மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று டிச.18.2013 புதன்கிழமை செல்வமலைப் பிள்ளையார் கோவிலில்(Richmond Hill Hindu Temple)  மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5:30 இற்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. காலை 7:30 அளவில் ஸ்ரீமதி.நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமியின் மாணவி செல்வி.காயத்திரி பரமேஸ்வரனின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெரும் திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.
இன்றைய திருவிழாக் காட்சிகளை இங்கே காணலாம்