செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா

OLYMPUS DIGITAL CAMERA

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி(18.12.2013) புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
காலை 6.30 மணி – இன்னிசைக் கச்சேரி

பாட்டு: ஸ்ரீமதி நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமி அவர்களின் மாணவி செல்வி காயத்திரி பரமேஸ்வரன்;
 
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் அமல்நாத் பரமேஸ்வரன்
 
வயலின்: சங்கீத வித்துவான் திருமதி. தனதேவி மித்திரதேவாவின் மாணவன் செல்வன் மிதுரன் மனோகரன்

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 5.00 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது
Canada-Karai Cultural Association
T.D.Bank A/C No. 711 Branch No. 1029


நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்