Tag: காரைச் செய்திகள்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2017” தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்
"தியாகத் திறன் வேள்வி 2017" தொடர்பான
முன்னோடிக் கலந்துரையாடல்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி" மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகள் இம்முறை 2017 இல் இரண்டாம் தவணை விடுமுறைக்கு முன்பதாக இடம்பெறவுள்ளது. இந் நிலையில் எமது சபையின் தயார்நிலை உறுப்பினர் திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்கள் சமீபத்தில் காரைநகர் சென்றிருந்தார் தியாகத்திறன் வேள்வி 2017 க்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவர் முன்னிலையில் நடாத்துவதென மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு திர்மானித்திருந்துது. இதற்கமைய இவ் ஆலோசனைக் கூட்டம் 07.04.2017 வெள்ளக்கிழமை அன்று பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பின்வரும் சான்றோர் கலந்து சிறப்பித்தனர்
1) சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளருமாகிய கலாபூஷணம், பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கள்.
2) சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகருமாகிய கலாபூஷணம், பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள்.
3) சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபருமாகிய திரு. அருணாசலம் வரதராஜன் அவர்கள்.
4) முன்னாள் காரை அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமகாண கல்விப்பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபை உப தலைவருமாகிய திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்கள்.
5) பாலவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபை செயலாளருமான திரு. ஆ.யோகலிங்கம் அவர்கள்.
6) கலாநிதி திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;.
7) வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி. பாராசக்தி வரதராஜன் அவர்கள்.
8) காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி. சிவந்தினி வாகீசன் அவர்கள்.
9) யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள்.
10) யாழ்ற்றன் கல்லூரி பிரதி அதிபர் திரு. ந. கிருஷ்ணபவான் அவர்கள்
11) காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய அதிபர் திரு. அருளானந்தம் சாந்தகுமார் அவர்கள்.
12) காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்.
13) காரைநகர் வியாவில் சைவ வித்தியாசாலை அதிபர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள்.
மேற்படி கூட்டத்தில் உரையாடப்பட்ட முக்கிய விடயங்களும் தீர்மானங்களும்:
1. கடந்த கால தியாகத்திறன் போட்டிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளரின் சிபார்சின் அடிப்படையிலும் சபையினரதும் குழுவின் ஏனைய உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடனும் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.
2. இவ்வருடம் திருக்குறள் மனனப் போட்டி ஆண்டு இரண்டில் இருந்து ஐந்து வரையான மாணவர்களுக்கு மாத்திரம் நடாத்தப்படும்.
3. தியாகத்திறன் போட்டிகளில் மாணவர்களின் விருப்பமும் பங்குபற்றலும் அதிகரித்திருப்பதால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் ஆசிரியர்கள் அதிபர்கள் தமது பங்களிப்பை மேலும் அதிகரித்தல்.
4. மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த காரை சமூகத்தின் ஆளுமையை மேம்படுத்தவும் முத்தமிழின் மூன்றாம் கலையாம் நாடகக் கலையை மீண்டும் காரையூரில் துளிர்க்க வைக்கவும் இம்முறை நாடகப் போட்டிகள் அறிமுகப்படுத்தப் படும்.
5. நாடகப் போட்டிகளில் பாடசாலை தாண்டிய ஏனைய பொது நிறுவனங்கள் பொது மக்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதமளவில் இடம்பெறும். ஆர்வமுடையோர் தற்போதிருந்தே தயார்செய்து கொள்ளலாம். போட்டியின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரையும் போட்டி பற்றிய அறிவித்தல் விதிமுறைகள் குறித்த அறிக்கையும் விரைவில் வெளிவரும்.
6. நாடகப் போட்டிகளுக்கான முதற் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் உட்பட பரித்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்களை வழங்கவும் அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக சுழல் கேடயம் ஒன்றை வழங்கவும் நம் சபையின் போஷகர்களில் ஒருவரான அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர் முன்வந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.
7. நாடகக் கலையின் முக்கியத்துவம் சமூக வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியன பற்றிய புரிதலுடனும் பெருமனதுடனும் அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் போட்டிகளுக்கு அனுசரணை நல்க முன்வந்தமை பற்றி கூட்டத்தில் நன்றியறிதலுடன் பாராட்டப்பட்டது.
8. நாடகம் தவிர்ந்த ஏனைய போட்டிகள் ஆங்கில ஆடி மாதம் முதல் வாரத்தின் பின்னர் இடம்பெறும். இது குறித்த விரிவான அறிக்கையும் விண்ணப்பங் கோராலும் விரைவில் வெளிவரும்.
9. தியாகத்திறன் வேள்வி போட்டிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
10. ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
11. மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் இப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவும் விரிவாக்கம் செய்யவும் உறுதி எடுக்கப்பட்டது.
கலந்துரையாடலின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
18.04.2017
யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா
யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா
யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 10ம் நாள் மாலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 10ம் நாள் காலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 9ம் நாள் மாலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 9ம் நாள் காலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 8ம் நாள் காலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 7ம் நாள் மாலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 7ம் நாள் காலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 6ம் நாள் மாலை நிகழ்வு
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2017” மாணவர் போட்டிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
"தியாகத் திறன் வேள்வி 2017"
மாணவர் போட்டிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி 2017"க்கான ஆலோசனைக் கூட்டம் எதிர் வரும் 07.04.2017 வெள்ளக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெறவிருக்கின்றது.
மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களும், காரை அபிவிருத் திச் சபை உறுப்பினர்களும், காரைநகர் பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், நலன்விரும்பிகளும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நிர்வாக சபை உறுப்பினரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
04-04-2017
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 5ம் நாள் காலை நிகழ்வு
காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 4ம் நாள் மாலை நிகழ்வு