காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த புதன்கிழமை ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்த ஆண்டே அம்பாளுக்கு மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தேர்த் திருவிழாவும் இடம்பெற்றது.
அம்பாளுக்கு தேர் இல்லாத குறையை அறிந்த பத்தர்கள் புதிய தேரினை அமைக்கவேண்டும் என்ற முடிவினை தேர்த்திருவிழா அன்றே எடுத்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.அடுத்த ஆண்டு அம்பாள் புதிய சித்திரத்தேரில் ஆரோகனிக்கும் காட்சி இடம்பெறும்.