பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்

எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை

SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12

என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

 

பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்

 

 

 

isvaram. 1pdf