காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்!

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 20/05/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் பாடசாலை பழைய மாணவர்கள்,களபூமி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து பாலாவோடை அம்மன் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பாடசாலை பழைய மாணவர்களும்,நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர். முக்கியமாக பாடசாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு அரச நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றும் பாடசாலை மைதானம் சீர்செய்வதற்கு வெளிநாட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிதியினை வீண் விரையம் செய்யாதவண்ணம் 7 பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளார்கள். அவர்கள் பாடசாலை அதிபருடன் கலந்து ஆலோசனைகளை வழங்கி விரைவில் மைதான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு ஒத்தாசையாக இருப்பார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.