார்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பழைய மாணவர் சங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்ற சங்கத்தின் கொள்கைக்கு அமைவாக 4வது ஆண்டாக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை இவ்வாண்டும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்
வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்
சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன். தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார வசதிகளற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திறமை மிக்க மாணவியான உஷாந்தினி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் வரைக்குமான இரண்டு ஆண்டுகளுக்கும் ஏற்படக்கூடிய கற்றல் செயற்பாட்டிற்கான உதவியை வழங்கி உதவ முன்வரவேண்டும் என கல்லூரி அதிபர் பரிந்துரை செய்திருந்தார். கனடாவில் வதியும் கல்லூரியின் பழைய மாணவரான திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வுதவியை வழங்க முன்வந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக இதனை வழங்கியுள்ளார். திரு.மாணிக்கம் கனகசபாபதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். செல்வி உஷாந்தினி இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கருசனையுடன் செயலாற்றிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் மாணவியின் குடும்பநிலையைப் புரிந்துகொண்டு உதவிய திரு.கனகசபாபதிக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
திரு.மாணிக்கம் கனகசபாபதி கல்லூரிக்கு பயணம் செய்தபோது இவ்வுதவியின் முதலாவது தவணைக்கான உதவிக் கொடுப்பனவினை செல்வி உஷாந்தினி சோதிநாதனிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்க்கலாம். அருகில் கல்லூரியின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் காணப்படுகின்றார்.
![OLYMPUS DIGITAL CAMERA](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Ushanthini-Photo.jpg?resize=645%2C448)
OLYMPUS DIGITAL CAMERA
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா
காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா 04.08.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு வே. புவனேந்திரராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு N. லோகநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பொருளாளர் திரு மா. கனகசபாபதி அவர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு ந. யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 12 மாணவர்களும், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 8 மாணவர்களும், 2017ஆம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் ரொக்கப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் ரொக்கப் பரிசில்களை வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முப்பத்தையாயிரம் ரூபாவினை வழங்கி உதவியிருந்தது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறான சிறப்புச் சித்திகளை பெற காரணமாக இருந்த ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களுக்கான பாராட்டு விருதினை வழங்க பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினரும் யோகா றான்ஸ்போட் நிறுவனத்தின் அதிபருமான திரு.ந.யோகநாதன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
வடமாகாண விளையாட்டுப் போட்டியில் 100அ நிகழ்வில் நான்காமிடம் பெற்று செல்வன் காந்தரூபன் மயூரன் தேசிய மட்டத்திற்கு தெரிவு
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான 10 வது மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 10.07.2017 அன்று துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
10.07.2017 அன்று இடம்பெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 100mபோட்டியில் செல்வன் காந்தரூபன் மயூரன் 11 செக்கன் 9 விநாடியில் ஓடி 4ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன் இம் மாணவன் வடமாகாணப் பாடசாலை விளையாட்டுக்கள் நிறப்பரிசளிப்பையும் (Colours Award) பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் 100 m போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், மாணவன் வெற்றியடைய சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்) அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
செல்வன் காந்தரூபன் மயூரன் அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஆகியோருடன் எடுக்கப்பட்ட நிழற்படத்தையும், மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளையும் கீழே காணலாம்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017
எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது
3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்
4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்
6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள்
7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின்
• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
செல்வி கே. லாவண்யா
செல்வி ந. ஜஸ்மினா
செல்வி கி. சுதர்சனா
• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது.
4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A" தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.
காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.
நடப்பாண்டில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பல்வேறு அவசிய தேவைகளை நிறைவு செய்யவும் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்துவதில் ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யவும் என மொத்தம் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது. தாய்ச் சங்கத்தின் பின்வரும் கோரிக்கைகளே நிர்வாக சபையினால் ஆராயப்பட்டு உதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டவையாகும்.
1.அலுவலக உதவியாளரின் மாதாந்த வேதனம்
2.இலத்திரனியல் நூலகம் மற்றும் பொது மின் பாவனைக்கான கட்டணம்
3.விருந்தினர் உபசரணை
4.நானாவித செலவுகள்
5.ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
6.Wi-Fi இணைய சேவைக் கட்டணம்
7.க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள்
8.க.பொ.த.(சாதாரணம்), க.பொ.த.(உயர்தரம்) ஆகிய பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கல்
குறித்த உதவித் தொகை தாய்ச் சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வுதவியை வழங்கியமைக்காக தாய்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் கல்லூரியின் பிரதி அதிபருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினைப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பழைய மாணவர் சங்கத்தின் உதவியைத் தவிர சங்கத்தின் உறுப்பினர் திரு.S.P.அரிகரன் அவர்கள் தமது தந்தையாரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கவும் இப்பரிசில் வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கவும் ஐம்பதாயிரம் ரூபாவினை எமது சங்கத்தினூடாக அனுப்பிவைத்திருந்தார்.
க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. சிறப்பாக 8A 1B என்ற அதிசிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவியாக விளங்கும் செல்வி கம்சிகா தேவராசாவினதும் 8A என்ற பெறுபேற்றினைப் பெற்று இரண்டாவது நிலை மாணவனாக விளங்கும் செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மர் ஆகியோரது சாதனை கல்லூரியின் வரலாற்றில் பதிவாகி பெருமை சேர்க்கின்றது என்ற வகையில் பேருவகையடைகின்ற பாடசாலைச் சமூகத்துடன் எமது சங்கமும் இணைந்துகொள்கின்றது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட பொதுத் தகமைத் தேர்ச்சிக்கான விருதினை செல்வி கம்சிகா தேவராசா 2014ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டவர் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
உதவியும் ஊக்குவிப்பும் வழங்கிய பெற்றோர்கள் சிறந்தமுறையில் கற்பித்து பரீட்சைக்கு தயார்படுத்திவிட்டிருந்த ஆசிரியர்கள ஆதாரதளமாக இருந்து வழிகாட்டிய முன்னைய அதிபர் திருமதி வாசுகி தவபாலன பதில் அதிபராக பணியாற்றியவரும் தற்போதய பகுதித் தலைவருமாகிய திருமதி கலாநிதி சிவநேசன் ஆகிய அனைவரும் இம்மாணவர்களுடைய சாதனைக்கு காரணமாகவிருந்துள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றிகூறிக்கொள்கின்றோம். தற்போது இப்பாடசாலையின் நிர்வாகத்தினைப் பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களும் மாணவர்கள் மேலும் பல சாதனைகளை ஏற்படுத்த பணியாற்றுவார் என உறுதியாக நம்பும் எமது சங்கம் இதனை அடைவதற்கு சாத்தியமானவற்றை வழங்கி உதவும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருகின்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில்களை ரொக்கமாக வழங்க கடந்த மூன்று ஆண்டுகளாக உதவிவருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இம்முறையும் இவ்வுதவியினை வழங்கி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
- 1
- 2