Tag: காரைச் செய்திகள்
காரை.மண்ணின் தவப் புதல்வன் “சங்கநூற்செல்வர்” பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் பெயரில் வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காரை.மண்ணின் தவப் புதல்வன் “சங்கநூற்செல்வர்” பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் பெயரில் வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பெற்றெடுத்த தவப்புதல்வர்களுள் ஒருவரான “சங்கநூற்செல்வர்” பண்டிதமணி சு.அருளம்பலவனார் அவர்கள் சைவத்தமிழுலகில் முக்கிய இடத்தைப் பெற்று விளங்குகின்றார். இவரால் எழுதப்படட்ட ஆராய்ச்சிப் படைப்புக்களே இவரது புகழுக்கும் காரைநகர் மண் பெருமை கொள்வதற்கும் காரணமாகும். திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, திருவாசகம் ஆகிய நூல்களிற்கே பண்டிதமணி அவர்கள் ஆராய்ச்சி உரைகளை எழுதி சைவத் தமிழிற்கு வரலாற்றுப் பணியாற்றியுள்ளார். இவரது ஆராய்ச்சி நூல்கள் தமிழகத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்களிற்கான பாடநூல்களாக பயன்படுத்தி வருகின்றமை அவரது தமிழ்ப் புலமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த பண்டிதர் சு.அருளம்பலவனார் அவர்களிற்கு மதிப்பளித்து அன்னாரை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்ட வீதி ஒன்றினை காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். பண்டிதமணி அவர்கள் வசித்து வந்த இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதியே இவ்விதம் திறந்து வைக்கப்பட்டதாகும்.
பிள்ளையார் சனசமூக நிலையத் தலைவர் திரு.நா.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவின் திறப்புரையை ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் ஆற்றியிருந்தார். ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி
சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.
பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து கணித பாடப் பிரிவில் செல்வி கம்சிகா தேவராசா 3A சித்திகளைப் பெற்று தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட ரீதியிலான தரவரிசைப் பட்டியலில் 37 வது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவில் 2A C சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
செல்வி கம்சிகா தேவராசா கணிதப்பிரிவு 3A
செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவு 2A C
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.
கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.
போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கிய கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.