Tag: காரைச் செய்திகள்
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய விளம்பி வருஷம் 2018 அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய விளம்பி வருஷம் 2018 அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
விநாயகப்பொருமான் அடியார்களே!
ஈழத்தின் திருநாட்டின் வடபால் திசையில் அமைந்துள்ள காரைநகரில் உதயன் உதிக்கின்ற திசையில் அமைந்துள்ள தன்னையம்பதியில் ஆலமர தல விருட்ஷத்துடன் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு திருவருள் பலித்துக்கொண்டு விளங்கும் தன்னை சித்தி விநாயகப்பொருமானின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நிகழ்வும் மங்களகரமான விளம்பி வருஷம் ஆனித்திங்கள் 4ஆம் நாள் (18/06/2018) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவம் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது. தினமும் முற்பகல் 9.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 8.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும் .இக் காலங்களில் அடியார்கள் அனைவரும் ஆசாரசீடர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து அபிஷேக ஆராதனைகளுடம் உட்சவத்தைக்கண்டு தரிசனம் செய்து இஷ்டசித்திகளை பெற்ருயிமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நாற்புறமும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழிலோடு கம்பீரமாக காட்சிதருகின்றது காரை மண். யாழ்ப்பாண குடாநாட்டின் பெருநிலப்பரப்போடு இணைக்கின்ற பொன்னாலை பாலத்தை கடந்து உள்ளே நுழைகின்றபோது ” காரைநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது ” என்கின்ற மகுட வாசகத்தோடு கூடிய வரவேற்பு வளைவு 11.06.2018 அன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாற்புறமும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழிலோடு கம்பீரமாக காட்சிதருகின்றது காரை மண். யாழ்ப்பாண குடாநாட்டின் பெருநிலப்பரப்போடு இணைக்கின்ற பொன்னாலை பாலத்தை கடந்து உள்ளே நுழைகின்றபோது ” காரைநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது ” என்கின்ற மகுட வாசகத்தோடு கூடிய வரவேற்பு வளைவு 11.06.2018 அன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சமய அனுஷ்டானங்களுக்கு பின்னர் ஆடவல்லான் நடராஜப் பெருமான் திருவுருவ சிலையை வீணாகான குரு முதல்வர் வாசுதேவ குருக்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நினைவுக்கல் மற்றும் நுழைவாசல் நாடா ஆகியவற்றை சிறுவர் விவகார பிரதி அமைச்சர் திருமதி .விஜயகலா மகேஸ்வரன் , மாநகர சபை ஆணையாளர் திரு . ஜெயசீலன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.
காரை மண்ணின் அழகை மேம்படுத்தும் பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது என்கின்ற பிரதான நுழைவாசல் நிர்மாணப் பணிகள் 2008ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு , சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுமுகமான சூழ்நிலையால் கசூரினா கடற்கரைக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகளையும், ஈழத்து சிதம்பர உற்சவ நிகழ்வுகளை தரிசிக்க செல்லும் அடியவர்களையும் மற்றும் உள்ளூர் , வெளியூர் வாசிகள் அனைவரையும் இந்த அலங்கார வளைவு வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
காரைநகர் வரவேற்பு வளைவு தொடர்பாக முன்னர் எடுத்துவரப்பட்ட செய்தி பார்வையிட கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும்.
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை அன்று இடம்பெற்ற களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் பூங்காவனத் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2018 புதன்கிழமை அன்று களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் பூங்காவனத் திருவிழா நிகழ்வில், களபூமி முத்தமிழ் பேரவை,திக்கரை, தன்னை, பாலாவோடை அறநெறி மாணவர்களின் கலைநிகழ்வுகளும் மற்றும் சக்தி மேம்பாட்டுக் கழகத்தினரின் கலை நிகழ்வுகளும், சிறப்பு பட்டிமன்றமும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு ஊஞ்சல் பாடல் பாடப்பட்டு அழகிய பூந்தண்டிகை வாகனத்தில் வீதியுலா வந்து சாந்தன் இசைக்குழுவினரின் இசைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
திரு.ஆனந்த சுதாகரனின் குழந்தைகளுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மனிதாபிமான உதவி
திரு.ஆனந்த சுதாகரனின் குழந்தைகளுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மனிதாபிமான உதவி
தாயின் கருவில் எட்டு மாதங்களாக ஒரு குழந்தையும், மற்றைய குழந்தை ஒரு வயதாகவும் இருந்தபோது திரு. ஆனந்த சுதாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். குடும்பத் தலைவனின் துணை இல்லாமல், சிறு வேலைகள் செய்து பொருளாதாரத்தை கவனித்து வந்தார் தாயார். கணவரின் விடுதலை, பிள்ளைகள் இருவரது எதிர்காலம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு மத்தியில் ஆதரவற்ற நிலையில் தவித்த தாயாரும் கடந்த பங்குனி மாதம் நோயுற்று மரணமானார்.
தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத துரதிஷ்ட்டமான நிலையிலும், இரு குழந்தைகளும் தவித்து நிற்கின்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். கருணை உள்ளம் கொண்ட காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தான நிர்வாகத்தினர், குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படை வாழ்வாதார தேவைகளுக்காக ரூபா 50,000 அன்பளிப்பு செய்துள்ளனர். அத்துடன் குழந்தைகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்றும் ஆறுதல் அளித்து உள்ளனர்.
மனித நேய பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக நல தொண்டார்வ அமைப்புகளுக்கு முன்னுதாரணமாகவும், மனிதருள் மாணிக்கமாகவும், மகத்தான அறப்பணிபுரிகின்ற வியாவில் ஐயனார் தேவஸ்தான அமைப்பினர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.05.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்! (புதிது)
படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞானபைரவபெருமானுக்கு விளம்பி வருஷம் வைகாசித் திங்கள் 14ம் நாள் திங்கட்கிழமை (28.05.2018) சதுர்த்தசி திதியும்,விசாக நட்ஷத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் இடம் பெற்று. மாலை மணிக்கு விசேட பூஜையும் அதனைத்தொடர்ந்து மங்கள வாத்திய கச்சேரியும் இரவு மணிக்கு விசேட வசந்த மண்டப பூஜையையும் பைரவப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம் பெற்றன.
படத்தொகுப்பு – 2