Tag: காரைச் செய்திகள்
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
சிவநெறி செல்வர்களே! புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞானபைரவபெருமானுக்கு விளம்பி வருஷம் வைகாசித் திங்கள் 14ம் நாள் திங்கட்கிழமை (28.05.2018) சதுர்த்தசி திதியும்,விசாக நட்ஷத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் நடைபெற,காவல் தெய்வமாகவும் வழித்துணை தெய்வமாகவும் விளங்கும் பைரவப்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.இத்தினத்தில் நடைபெறும் கிரியைகளிலும் ஹோமங்களிலும் அடியார்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களினால் வரும் இடர்களையும் பைரவப்பெருமானின் திருவருளைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வீர்களாக.
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்!
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்.
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் பாடசாலை பழைய மாணவர்கள்,களபூமி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து பாலாவோடை அம்மன் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பாடசாலை பழைய மாணவர்களும்,நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர். முக்கியமாக பாடசாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு அரச நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றும் பாடசாலை மைதானம் சீர்செய்வதற்கு வெளிநாட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிதியினை வீண் விரையம் செய்யாதவண்ணம் 7 பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளார்கள். அவர்கள் பாடசாலை அதிபருடன் கலந்து ஆலோசனைகளை வழங்கி விரைவில் மைதான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு ஒத்தாசையாக இருப்பார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.