திரு.ஆனந்த சுதாகரனின் குழந்தைகளுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மனிதாபிமான உதவி

 

 

திரு.ஆனந்த சுதாகரனின்  குழந்தைகளுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மனிதாபிமான உதவி

தாயின் கருவில் எட்டு மாதங்களாக  ஒரு குழந்தையும்,  மற்றைய குழந்தை ஒரு வயதாகவும் இருந்தபோது திரு. ஆனந்த சுதாகரன் அவர்கள்   2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். குடும்பத் தலைவனின்  துணை இல்லாமல், சிறு வேலைகள் செய்து பொருளாதாரத்தை கவனித்து வந்தார் தாயார். கணவரின் விடுதலை, பிள்ளைகள் இருவரது எதிர்காலம்,  பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு  மத்தியில் ஆதரவற்ற நிலையில் தவித்த  தாயாரும் கடந்த பங்குனி  மாதம் நோயுற்று மரணமானார்.

தாயை இழந்து விட்ட  நிலையிலும்,  தந்தை  இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத துரதிஷ்ட்டமான  நிலையிலும்,  இரு குழந்தைகளும் தவித்து நிற்கின்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். கருணை உள்ளம் கொண்ட காரைநகர்  வியாவில் ஐயனார் தேவஸ்தான நிர்வாகத்தினர், குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படை வாழ்வாதார தேவைகளுக்காக  ரூபா 50,000 அன்பளிப்பு செய்துள்ளனர். அத்துடன் குழந்தைகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்றும் ஆறுதல் அளித்து  உள்ளனர்.

மனித நேய பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக நல தொண்டார்வ அமைப்புகளுக்கு முன்னுதாரணமாகவும்,   மனிதருள்  மாணிக்கமாகவும், மகத்தான அறப்பணிபுரிகின்ற வியாவில் ஐயனார் தேவஸ்தான அமைப்பினர் பாராட்டுதலுக்குரியவர்கள்.