காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 10ம்நாள் ஆருத்ரா தரிசனம் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(18.12.2013)

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவாதிரை உற்சவ ஆருத்திரா  அபிசேகம் ஈழத்து,இந்திய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கானமழை பொழிய இன்று அதிகாலை 2.00மணி முதல் மிகவும் பத்திபூர்வமாக இடம்பெற்றது. ஆதனைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு ஆரத்திராதரிசனமும் இடம்பெற்றது.இந்த உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காலைமுதல் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அடியவர்கள் பலர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்து தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.காரைநகரின் பல்வேறு ஆலயங்களிலிருந்தும் பத்திற்குமேற்பட்ட காவடிகள் ஆலயத்தை வந்தடைந்தன.தொடர்ந்து மாலை ஊடலும் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றன.