யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா 20.05.2016 இடம் பெற்றது. அத்துடன் நினைவு பரிசில்களும் மற்றும் அவர்களை பாராட்டி பண பரிசில்களும் வழங்கப்படன.
யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா 20.05.2016 இடம் பெற்றது. அத்துடன் நினைவு பரிசில்களும் மற்றும் அவர்களை பாராட்டி பண பரிசில்களும் வழங்கப்படன.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை
காரைநகர்ப் பாடசாலைகளில் இருந்து இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை மூலம் நடைபெற்ற இப்பாசறையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய காரை அபிவிருத்திச்சபையின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் தாற்பரியங்கள் பற்றி மிகச்சிறந்த முறையில் எடுத்துக்கூறினார்.மேலும் அவர் கனடா காரை கலாச்சார மன்றம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கட்கு பயிற்சிப்பரீட்சைகள் வைப்பது வழக்கம் ஆனால் இம்முறை மாகாணக்கல்வித்திணைக்களம் மற்றும் வலயக்கல்வித்திணைக்களம் என்பவற்றின் பரீட்சைகள் கூடுதலாக இருப்பதனால் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கமைவாக இம்மாணவர் முகாம் நடாத்தப்பட்டது.
யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனது உரையில் இம்முகாமை சிறந்த முறையில் நடாத்துவதற்கு அனுசரணையாக இருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு காரைநகர் கோட்ட அதிபர் ஆசிரியர்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவித்தார். மேலும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேச மூர்த்தி மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் திரு க.மணிமார்பன் ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர்.
இம்முகாம் வடமாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு..A.S .சற்குணராசா அவர்களின் நெறிப்படுத்தலில் 10 வளவாளர்களினால் இம்மாணவர் முகாம் நல்ல முறையில் நடைபெற்றது.இம்முகாம் மாணவர்கட்கு பெரிதும் பயனுடையதாக இருந்தமை பற்றி பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முதலிடங்களைப் பெற்று காரை இந்து சாதனை
வலய மட்டத்தில் நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் இவ்வாண்டு காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒன்பது முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
அகில இலங்கைத் தமிழ்த்தினப்போட்டி – 2016 வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர் விபரம்.
இல போட்டி பிரிவு நிகழ்ச்சியின் பெயர் மாணவர் முழுப்பெயர் பெயர்
01 2 பாவோதல் திருநாவுக்கரசு ஆதிரை
02 5 பேச்சு நவரட்ணராஜா யஸ்மினா
03 2 இசை – தனி ஜெயமோகன் சரண்யா
04 3 இசை – தனி சிவனேஸ்வரன் புருசோத்தமி
05 4 இசை – தனி ஆனந்தராசா அமிர்தா
06 5 இசை – தனி கிளாஸ்டர் தர்சினி
07 குழு–I குழு இசை – I புருசோத்தமி சிவனேஸ்வரன்
சிவனேஸ்வரன் சர்வேஸ்வரன்
தமிழினி பேரின்பராசா
சரண்யா ஜெயமோகன்
அபிராமி கிருஸ்ணபவன்
மகேந்திரராசா பானுஜன்
சிந்துஜா ஆரோகணன்
அனுஜா கிருஸ்ணபவன்
நிரோஜினி வசந்தகுமார்
08 குழு–II குழு இசை – II தர்சினி கிளாஸ்டர்
தர்ஜிகா மூர்த்தி
மேகலை தேவேந்திரன்
பஞ்சராசா மகீபன்
அமிர்தா ஆனந்தராசா
சர்மிளா கிளாஸ்டர்
தாரணி சடாட்சரம்
பிரியா கிருபானந்தராசா
09 திறந்த போட்டி விவாதம் கனகலிங்கம் வினோதன்
நவரட்ணராஜா ஜஸ்மினா
பரமேஸ்வரன் பிரதீபன்
இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் காரை இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள்
நாடக விழாவில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களும் பங்கு பற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்திருந்தனர்.
இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 04.05.2016 அன்று நடைபெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவிலேயே காரை இந்து மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி பே. சந்திரதாஸன், திருமதி அ. ராஜ்குமார் ஆகியோர் முறையே புஸ்பாஞ்சலி, கிராமிய நடனம் ஆகியனவற்றிற்கு நட்டுவாங்கம் வழங்கியிருந்தனர். இவ்விரு நடனங்களுக்கான இசையை பாடசாலையின் இசை ஆசிரியர்கள் திருமதி ப. முகுந்தன், திருமதி க. றொபேஷன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பங்கு பற்றிய ஆசிரியர்கள்இ மாணவர்ளின் விபரங்கள் வருமாறு:
புஸ்பாஞ்சலி நடனம்
நட்டுவாங்கம் : திருமதி பே. சந்திரதாஸன்
இசை : திருமதி ப. முகுந்தன்
திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்
1. செல்வி ம. துஸ்யந்தி
2. செல்வி பா. குலமதி
3. செல்வி சு. சிந்துஜா
4. செல்வி க. சரண்யா
5. செல்வி மு. கிறேசியா
6. செல்வி இ. லக்சிகா
கிராமிய நடனம்
நட்டுவாங்கம் : திருமதி அ. ராஜ்குமார்
இசை : திருமதி ப. முகுந்தன்
திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்
1. செல்வன் அ. பிரணவரூபன்
2. செல்வன் ஏ. கோபிநாத்
3. செல்வன் சு. ஜீவிதன்
4. செல்வன் இ. ஜீவரங்கன்
5. செல்வி வ. நிலா
6. செல்வி சி. ஜிவிசா
7. செல்வி வி. கஜந்தினி
8. செல்வி உ. பிருந்தா
9. செல்வி க. டிலோசினி
10. செல்வி சு. லக்சிகா
11. செல்வி ஆ. அபிராமி
12. செல்வி கா. கோகுலதர்சா
13. செல்வி க. பூர்விகா
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.