1.3மில்லியன் ரூபாய்கள் செலவில் காரை மண்ணில் ஆயுள்வேத வைத்தியசாலை
KWSUK-Ayurvedha-Hospital-ProjectCategory: இலண்டன் காரை
காரைநகர் முன்பள்ளி சிறுவர்களுக்கான இரும்புச்சத்து பாணி வழங்கல் செயற்திட்டம்.
காரைநகர் முன்பள்ளி சிறுவர்களுக்கான இரும்புச்சத்து பாணி வழங்கல் செயற்திட்டம்.
ஊர்காவற்துறை சுகாதார அதிகாரி பணிமனையில் இருந்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு கீழுள்ள கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இக்கோரிக்கையானது எமது இதர சகோதர காரை மன்றங்களிற்கும் கிடைக்கப்பெற்றாலோ அல்லது இந்தக் கோரிக்கைக்கான பண உதவியை யாரேனும் ஏற்கனவே கொடுத்து உதவியிருந்தாலோ தயவு செய்து எம்முடன் (பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்துடன்) உடனடியாக (30/04/2016 இற்கு முன்பாக) தொடர்பு கொள்ளவும். ஏனெனில், இச்செயற் திட்டத்தினை செய்வது தொடர்பாக நாம் தற்போது கலந்தாலோசிக்கின்றோம்.
தலைவர் : நாதன் : 0044-7944232014
மின்னஞ்சல்: info@karainagar.org
நன்றி,
காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா)
இரண்டுவயதுப் பாலகர்களையும் ஈர்த்துவிட்ட “Karai Kutties” புன்னகையால் தீட்டிய புதிய அத்தியாயம்
இரண்டுவயதுப் பாலகர்களையும் ஈர்த்துவிட்ட “Karai Kutties”
புன்னகையால் தீட்டிய புதிய அத்தியாயம்
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் “Karai Kutties-சிறப்புச் சிறுவர் குதூகலக் கொண்டாட்டம் “ஏப்ரல் மாதம் 9ம் திகதி Elmfield அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிறுவர் நிகழ்வென்பதால் “Health&Safety”
காரணங்களுக்காக ’50 சிறுவர்கள்’ என மட்டுப்படுத்தப்பட்டிருந்தப்போதிலும், அங்கு ஆவலாய் வருகைதந்த எம்தம்பி தங்கைகளை திருப்பிஅனுப்ப மனமில்லாமல்,
அவர்களையும் இணைத்துக்கொண்டு கொண்டாட்டம் ஆரம்பமானது.
ஊரில் பல மைல் தூரம் சைக்கிள் மிதித்து படிக்கசென்றது போல இங்கு பல மணித்தியாலம் “டிரைவ்”செய்து பிள்ளைகளுக்காக வந்தோம் என பெற்றோர் கூறியபோது பெருமிதத்தை உணர்ந்தோம்.
“5வயது “தான் ஆரம்ப வயது என்று இணையத்தில் பிரசுரித்திருந்தாலும் கூட
“என்ட பிள்ளைக்கு இப்ப இரண்டு தான்..ஆனால் அவன் அழமாட்டான்..சேர்த்துகொண்டேயாகவேண்டும்”என சில பெற்றோரின் செல்ல மிரட்டல்கள் எமக்கு அவர்கள் மீதான மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்தியது.
இவ்வாறான ஊக்குவிப்பும் ,
உற்சாகமும்,ஊட்டலும் தான்
ஒரு “காரை மாணவன்”சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவதற்கான மூலாதாரம் என்பதனை மீண்டுமொருமுறை எமக்கு வலியுறுத்தியது.
வித்தியாசமான Chinese Puzzle ,Line up game,Find your team,Tell me a story,Sausages,Roll race,Elves,Gnomes and Giants விளையாட்டுகளை விநோத உடையில் விளையாடிய
காரைக்குட்டிஸ்,காரை இளையோர் மட்டுமில்லாமல் காரைநலன்புரிச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி.சித்திராவும்
“கங்காரு” உடையில் கலந்து கொண்டு கலக்கியிருந்தார்.
சிறியவர் பெரியவர் பேதமின்றி நிகழ்வு ஆரம்பித்தது முதல் நிறைவுவரை ஒரே சிரிப்பு மழைதான்.
விளையாட்டுகளிற்கு மத்தியில் சிற்றுண்டியும் குளிர்பானங்களும் பரிமாறப்பட்ட போதிலும்,
நிகழ்வு நிறைவில் விஷேடமான விருந்துபசார மண்டபத்தில் ,பெரிய திரையில் திரைப்படத்தோடு பரிமாறப்பட்ட Domino’s pizzaதான் அனைவரையும் வாயூர வைத்தது.
சிறந்த விநோத உடைக்கான விருதினை வழங்கிய போது,
“பிரித்தானிய காரை இளையோர் இந்நிகழ்வினை திறம்பட வடிவமைத்து இலவசமாய் நாடாத்துவதற்கு மண்டப ஒழுங்கமைப்பு,உணவு என அனைத்துவிதத்திலும் ஒத்துழைத்த பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கத்தினரையும்,
உணவுப் பரிமாறுகையிலும் சரி,அரங்கு ஒழுங்கமைப்பதிலும் சரி இளையோரோடு இளையோராய் தோள்கொடுத்து இதனைத் தங்கள் நிகழ்வாகவே மாற்றிவிட்ட பெற்றோரையும்,எப்பொழுதும் தயார்நிலையிலிருந்த காரைஇளையோர் மருத்துவக் குழாமையும்”
நன்றியுணர்வோடு எண்ணிப்பார்த்தோம்.
மீண்டுமொருமுறை சிறுவர் வாழ்க்கையில் சிறகடித்துப் பறப்பதற்கு எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் இதுவென்பதனை நன்குணர்ந்த நாங்களும் சின்னஞ்சிறியவர்களோடு ஈடுகொடுத்து வயிறுவலிக்கச் சிரித்து மகிழ,
நெஞ்சம் மறக்காத இந்த மாலைப்பொழுது
6.30மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
மண்பத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் தயங்கிய சின்னஞ்சிறியவர்களை “next time”என்று சமாளித்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்றபோது “சாதித்துவிட்டோம் நாங்கள்”என்ற பூரிப்பு எங்களனைவர் மனதிலும் !
நன்றி,
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பு
————————————————————————————————————–
KYO(UK) organised its first ever Karai Kutties Fun Day for children 5-12
on Saturday 9th April 2016, at Elmsfield Church (London)
and what an event it was!
Initially we were unsure whether the event would hit off, but to our surprise we had around 50 children turn up. Unfortunately we had to make the cut off point at 50 for health and safety reasons – but for sure next time we’ll arrange something much bigger!
It was a fancy dress event – and everyone dressed to impress! We had Kiddies and KYO Volunteers dress up as animals, princesses, heroes and many more. Children as young as 2 also dressed up and participated in the fun and games. We played some icebreakers games, team games and to wrap up the event we ate pizza while watching a movie.
When we organised our KYO Meet&Greet, the spaghetti and marshmallow game was so successful that we played it for our Christmas party too! Similarly, we played a game called ‘Mummies’, where teams had to nominate a teammate and wrap them around with toilet paper.
Thank you to all the children who dressed up; the KYO members who dressed up and volunteered; KWS(UK) for providing us financial support; Elmsfield Church; Dominos and the wonderful parents & helpers who travelled from far to bring their children to this event!
Here are some photos from the fantastic day!
http://www.karainagar.org/kyouk-karai-kutties-fun-day/
Thanks,
KYO(UK)
Solar Lantern Donation to Karainagar
Solar Lantern Donation to Karainagar
iEnergy sought to donate 10 solar lanterns to impoverished and vulnerable families currently living without electricity in Sri Lanka. With the support of Karai Welfare Society (UK) and Mr. Kanthasamy from Karainagar we were able to identify 5 beneficiaries, who were each using 2 kerosene lamps to light their homes. Rather than donate 1 solar lantern each to 10 families, it was decided that it would be more impactful to donate two solar lanterns (a Leader EP-31 and a D.light S2) to each of the 5 families.
Please click here to see the detailed report of this donation.
http://www.karainagar.org/solar-lantern-donation-karainagar/
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் “காரை குட்டிஸ்-சிறுவர் குதூகலம்”
"காரை குட்டிஸ்-சிறுவர் குதூகலம்"
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் 5-12 வயதுச் சிறுவர்கள் ஒன்றுகூடும் குதூகலக் கொண்டாட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகள் கொண்ட சிறுவர் நிகழ்வென்பதால் தயவுசெய்து தங்கள் பிள்ளைகளின் ஆசனத்தை தவறவிடாமல் முன்கூட்டியே பதிவுசெய்யவும்.
விநோத உடையில் வேடிக்கை விளையாட்டுகளை விருந்தாக்க நாங்கள் தயார்…அந்த ஆனந்தத்தை தங்கள் அன்புசெல்வங்களுக்கு அள்ளி அளித்திட நீங்கள் தயாரா?
இன்றே அழையுங்கள்…மேலதிக விபரங்கள் கீழே அழைப்பிதலில்…
*அனுமதி இலவசம்
KYO (UK) is organising Karai Kutties Fun Day!!
It's a fun day where children can get together to make new friends, play some games, interact with other KYO (UK) members, enjoy dinner together and have a great day out!
As it's a children's event, our main priority is safety. Therefore we can only accommodate a certain number of children. If you are interested – please contact us ASAP, as there are only limited spaces left.
This is a FREE event – but only RSVP. Entrance at the door will not be permitted for safety reasons. Parents are also invited to join us on the fun day.
If you would like more information, or you want to book your space – email us at karaiyouthorganisation@gmail.com or call us at any of the numbers below.
Please show your support and also pass the message to your friends and family who might be interested.
Thank you very much!
காரை இளையோர் அமைப்பு (பிரித்தானியா)
மின்னஞ்சல்: karaiyouthorganisation@gmail.com
தொடர்பு
கண்ணன் : 07595876340
ஆதி : 07428782671
————————————-
நன்றி,
பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் .
காரைநகர் நலன் புரிச்சங்கம்— பிரித்தானியா கிளை காரை மண்ணில்……. பல புதிய திட்டங்களுக்கான 1மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு …..
காரைநகர் நலன் புரிச்சங்கம்— பிரித்தானியா கிளை காரை மண்ணில்…….
பல புதிய திட்டங்களுக்கான 1மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு …..
தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைக் கதம்பம் 2016
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் "காரை கதம்பம் 2016" நிகழ்வு Preston Manor School, Wembley, London, HA9 8NA எனுமிடத்தில் 23/01/2016 (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், காரை கீதம், மௌன அஞ்சலி மற்றும் வழமையான கலை நிகழ்ச்சிகளுடனும் எம்முறவுகளின் பேராதரவுடனும் நிகழ்ச்சிகள் களைகட்டின. நடனங்கள், வயலின், பாட்டுக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்சிகளை எமது சிறார்கள் திறம்பட வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வு www.karai.tv எனும் இணைய தொலைக்காட்சியில் இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வேறு நாடுகளில் உள்ளவர்களும் நேரடியாக கண்டுகளித்தார்கள்.
கடந்த ஆண்டு காரைக் கதம்ப விழாவில் பிரசவமான எமது செல்லக்குழந்தையான பிருத்தானியா காரை இளையோர் அமைப்பு மிகவும் சிறப்பான முறையில் தங்கள் ஓராண்டு செயல்த்திட்டங்களை தொகுத்து காணொளி முன்னிலைப் படுத்தல்( Video Presentation) ஒன்றை சபையோருக்கு ஒரு நிகழ்வாக வழங்கி அனைவரினதும் பாராட்டை பெற்றனர். இக்காணொளியினை கீழுள்ள இணைப்பில் நீங்கள் கண்டுகளிக்கலாம்:
www.youtube.com/watch?v=HRx_UX6nUIc
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எமது பிரதம விருந்தினரான வைத்திய கலாநிதி திரு தம்பையா வாமதேவன் அவர்களின் சிறப்பு உரையில் எமது இளையோரின் பங்களிப்பு எவ்வளவு திறம்பட உள்ளதென்பதனையும் எமது சங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு திறம்பெற நடைபெறுகின்றதென்பதனையும் எடுத்துரைத்திருந்தார்.
மேலும்இ எமது எதிர்கால திட்டங்களிட்கு தன்னாலான உதவிகளை செய்வதற்கும் எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எமது கௌரவ விருந்தினர் திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் தமது உரையினை பதிவு செய்திருந்தார். இதன்போது சாதி மத வேறுபாடற்று காரை மக்கள் அனைவரிதும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு செயற்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமெனவும் சங்கத்தினையும் காரை மக்களையும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து எமது சங்கத்தின் தலைவர் திரு சு கோனேசலிங்கம் (நாதன்) அவர்களின் உரை இடம்பெற்றது. இதன்போது எமது நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விளங்கங்களை சபையோருக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்திற்கும், காரை அபிவிருத்தி சபைக்கும் இடையிலான சில நிர்வாக சிக்கல்களை பற்றியும் குறிப்பிட்டார். இந்த நிர்வாக, மற்றும் இரு சபைக்குமான கருத்து முரண்பாடுகளையும் ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கும் முகமாக வரும் மார்ச் மாதம் முற்பகுதியில் ஒரு விசேட கூட்டத்தினை ஒழுங்கு செய்வதாகவும் கூறினார். இக்கூட்டத்திற்கு அனைத்து பிருத்தானியா வாழ் காரை மக்களையும் கலந்துகொண்டு தங்கள் சொந்தக் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போதுஇ தலைவர் அவர்கள் எமது சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நால்வர்களையும் (ராஜேந்திரா, சுந்தரதாசன், நாகேந்திரம் மற்றும் தவராஜா) மேடைக்கு வந்து தங்கள் கருத்துக்களை சபையோர்முன் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவர்களும் தங்கள் சார்பான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
எம் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாக நிற்பது என்பது பிரித்தானியா காரை நலன்புரிச்ச் சங்கத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டை அனைவரிற்கும் பறைசாற்றுவதாகவும் கூறிய பொழுது அரங்கமே அதிர்ந்தது.
இதனைதொடர்ந்து,மேலதிக நிகழ்வுகள் நடைபெற்று பங்குபற்றியவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவேறியது. கலந்து கொண்ட மக்கள் இராப்போசனத்திலும் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பினர்
நன்றி
நிர்வாகம்.
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.
——————————–
பிரித்தானியா காரை இளையோர் அமைப்பும், காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முதன் முறையாக முன்னெடுக்கும் நத்தார் தினக் கொண்டாட்டம்.
பிரித்தானியா காரை இளையோர் அமைப்பும், காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முதன் முறையாக முன்னெடுக்கும் நத்தார் தினக் கொண்டாட்டம்.
இதன் முக்கிய நோக்கம், பிரித்தானியா வாழ் காரை இளையோரை ஒன்று சேர்ப்பதும் மேலும் புதிய இளையோரை இணைப்பதுமாகும். இத்தோடு, எம் இளையோர்கள் காரை நலன்புரிச் சங்க உறுப்பினர்களோடான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தவும், அறியாத உறவுகளை அறிந்து கொள்ளவும் இந்த தளம் அமைக்கின்றார்கள். இதற்கு, பிரித்தானியா வாழ் காரை மக்களது ஆதரவு மிகவும் அவசியம். ஆகையால், பிரித்தானியா வாழ் காரை மக்கள் இக் கொண்டாட்டத்தில் தங்கள் பிள்ளைகளோடு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இவ் நத்தார் தினக் கொண்டாட்டம் தொடர்பான விடையங்கள் பின்வருமாறு:
இடம்: Rose House Function Suite, Kingsbury works, Barningham way, London NW9 8UP
திகதி: 05 மார்கழி 2015 (சனிக்கிழமை, 05/12/2015)
நேரம்: இரவு 6 மணி முதல் நள்ளிரவு வரை.
பற்றுச்சீட்டு: தனி நபருக்கு£18 (முன்கூடிய பதிவு) அல்லது £20 (நுழை வாயிலில்)
தொடர்பு: 07944 232 014 (நாதன்) / 079 5195 0843 (குமார்) / 07737121187 (நந்தன்)
மின்னஞ்சல்: info@karainagar.org & karaiyouthorganisation@gmail.com
மேலதிக தகவல்களை எமது இணையத் தளத்தில் (www.karainagar.org) பார்வையிடலாம்.
உங்கள் வரவை எதிர்பாத்திருக்கிறோம்.
நன்றி,
காரை இளையோர் அமைப்பு (பிரித்தானியா) மற்றும் காரை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா)
————————————————————————————
Karai Youth Organisation (UK) & Karai Welfare Society(UK)
( KYO(UK) and KWS(UK) )
Christmas Party 2015
Venue: Rose House Function Suite, Kingsbury works, Barningham way
London NW9 8UP
Date: 05th Dec 2015 (Saturday)
Time: 6pm till midnight
Contact: 07944 232 014 (Nathan) / 079 5195 0843 (Kumar) / 07737121187 (Nanthan)
E-mail: info@karainagar.org & karaiyouthorganisation@gmail.com
Price: £18/person (£20 on the day)
Program Details: This Christmas Party is mainly organised by Karai Youth Organisation (UK) with the support of Karai Welfare Society (UK). Please come together as a family and use this opportunity to mingle with other Karainagarians in the UK.
More details: Please visit www.karainagar.org
We look forward to meeting you all during this X-Mas party!
Thank you,
KYO (UK) and KWS (UK)
பிருத்தானியாவில் ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்து
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள்.
காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும் நிறுவிட மூலகர்த்தாவாக தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து உழைத்த காரைநகர் தந்த அருணாசல உபாத்தியாயர் அவர்கள் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படுகின்றார்.
சைவப்பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்ந்த மகான் அருணாசலம் அவர்களுக்கு காரைநகர் மைந்தர்கள் ஒவ்வொருவரும் நன்றிக்கடன்பட்டவர்கள் ஆவார்.
அந்த நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் பிருத்தானியா வாழ் காரை மைந்தர்களின் அமைப்பான பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி நூலின் முதல் பதிப்பு காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு காரைநகரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமக்கே உரித்தான தனித்துவமான துடிப்புடனும் பொறுப்புடனும் மிகச் சிறப்பாக இந்நூலினை பிருத்தானியா வாழ் காரை மக்களுக்கும்; கல்வியாளர்கள், சைவத் தமிழ் அன்பர்களு;ககும் அறிமுகஞ் செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் இந்நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது
நூல் வெளியீடு . சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920). (மீழ்பதிப்பு 2015)
நூல் வெளியீடு .
சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015)
காலம் :- 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை , மாலை 04:30மணியளவில்
இடம் :-Highgatehill Murugan Temple Hall
200A Archway Rd, London N6 5BA.
காரைமண் பெற்றெடுத்த மகான் சங்கரப்பிள்ளை அருணாசலம்.
யாழ்ப்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்கள், அதில் ஒருவர் எம் அருமை அருணாசல உபாத்தியாயர். மற்றிருவர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலப் பெருமான்( 1822- 1879) மற்றும் திரு.சு .இராசரத்தினம்(1884-1970) ஆவர் .
நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவைத்தையும் , பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்கள் இவர்கள்.
காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியை சேர்ந்த சிற்றம்பலம் சங்கரப்பிளைக்கும் , அவரின் பண்புமிக்க பாரியார் பத்மினியம்மாவுக்கும் 1864ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி புத்திரராக அவதரித்தார் திரு.அருணாசலம் ஐயா அவர்கள். எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்த , ஐயா அருணாசலம் அவர்கள் தமிழ் மொழியை காக்கவும், சைவசமயத்தை பேணவும் அரும்பாடுபட்டார். ஆறுமுக நாவலர் மறைவுக்கு பின் சைவ ஆசிரியர்களை தோற்றுவிப்பதிலும், சைவ தமிழ் பாடசாலைகளை உருவாக்குவதிலும் அரும்பாடுபட்டார். தனது பூர்வீக சொத்துக்களை விற்று இவற்றை நிர்வகிக்க போராடினார்.
— 10/04/1970 இல் வெளிவந்த இந்துசாதனத்தில் நூலாசிரியர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார் —
நாவலர் மறைந்தது 1879 இறுதியில். 1880இக்கு பின் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்று தோன்றியது. ஆங்கிலம் படிக்க பணமில்லாத வறிய மீன்கள் அங்கே அகப்பட்டன . ஒரு மீன் மட்டும் ஞானஸ்தானத் தீட்சைக்கு அகப்படாமல் நீண்டகாலந் தப்பித்துக்கொண்டிருந்தது. 1885இல் ஆசிரிய பயிற்சிப் பத்திரம் பெறுங்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. '' இதோ பிடி ஞானஸ்நானம் ! ஓ ! அஞ்ஞானியே !" என்ற நெருக்கமிருந்தது.
1885இல் ஒரு நாள் இரவு அந்த அஞ்ஞான மீனுக்கு நித்திரை வரவில்லை. கோழி கூவும் நேரத்தில் அந்த அஞ்ஞான மீனின் உள்ளத்தில் ஒரு சேவல் கூவியது. அந்தச் சேவல் , சேவலும் மயிலும் என்ற இடத்தில் வரும் சேவலுக்கினமான சேவல் போலும்!! அந்த ஞானமீன் துடிதுடித்துத் துள்ளி எழுந்தது. வலையைப் பீறிட்டுக் கொண்டு, மதிலைக் கடந்து விடிகிற சமயம் தெல்லிப்பளைத் தெருவில் குதித்தது. அது காரைதீவு மீன், ''அருணாசலம் '' என்பது அந்த மீனின் திவ்விய திருநாமம்.
அருணாசலத்திற்கு திருநீறு பூசுகிறவர்களும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக வேண்டுமென்ற பைத்தியம் உண்டானது. முப்பது வருடம் ஊண் , உறக்கம் செவ்வனே இன்றித் தெருத்தெருவாய் அலைந்தார் அந்த மகான் அருணாசலம். ஒருமுறை கால் நடையிற் கொழும்புக்கு போய், சேர் .அருணாசலத்தைக் கண்டவர் காரைதீவு அருணாசலம் என்ற கதையும் உண்டு.
இப்படியான பலபல பெரும் மகான்களை பெற்றெடுத்த எமது காரை மண்ணில் நாமும் அவதரித்துள்ளோம் என்று பெருமை கொள்வதுடன் நின்றுவிடாது, அவர்களின் பணிகளையும் , அவர்கள் வரலாறுகளையும் முன்னெடுத்து பேணிப் பாதுகாக்க எம் அடுத்த சந்ததிக்கு தாரை வாருங்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.
ப.தவராஜா,
முதுசங்களைத் தேடி, நூல் வெளியீட்டுக் குழு,
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
”களபூமி முத்தமிழ் பேரவைக்கு ” சர்வதேச ரீதியாக உதவி!!!
நான்கு தசாப்த்தங்களுக்கு மேலாக நற்பணியாற்றிவரும் ''களபூமி முத்தமிழ் பேரவைக்கு '' சர்வதேச ரீதியாக உதவி.
காரைநகர் களபூமி மண்ணின் பழமையானதும், பெருமைமிக்கதும், மற்றும் எமது மொழி,கலை, கலாச்சார , பண்பாட்டு விழுமியங்களை கடந்த 4தசாப்த்தங்களுக்கு மேலாக எடுத்தியம்பி வரும் '' களபூமி முத்தமிழ் பேரவைக்கு'' காரை புலம்பெயர் மன்றங்கள் சர்வதேச ரீதியாக உதவி வழங்க உத்தேசம்.
மேற்படி முத்தமிழ் பேரவையின் நிர்வாகி திருமதி ந.இராசமலர் அவர்களினதும், காரை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு.ப .விக்னேஸ்வரன்(ஓய்வுபெற்ற வடமாகான வலையக் கல்விப் பணிப்பாளர்,) அவர்களினதும் கடித மூலமான கோரிக்கையை அடுத்து, புலம் பெயர் மன்றங்களான பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் , கனடா காரை கலாச்சார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றுகூடி வருடாவருடம் தொடர்ந்து உதவிபுரிவதென உத்தேசித்துள்ளன.(பிரான்ஸ் காரை அபிவிருத்தி சபை மற்றும் அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம் என்பன எதிர்காலத்தில் இணையலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது)
1978ம் ஆண்டுகளில் மைசூர் நடராஜா என்று காரை மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு .ஆறுமுகம் நடராசா அவர்களால் இப் பேரவை ஆரம்பிக்கப் பட்டது. தமிழ் பற்றும், சமயப்பற்றும், ஊர்பற்றும் மிக்க தயாள குணத்தோன் திரு ஆறுமுகம் நடராசா அவர்கள் களபூமி மண்ணுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த காரைநகரிற்கே பல பெருமைகளை தேடித்தந்தவர். 1971ம் ஆண்டு வித்துவான் பிராங்ளின் சேல்லேரியன் செல்லையா நடராஜா அவர்களால் வெளிவந்த ''காரை மான்மியம்'' நூல் வெளிவர இவரும் ஒரு காரண கர்த்தா( இன் நூலின் முதல் பதிப்பிற்கு பதிப்புரை வழங்கியுள்ளார்). கொழும்பு விவேகனந்த வீதியில் இரஞ்சனா பதிப்பகம் ஒன்றையும் நடாத்தி வந்தார்.
தமிழன் தமிழனுடன் தமிழிலேயே பேசவேண்டும் என்று '' தமிழ் உலகம்'' எனும் அரும் பத்திரிகை ஒன்றையும் மொழி வளர்க்கும் தொலை நோக்கில் தன் சொந்த நிதியில் வெளியிட்டு வந்தார்.
முத்தமிழ் பேரவையின் கலை நிகழ்வுகளை பல இடங்களிலும் மேடையேற்றியுள்ளார். குறிப்பாக பட்டு மாமா அவர்களின் நல்லியக்க சபையில் பல தடவைகள் இந்நிகழ்வுகள் விருதுகளையும் பெற்றுள்ளது.
காரை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு ப.விக்னேஸ்வரன் அவர்களது இப் பேரவைக்கான உதவிக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல், இப் பேரவையானது களபூமி பிரதேசத்தில் மட்டுமன்றி, காரைநகர் ரீதியாக பரந்துபட்டளவில் பாகுபாடின்றி கலை நிகழ்வுகளை முன்னெடுத்து வந்துள்ளது.
அன்னாரின் மறைவுக்கு பின்னர்(1983ம் ஆண்டு) இவரது துணைவியார் திருமதி இராசமலர் அவர்கள் இத் தமிழ்ப் பேரவையை பல இன்னல்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றார். 1991 இடம் பெயர்வுக்கு பின்னர் 2005இல் இருந்து தனது சொந்த நிதி மூலமும், கனடாவில் உள்ள இவரது சகோதரர்களின் உதவி மூலமும், மற்றும் ஒருசில தனிநபர் உதவிகள் மூலமும் இயக்கி வருகின்றார். கனடா காரை கலாச்சார மன்றமும் இக்கால முன்னேற்றத்தில் பெரிதும் உதவியுள்ளது.
தற்பொழுது பெருகிவரும் மேலதிக தேவைகளை ஈடுகொடுப்பதற்காக எமது புலம்பெயர் மன்றங்களின் ஆதரவையும் அனுசரனையையும் நாடி நிற்கின்றார். இவரது கைப்பட வரைந்த கோரிக்கை கடிதத்தில் தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பழமையானதும், பெருமைமிக்கதுமான இப் பேரவைக்கு ஆதரவு வழங்க புலம் பெயர் வாழ் களபூமி மக்கள் மட்டுமன்றி அனைத்து காரை மக்களும் முன்வர வேண்டுமென்று அன்பான கோரிக்கையை நாமும் முன் வைக்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :-
நாதன் – 07944 232014
குமார் – 07951 950843
சிவம் – 01908 558976.
நன்றி
வணக்கம் .
நிர்வாகம்
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .
06/11/2015
தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
களபூமி கலையகத்திற்கென சொந்தமாக கட்டிடம் !!!
களபூமி கலையகத்திற்கென சொந்தமாக கட்டிடம் !!!
பிரித்தானியா வாழ் களபூமி மக்கள் 01.11.2015இல் லண்டனில் ஒன்றுகூடி களபூமியில் கலை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்கனவே இயங்கிவரும் களபூமி கலையகத்திற்கு சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கி கலையகத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளனர். திரு.சிவா மகேசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 5பேர் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.
காரைநகரை மேலும் பாதுகாப்பானதும் வளமானதுமான ஒரு கிராமமாக மாற்றும் மாபெரும் வேலைத்திட்டம் வெகுவிரைவில்
அன்பான காரை மக்களே,
காரைநகர் உதவி அரசாங்க அதிபர், பிரதேச சபை, கிராம சேவகர் மற்றும் புலம்பெயர் காரை மக்களின் உதவியுடன் பிரித்தானியா காரை நலன்புரி சங்கம் கீழ் காணும் வேலைத்திட்டங்களை ஒருங்கமைப்பதற்கு முன்வந்துள்ளது.
1) இதன் ஒரு முன்மாதிரி திட்டமாக, களபூமி மற்றும் பாலாவோடை பகுதிகளில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலுள்ள பகுதிகளை துப்பரவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக, இதர பிரதேசங்களையும் (கோவளம், வாரிவளவு, பலகாடு, மற்றைய இடங்களையும்) துப்பரவாக்குவதற்கும் உத்தேசித்துள்ளோம்.
2) இந்த துப்பரவாக்குதல் பணியைத் தொடர்ந்து இவ்விடங்களின் வீதிகளில் சூரியக் கதிரில் இயங்கும் மின்விளக்குகளை (Solar Street Lights) பொருத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
3) மேலும், பௌதீகவள சூழலைகொண்டு ( மண் மாதிரி, நீர்த்தேவை, இடவசதி) சரியான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அவ்வவ் இடங்களுக்கு ஏற்ப மரநடுகை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற் காணும் செயற்திட்டங்கள் மூலம் எமது காரைநகரை மேலும் செழிப்புள்ள ஒரு கிராமமாக மாற்றலாம். இவை அனைத்திற்கும் எமது காரை மக்களது (புலத்திலும், புலம்பெயர்விலுமுள்ள மக்களது )பங்களிப்பு மிகவும் தேவைப்படுவதால், கீழ்காணும் காரை நலன்புரி சங்க நிர்வாக உறுப்பினர்களோடு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கனடா, சுவிஸ் , பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் உள்ள காரை மக்கள் விரும்பின் அங்குள்ள மன்றங்களின் நிர்வாகத்தினருடன் தொடர்புகளை மேற்கொண்டு மேலதிக இத் திட்டம் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
நாதன் (தலைவர்): 07944232014
குமார் (போசகர்): 07951950843
சிவம் (உப செயலாளர்): 01908 558976
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"
நன்றி,
காரை நலன்புரி சங்கம் (பிரித்தானியா)
மின்னஞ்சல்: info@karainagar.org
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2015 …
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2015 …
மேற்படி மன்றத்தின் பொதுக் கூட்டம் இன்று காலை (18/10/2015)11:30மணியளவில்
17, Stonefield Close , Ruislip, London, HA4 0XT எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றது.
திரு.K . ஒப்பிலாமணி அவர்களின் தேவாரத்துடன் தலைவர் திரு .S .கோணேசலிங்கம் தலைமையில் ஆரம்பமானது . தொடர்ந்து தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.
அடுத்து புதிய நிர்வாகத்தெரிவுக்காக நிர்வாகம் உத்தியோக பூர்வமாக கலைக்கப்பட்டு மீழ் தெரிவுக்காக போஷகர் திரு.P .தவராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கீழ் அமைந்தவாறு நிர்வாகம் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டது.
அடுத்து வந்த காரைக் கண்ணோட்டத்தில், சபையினர் கேள்வி பதில் நிகழ்வில், வழமைபோல் பல காரசார விவாதங்கள் (குடி தண்ணீர் விநியோகம், பிரித்தானியாவில் எமது மன்றத்திற்கென சொந்தமாக ஒரு இடம் கொள்வனவு செய்தல், காரை தீபம் 2015– வெள்ளி விழா விமர்சனம், நூல்நிலையம் என பல) இடம்பெற்று புதிய நிர்வாகத்தினரால் ஆராயப்பட்டது .
இறுதியாக நிதி ஒதுக்கீட்டின் போது, மன்றத்தை அணுகியிருந்த மூன்று வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு,அதில் இரண்டு வேலைத்திட்டங்களுக்கு 1.5 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவையாவன , கலாநிதி ஆ தியாகராஜா ம.ம.வித்தியாலய மைதான சுற்றுமதில் நிர்மாண வேலைகள் , மற்றும் யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய மைதான புனருத்தாரணம், புதிய Photo copier equipment கொள்வனவு செய்தல் என்பனவாகும்.
புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு :-
தலைவர் — திரு .S .கோணேசலிங்கம்
உப தலைவர் — திரு .V .நாகேந்திரம்
செயலாளர் — திரு .P.சிவானந்தராசா
உப செயலாளர் — திரு .S .சிவபாதசுந்தரம்
பொருளாளர் — திரு .B .கஜேந்திரன்
உப பொருளாளர் — திரு . P . ஞானாநந்தன்
நிர்வாகசபை உறுப்பினர் :-
1) Dr .K .சந்திரசேகரம்
2) திரு. T.தனபாலன்
3) திரு .S .கிருபாகரன்
4) திரு. K .விக்கினேஷ்வரன்
5) திரு .K . பாலகிருஷ்ணன்
6) திரு .S .சிவராஜா
7) திரு .V .நடராஜா
8) திரு. R .சிவசுப்ரமணியம்
9) திரு. K .ராஜரட்ணம்
10) திரு . T.தேவானந்தம்
11) திருமதி . C .சர்வானந்தன் .
போஷகர் சபை உறுப்பினர்கள்
1) திரு R .சுந்தரதாசன்
2) திரு P . தவராஜா
நன்றி,
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்
”காரை தீபம் 2015”
''காரை தீபம் 2015''
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா 03/10/2015 அன்று 750இக்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த மக்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
600 இருக்கைககள் கொண்ட அழகான மண்டபத்தில் இருக்கைகள் நிரம்பியபோதும் 150இக்கும் மேற்பட்ட மக்கள் மண்டபத்தின் வெளியே கூடியமர்ந்து கொண்டாடினர்.
”காரை தீபம் 2015”
''காரை தீபம் 2015''
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா நேற்றுமாலை (03/10/2015) அன்று 750இக்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த மக்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
600 இருக்கைககள் கொண்ட அழகான மண்டபத்தில் இருக்கைகள் நிரம்பியபோதும் 150இக்கும் மேற்பட்ட மக்கள் மண்டபத்தின் வெளியே கூடியமர்ந்து கொண்டாடினர்.
மேலதிக முழுமையான செய்திகளுடன் புகைப்படங்களையும் எதிர்பாருங்கள்.
ஒன்றுபட்டால் காரைநகர் 2025இல் இவ்வாறு அமையும்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நிகழ்வின் பிரதம விருந்தினர்களான திரு ESP நாகரத்தினம் , திரு சண்முகம் சிவஞானம் , திரு சுந்தரலிங்கம் கணநாதன் ஆகியோர் சற்று முன்னர் லண்டன் Heathrow விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நிகழ்வின் பிரதம விருந்தினர்களான திரு ESP நாகரத்தினம் , திரு சண்முகம் சிவஞானம் , திரு சுந்தரலிங்கம் கணநாதன் ஆகியோர் சற்று முன்னர் லண்டன் Hearthrow விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களை வரவேற்க பிருத்தானியா காரை நலன் புரிச்சங்க தலைவர் திரு சுப்ரமணியம் கோணேசலிங்கம் , உப தலைவர் திரு குமாரசாமி விக்னேஸ்வரன் உட்பட மற்றும் பல மன்றத்தின் முக்கிய நிர்வாகசபை உறுப்பினர்களும் , நண்பர்களும் விமான நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான எமது சகோதர மன்றத்தின் (சுவிஸ் காரை அபிவிருத்தி சபை) நிர்வாகசபைத் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்த அவர்களும் இன்று மாலை luton விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
வெள்ளிவிழா நிகழ்வு ஒருங்கமைப்புக்கள் மிகுந்த ஆழுமையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று(02/10/2015 ) பிற்பகல் 03;30தொடக்கம் மாலை 05:00 மணிவரை GTV தொலைக்காட்சியில் எமது விழா பற்றிய நேரடி நேர்காணல் ஒன்றை '' உறவுகளின் சங்கமம் '' எனும் நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.
நன்றி.
நிர்வாகம்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.