Category: திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி
காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018
காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018 திங்கட்கிழமை19/03/2018 மாலை2.00 மணிக்கு யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் தலைவர் இ,திருப்புகளுர்சிங்கம்(செயலாளர் திக்கரை கிராம அபிவிருத்தி சங்கம்),ஆசியுரை(திரு.கு.சண்முகராஜக்குருக்கள்(பிரதம குரு கரைப்பிட்டியந்தனை விநாயகர் ஆலயம்),பிரதம விருந்தினர் திரு.ப.கண்ணதாசன் (கணக்காளர் துணுக்காய் கல்வி வலயம்),சிறப்பு விருந்தினர்கள் திரு.வி.புவனேந்திரராஜா(முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்),திரு.இ.இராசதுரை (கிராமசேவையாளர் காரைகிழக்கு J/42)கௌரவ விருந்தினர்கள் சி.கபிலன் (சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் ஊர்காவற்துறை) அ.புஸ்பராணி (காரைநகர் முன்பள்ளிகள் இணைப்பாளர்)ஆகியோர் கலந்துகொண்டு இவ்விளையாட்டினை சிறப்பித்தனர்.
திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா ( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச செயலக கணக்காளர் திருமதி நி.ராதிகா அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக மழலைகள் விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மழலைகளுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இவ்வாண்டிற்கான சிறப்புக் கௌரவத்தை ஓய்வு நிலை கிராம சேவையாளரும் ஆசிரியருமான திரு இ.திருப்புகலூர்சிங்கமும் சங்கத்தின் தலைவர் திரு வே.பரமசிவம்பிள்ளையும் பிரபல ஓதுவார் திரு சு.தர்மலிங்கமும் சித்தாந்த வித்தகர் திரு வே.நடராசா ஆகியோர்க்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.