Category: Google Photos
திக்கரை முருகனுக்கு இன்று கொடி
காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் மிகச் சிறப்பாக இடம்பெற உள்ளது.
மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்க்கிழமையும் மறுநாள் புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.
இன்றைய கொடியேற்றக் காட்சிகளை இங்கே காணலாம்.
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த புதன்கிழமை ஆலயத்தில் இடம்பெற்றது.
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த புதன்கிழமை ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்த ஆண்டே அம்பாளுக்கு மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தேர்த் திருவிழாவும் இடம்பெற்றது.
அம்பாளுக்கு தேர் இல்லாத குறையை அறிந்த பத்தர்கள் புதிய தேரினை அமைக்கவேண்டும் என்ற முடிவினை தேர்த்திருவிழா அன்றே எடுத்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.அடுத்த ஆண்டு அம்பாள் புதிய சித்திரத்தேரில் ஆரோகனிக்கும் காட்சி இடம்பெறும்.
காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு விஞ்ஞான ஆசிரியர் இ.திருப்புகழூர்சிங்கம் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,ஓய்வு நிலை அதிபர் கா.குமாரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைநகர் தந்த இசைக்கலைஞர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் கனடாப் பயணம் வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்து
காரைநகர் இசைக் குடும்பத்தின் பிரதிநிதியாக இசைக் கலைஞர் இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil அவர்களை கடல் கடந்து கனடாவில் வாழும் கனடா வாழ் காரை மக்கள் சார்பில் வரவேற்பதில் எமது மன்றம் பெருமையடைகின்றது.
தங்களின் கனடாப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
கனடா-காரை கலாச்சார மன்றம்
ரொரன்ரோ
கனடா
27.06.2015
TVI தொலைக்காட்சியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணலின் மறுஒளிபரப்பு
காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil. அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு TVI தொலைக்காட்சியில் நாளை சனிக்கிழமை(27.06.2015) காலை 7:30 இற்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
TVI தொலைக்காட்சியில் இராகசுரபி.செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணல்
காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி TVI தொலைக்காட்சியில் இன்று வியாழக்கிழமை (25.06.2015) மாலை 5:00 – 6:00 மணி வரையான இடைநேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.