Tag: காரைச் செய்திகள்
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/03/2018 புதன்கிழமை இடம்பெற்ற சதுர்த்தி உற்சவம்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சதுர்த்தி உற்சவம் 21/03/2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று சாமி வீதியுலா வரும் காட்சியும் அதனை தொடர்ந்து அறநெறி மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018
காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018 திங்கட்கிழமை19/03/2018 மாலை2.00 மணிக்கு யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் தலைவர் இ,திருப்புகளுர்சிங்கம்(செயலாளர் திக்கரை கிராம அபிவிருத்தி சங்கம்),ஆசியுரை(திரு.கு.சண்முகராஜக்குருக்கள்(பிரதம குரு கரைப்பிட்டியந்தனை விநாயகர் ஆலயம்),பிரதம விருந்தினர் திரு.ப.கண்ணதாசன் (கணக்காளர் துணுக்காய் கல்வி வலயம்),சிறப்பு விருந்தினர்கள் திரு.வி.புவனேந்திரராஜா(முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்),திரு.இ.இராசதுரை (கிராமசேவையாளர் காரைகிழக்கு J/42)கௌரவ விருந்தினர்கள் சி.கபிலன் (சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் ஊர்காவற்துறை) அ.புஸ்பராணி (காரைநகர் முன்பள்ளிகள் இணைப்பாளர்)ஆகியோர் கலந்துகொண்டு இவ்விளையாட்டினை சிறப்பித்தனர்.