Category: ஆருத்திரா தரிசனம்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
4.00 மணிக்கு கும்ப பூஜை
4.30 மணிக்கு ஆருத்திரா அபிஷேகம்
6.00 மணிக்கு இன்னிசை கச்சேரி
6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை
7.45 மணிக்கு நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சி
9.30 மணிக்கு ஆருத்திரா நிகழ்வுகள் நிறைவு
அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.15 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
செல்லத்துரை தேவகுமார் பரமலிங்கம் பிரபாகரன்
செயலாளர் பொருளாளர்
தொலைபேசி இலக்கம்: 647 853 7027 தொலைபேசி இலக்கம்: 416 455 8836
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
செல்லத்துரை தேவகுமார் பரமலிங்கம் பிரபாகரன்
செயலாளர் பொருளாளர்
தொலைபேசி இலக்கம்: 647 853 7027 தொலைபேசி இலக்கம்: 416 455 8836
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்
கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம் 11.01.2017 புதன்கிழமை நடைபெற்றது. ஆருத்திரா தரிசனம் வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.
ஆருத்திரா தரிசனம் வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.
பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
Aruthira Tharisanam Income Statement -2017
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று புதன்கிழமை (11.01.2017) அதிகாலை 4:45 இற்குத் தொடங்கி நடைபெற்றது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று புதன்கிழமை (11.01.2017) அதிகாலை 4:45 இற்குத் தொடங்கி நடைபெற்றது.
நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அபிசேகம் முடிவடைந்ததும் நடராஜப் பெருமானுக்கு அலங்கார சாத்துப்படி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலே சிவனடியார்களுக்குச் செவியின்பம் தரும் அருமையான இன்னிசை கச்சேரியை வாரகி விஜயராஜ் வழங்கினார்.
தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.
தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வர்ண மலர்களைத் தூவ தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.
அவனருளாலே அவன்தாள் வணங்கி ஆருத்திரா தரிசனம் கண்டு ஆனந்தமடைந்த அடியார்கள் விபூதி பிரசாதங்களைப் பெற்று மகேசுவர பூசையிலும் கலந்துகொண்டு வீடு சென்றனர்.
கனடா திருவாதிரைத் திருவிழாவின் காட்சிகளை இங்கே காணலாம்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழாவிற்கு நிதியுதவி செய்த அடியார்கள் விபரம்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழாவிற்கு நிதியுதவி செய்த அடியார்கள் விபரம்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்:karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
அரோகார குரலொலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.04.2015) அன்று கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple) பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5:00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 6:30 க்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன் அவர்களின் பாட்டுக்கு மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன் மிருதங்க இசை வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தவில் நாதஸ்வர கான மழை பொழிய பக்தர்களின் அரோகரா ஒலியுடன் நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெருந்திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.
திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்
திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.
நன்றி: K.K.Electronics
மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.
மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.
அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாக்ரபாதர் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம். தில்லை வந்து நெஞ்சுருகப் பாடி திருவாசகத்தேனைப் பொழிந்த மாணிக்க வாசகர் நடராஜரிடமே ஜ்யோதிப் பொருளாய் மறைந்த தினமும் திருவாதிரை திருநாளே.
இந்த நாளில்; ஸ்ரீ நடராஜரைத் தரிசித்க வழிபட்டு வர நம் இன்னல்கள் யாவும் அகன்று வாழ்க்கை இனிமையாகும்.
மாணிக்க வாசகர் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்யச் சென்றார். திருவெம்பாவை என்ற 20 பாட்டுக்கள் உதிர்ந்தன. இதனை விடியற்காலையில் நேம நியமங்களுடன் ஓதுவது பாடிக்களிப்புறுவது வழக்கம்.
நாமெல்லாம் சீவன். சிவனே பரமாத்மா. சீவனுக்கு ஆதாரம் சிவன். நாம் பசு. நமக்கெல்லாம் பதி சிவன்.
விடியற்காலையில் துயில் நீக்கி நன்னீராட்டி தூயமனத்துடன் மற்றவர்களை தூங்காதே எழுந்திரு என அறை கூவி எழுப்பி ஆண்டவனது புகழ்பாட அழைத்துக் கூடிப் பாடி நெகிழும் நெறி தான் திருவெம்பாவை.
திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது என்றாலும் சிவனடியார்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அதே போல் கனடாவிலும் கோயில் என்றவுடன் எமக்கெல்லாம் பெரியகோயில் என்று அழைக்கப்படும் றிச்மண்ட்கில் தான் நினைவுக்கு வருகிறது. சிதம்பரத்தில் மணிவாசகப்பெருந்தகை கண்ட நடனத்தை அந்தத் தாண்டவத்தை பாதத்தை தனது 14வது திருவெம்பாவையில் பாடி மகிழ்கிறார்.
காதர் குழையாட பைம்பூன் கனலாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப்புனலாட சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றை தார்பாடி
ஆதிதிறம் பாடி அந்தமாமாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்.
கடைசி 20வது திருவெம்பாவையில் திரும்பத் திரும்ப ஆண்டவனது பாதமலர் செந்தளிர் பொற்பாதம் பூங்கழல் இணைஅடி பொன்மலர் புண்டரீகம் என்று பாதங்களில் மார்கழி நீராடிப் போற்றுகிறார்.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்.
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்.
ஓவ்வொரு அடியிலும் ஆண்டவனது அடிகளைப் பணிந்து போற்றி சரணாகதி தத்துவத்தை அறிந்து புரிந்து உணர்ந்து அருளுக அருளுக என விழைகிறார் திருமாணிக்கவாசகர். அவருக்காகவா பாடினார். சிவனார் திருவண்ணாமலையில் அவரிடம் உந்தி உட்கொண்டு நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்று தானே பாவை பாடினார்.
பதஞ்சலியும் வியாக்ரபாதரும் மட்டுமா ஆனந்தத் தாண்டவம் பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டுமா ஆடினான். குகை நமசிவாயருக்கும் அல்லவா ஆடினான்.
'அம்பலவா! இன்னொருக்கால் ஆடினால் ஆகாதோ?
உம்பரெல்லாம் கண்டது உனக்கு ஒப்பாமோ? சம்புவே!
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஏற்றுப் பதஞ்சலிக்குமே…..'
அந்த ஆடல் வல்ல அம்பலவாணணின் ஆனந்த தாண்டவத்தை நாமும் இன்று பார்த்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி களிப்புடன் தரிசித்து 'களி' உண்டு ஆனந்தப் பரவசம் எய்தி!
ஆருத்ரா தரிசனத்தைப் போல்…..!!! அந்த அற்புதத்தை ஆனந்தத்தை அதிசயத்தை அபிஸேகத்தை …. பால் அபிஸேகமோ….. தயிர் அபிஸேகமோ…. நெய் அபிஸேகமோ……. சந்தன அபிஸேகமோ….குங்கும அபிஸேகமோ…. பன்னீர் அபிஸேகமோ…….. தேன் அபிஸேகமோ……..பஞ்சாமிர்த அபிஸேகமோ……..குடம் குடமாக……..தாரை தாரையாக….வாழ்க்கையின் இனிப்பு வேர்வைத் துளிகளின் உப்பில் இருக்கிறது என்பது போல……….தீஸ்தருக்கு இந்த உஸ்ஸிக் குளிரிலும் வியர்;த்து…
ஏனெனில் சிவன் அபிஸேகப்பிரியர். உலகிலேயே நடராஜர் அபிஸேகம் போல் எங்கும் அபிஸேகங்கள் நடப்பதில்லை.
சுக்ல யஜுர் வேதத்தில்
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூரணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'
'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும் பூர்ணம் அப்படியே இருக்கிறது' என்று சொல்லியிருப்பதைப்போல!
ஆனந்த மயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் உள்ள நடராஜப் பெருமானிடம் இருந்து நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும் கூட அவரிடம் உள்ள ஆனந்தம் கடுகளவும் குறையப் போவதில்லை.
பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. 'எல்லாம் அவன் செயல்' என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம்.
இப்படியான பக்குவநிலை வாய்க்க இறைவனுக்கான வழிபாடுகளும் பணிவிடைகளும் உதவி செய்யும்.
அன்னையாய் குழந்தையாய் காதலனாய் தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும் அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம் செய்து கொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு சுகானுபவம்.
இறைவனின் திருநடனத்தை நாவுக்கரசர் போற்றுவதைப் பாருங்கள்.
சுற்றிப்பறக்கும் சடைமுடி அதில் பதிந்து இருக்கும் சுட்டி
திலகம் தவழும் நெற்றி வில்லைப் போல வளைந்த புருவம்
எடுப்பான மூக்கு ஆனந்தம் தவழும் அமைதியான புன்னகை கூடிய திருமுகம் மடிப்புக்களுடன் கூடிய கழுத்து திரண்ட தோள்கள் எடுப்பான மார்பு வளைந்த இடுப்பு தூக்கிய திருவடி அகந்தையை அடக்கி அழுத்தும் மற்றொரு திருவடி தீமைகளைப் பொசுக்கும் தீ அஞ்சேல் என முழுங்கும் உடுக்கை எனக் காட்சி தரும் நடராஜப் பெருமானை திருவாதிரையன்று தரிசித்தோர் மனம் அமைதி பெறும்.
இந்த நடராஜரின் திருநடனத்தை காண வாருங்கள் என ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அழைக்கிறார்……….
கூற்றிருக்கும் மடலாழிக் குரிசின் முதலோர்
இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்……………
நாம் இருக்கும் இடத்தில் கனடாவில் எம்மை எல்லாம் ஆட்டுவிப்பவன் ஆடினான்……….நாம் அவன் பெயர் சொல்லி புகழ் சொல்லி மலர் தூவி…………
காரை கனடா வாழ் மக்கள் நாம் அவனை அபிஸேகித்தோம் மலர்களால் அழகு படுத்தினோம் பண் இசையால் பரவசப்படுத்தினோhம் நாதஸ்வரம் மேளம் என இறைவா! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! காரை மக்களுக்கு இது நீ இட்ட கட்டளை! எல்லோர் செவிகளிலும் இது ஏன் கேட்கவில்லை? பிறவிப் பிணியா! அப்படி என்றால் நீ பெரு மருந்தல்லவா! இது தெரியாமலா? இந்த உண்மை புரியாமலா? இந்த மாயை விலகட்டும்! மூடிய இருள் அகலட்டும்! கச்சி ஏகம்பனே! ஏகம்பனே! 2015ல் உன் சந்நிதியில் ஓர் தாய் பிள்ளையாய்! தொப்புள் கொடியாக! இறைவா! சிதம்பரேசா! சிற்றபேசா! நீ ஆட்டுவிக்கிறாய் நாம் ஆடுகின்றோம். அந்த ஆட்டத்தில் எம் அல்லல்கள் எல்லாம் ஓடட்டும். ஓர்; ஊராய் ஒற்றுமையாய் உன்னைத் தாலாட்ட வரம் தா! வரம் தா! வரம் தா! வேண்டாம் எமக்கு வரட்டுக் கௌரவம்! நாதா ஈஸா தேவா ஸ்ரீ நடராஜப் பெருமானே!
Written By : Ranjson Kanapathippillai (Realtor)
திருவாதிரைத் திருவிழாவில் இன்னிசைக் கச்சேரி
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா Richmond Hill பிள்ளையார் கோயிலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04.01.2015) அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்
பாட்டு: திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன்
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன்
செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 04ஆம் திகதி(04.01.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 5.00 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது
பின்வரும் மன்ற வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டபின்னர் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.
Canada-Karai Cultural Association
T.D.Bank A/C No. 711 Branch No. 1029
தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று டிச.18.2013 புதன்கிழமை செல்வமலைப் பிள்ளையார் கோவிலில்(Richmond Hill Hindu Temple) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5:30 இற்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. காலை 7:30 அளவில் ஸ்ரீமதி.நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமியின் மாணவி செல்வி.காயத்திரி பரமேஸ்வரனின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெரும் திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.
இன்றைய திருவிழாக் காட்சிகளை இங்கே காணலாம்
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 10ம்நாள் ஆருத்ரா தரிசனம் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(18.12.2013)
காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவாதிரை உற்சவ ஆருத்திரா அபிசேகம் ஈழத்து,இந்திய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கானமழை பொழிய இன்று அதிகாலை 2.00மணி முதல் மிகவும் பத்திபூர்வமாக இடம்பெற்றது. ஆதனைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு ஆரத்திராதரிசனமும் இடம்பெற்றது.இந்த உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து காலைமுதல் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அடியவர்கள் பலர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்து தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.காரைநகரின் பல்வேறு ஆலயங்களிலிருந்தும் பத்திற்குமேற்பட்ட காவடிகள் ஆலயத்தை வந்தடைந்தன.தொடர்ந்து மாலை ஊடலும் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றன.
செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி(18.12.2013) புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
காலை 6.30 மணி – இன்னிசைக் கச்சேரி
பாட்டு: ஸ்ரீமதி நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமி அவர்களின் மாணவி செல்வி காயத்திரி பரமேஸ்வரன்;
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் அமல்நாத் பரமேஸ்வரன்
வயலின்: சங்கீத வித்துவான் திருமதி. தனதேவி மித்திரதேவாவின் மாணவன் செல்வன் மிதுரன் மனோகரன்
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 5.00 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது
Canada-Karai Cultural Association
T.D.Bank A/C No. 711 Branch No. 1029
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
- 1
- 2