Tag: Karainagar Hindu

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா 04.08.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு வே. புவனேந்திரராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு N. லோகநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பொருளாளர் திரு மா. கனகசபாபதி அவர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு ந. யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 


இந்நிகழ்வில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 12 மாணவர்களும், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 8 மாணவர்களும், 2017ஆம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் ரொக்கப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் ரொக்கப் பரிசில்களை வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முப்பத்தையாயிரம் ரூபாவினை வழங்கி உதவியிருந்தது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறான சிறப்புச் சித்திகளை பெற காரணமாக இருந்த ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களுக்கான பாராட்டு விருதினை வழங்க பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினரும் யோகா றான்ஸ்போட் நிறுவனத்தின் அதிபருமான திரு.ந.யோகநாதன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாண விளையாட்டுப் போட்டியில் 100அ நிகழ்வில் நான்காமிடம் பெற்று செல்வன் காந்தரூபன் மயூரன் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான 10 வது மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 10.07.2017 அன்று துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

10.07.2017 அன்று இடம்பெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 100mபோட்டியில் செல்வன் காந்தரூபன் மயூரன் 11 செக்கன் 9 விநாடியில் ஓடி 4ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன் இம் மாணவன் வடமாகாணப் பாடசாலை விளையாட்டுக்கள் நிறப்பரிசளிப்பையும் (Colours Award) பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் 100 m போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், மாணவன் வெற்றியடைய சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்) அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

செல்வன் காந்தரூபன் மயூரன் அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஆகியோருடன் எடுக்கப்பட்ட நிழற்படத்தையும், மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளையும் கீழே காணலாம்.

MayooranProvincialAwardMayooranColourAwardMayooranSportsProvincialAward

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

 

எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக 

1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது

3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்

4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் 

7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.

 

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு : 

1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.

திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு

திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள் 

திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின் 

• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

 செல்வி கே.  லாவண்யா

 செல்வி ந. ஜஸ்மினா

 செல்வி கி. சுதர்சனா 

• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது. 

 

4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு

திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A"  தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி  லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

 

                            விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

1 6 copy 7 copy 9 copy 10 copy 11 copy 13 copy 15 copy 18 copy DSC_8700 DSC_8715 DSC_8719 DSC_8720 DSC_8723 DSC_8724 DSC_8728 DSC_8730 DSC_8735 DSC_8736 DSC_8737 DSC_8738 DSC_8739 DSC_8740 DSC_8741 DSC_8742 DSC_8743 DSC_8744 DSC_8745 DSC_8746 DSC_8747 DSC_8748 DSC_8752 DSC_8755 DSC_8756 DSC_8757 DSC_8758 DSC_8760 DSC_8761 DSC_8762 DSC_8764 DSC_8765 DSC_8768 DSC_8769 DSC_8770 DSC_8772 DSC_8773 DSC_8775 DSC_8778 DSC_8780 DSC_8782 DSC_8784 DSC_8785 DSC_8786 DSC_8787 DSC_8788 DSC_8789 DSC_8790 DSC_8791 DSC_8792 DSC_8793 DSC_8794 DSC_8796 DSC_8797 DSC_8798 DSC_8799 DSC_8800 DSC_8801 DSC_8802 DSC_8803 DSC_8804 DSC_8805 DSC_8807 DSC_8808 DSC_8809 DSC_8810 DSC_8811 DSC_8812 DSC_8813 DSC_8814 DSC_8815 DSC_8816 DSC_8817 DSC_8818 DSC_8819 DSC_8820 DSC_8821 DSC_8822 DSC_8823 DSC_8824 DSC_8825 DSC_8826 DSC_8827 DSC_8829 DSC_8830 DSC_8831 DSC_8832 DSC_8833 DSC_8834 DSC_8835 DSC_8836 DSC_8837 DSC_8838 DSC_8839 DSC_8840 DSC_8841 DSC_8842 DSC_8843 DSC_8844 DSC_8845 DSC_8846 DSC_8847 DSC_8848 DSC_8849 DSC_8850 DSC_8851 DSC_8852 DSC_8853 DSC_8854 DSC_8855 DSC_8856 DSC_8857 DSC_8858 DSC_8859 DSC_8860 DSC_8861 DSC_8862 DSC_8863 DSC_8864 DSC_8865 DSC_8866 DSC_8867 DSC_8868 DSC_8869 DSC_8870 DSC_8871 DSC_8872 DSC_8873 DSC_8874 DSC_8875 DSC_8876 DSC_8877 DSC_8878 DSC_8879 DSC_8880 DSC_8881 DSC_8882 DSC_8883 DSC_8884 DSC_8885 DSC_8886 DSC_8887 DSC_8888 DSC_8890 DSC_8891 DSC_8910 DSC_8911 DSC_8912 DSC_8913 DSC_8914 DSC_8915 DSC_8916 DSC_8917 DSC_8918 DSC_8919 DSC_8920 DSC_8921 DSC_8922 DSC_8923 DSC_8924 DSC_8925 DSC_8926 DSC_8927 DSC_8928 DSC_8929 DSC_8930 DSC_8931 DSC_8932 DSC_8933 DSC_8934 DSC_8935 DSC_8936 DSC_8937 DSC_8938 DSC_8939 DSC_8940 DSC_8941 DSC_8942 DSC_8943 DSC_8944 DSC_8945 DSC_8946 DSC_8947 DSC_8948 DSC_8949 DSC_8950 DSC_8951 DSC_8952 DSC_8953 DSC_8954 DSC_8955 DSC_8956 DSC_8958 DSC_8959 DSC_8960 DSC_8966 DSC_8967 DSC_8969 DSC_8970 DSC_8972 DSC_8974 DSC_8975 DSC_8979 DSC_8980 DSC_8981 DSC_8982 DSC_8983 DSC_8984 DSC_8985 DSC_8986 DSC_8987 DSC_8988 DSC_8990 DSC_8991 DSC_8992 DSC_8993 DSC_8994 DSC_8996 DSC_8997 DSC_8998 DSC_8999 DSC_9001 DSC_9002 DSC_9003 DSC_9004 DSC_9005 DSC_9006 DSC_9007 DSC_9008 DSC_9009 DSC_9010 DSC_9011 DSC_9012 DSC_9013 DSC_9016

 

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியருமாகிய திரு.வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

நிறுவுனர் தின உரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய  திரு.பொன் சிவானந்தராசா அவர்கள் ஆற்றவிருக்கின்றார்.

விழாவிற்கான நிதி அநுசரணை மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டும் 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இலிருந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.   

PRIZE DAY INVITATION2017

காரைநகர் இந்துக் கல்லூரியின் ‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay_

காரைநகர் இந்துக் கல்லூரியின் 'மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2015ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. 

இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர் மருத்தவக்கலாநிதி வி.விஜயரத்தினம்  அவர்கள் சென்ற ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி வைப்பிலிட்டிருந்தார். மீண்டும் யூன்27 மேலும் அரை மில்லியன் ரூபாவினை இவர் வைப்பிலிட்டதன்மூலம் நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
 
இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை இந்நிதியத்தின் அனுசரணையிலான 3வது பரிசில் தின நிகழ்வு எதிர்வரும் யூலை4ஆம் திகதி நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

    கடந்த ஆகஸ்ட் 2016 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களின் விபரம் வருமாறு:

1.    செல்வி டிலானி கார்த்திகேசு முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், வவுனியா வளாகம்.

2.    செல்வி யாழினி நடேசு கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.

3.    செல்வன் சிவசக்திவேல் கோகுலன் நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் பீடம் 

4.    செல்வன் பஞ்சராசா மகீபன் இசைத்துறை, இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம்.


கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள  மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களையும் கல்லூரிச்சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

காரை இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் விருந்துபசாரமும் நதி சஞ்சிகை வெளியீடும் அழைப்பிதழ்

AL Lunch Invitation1AL Lunch Invitation2

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காரைநகர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்களும், கல்லூரி ஆசிரியர் திரு ச.அரவிந்தன் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு ந. பாரதி அவர்களும், ஓய்வுநிலை அதிபர் திரு தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். 

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Sabanadesan Master-page-001

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

கடந்த டிசம்பர் மாதம் 2016 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த  8 A, 1 B  என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி கம்சிகா தேவராசா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

                                  மாணவர் பெயர்                                                            பெறுபேறு

1.    செல்வி கம்சிகா தேவராசா                                                                          8A B
2.    செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மா                               8A
3.    செல்வன் சோமசுந்தரம் யசிந்தன்                                                              6A 2B S
4.    செல்வன் கோடீஸ்வரன் மிறோஜன்                                                           6A B C
5.    செல்வன் கனகலிங்கம் கமலரூபன்                                                           6A 2B
6.    செல்வி கிருத்திகா இராசலிங்கம்                                                               5A 2B C S

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவர்களின் உதவியுடன் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு 17.03.2017 அன்று பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக் கழக ஆங்கில மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபரான கலாபூசணம், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.. கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

மேலும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், கல்லூரியின் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இந்நிகழ்வில் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம்இ கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கலைஇ வணிகமஇ; நுண்கலை ஆகிய துறைகளுக்கு தெரிவாகிய செல்வன் நவரத்தினம் லோகதாஸ், செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன், செல்வி தர்ஜிகா மூர்த்தி, செல்வி ஷஜிதா பாலசிங்கம், செல்வி கஜிந்தினி நதிசீலன், செல்வி ஹீந்துஜா முடிராசா ஆகிய ஆறு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு; கல்லூரியின் பான்ட் அணியின் இசையோடு விருந்தினர்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தேசியக் கொடி கல்லூரிக் கொடி என்பவற்றை முறையே பிரதம விருந்தினர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா அவர்களும் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் மண்டப முன்றலில் ஏற்றிவைத்தனர். கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து அடுத்து மாணவி செல்வி ஜீவிசா சிவசக்திவேல் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கல்லூரியின் பகுதித் தலைவர் திருமதி கலாநிதி சிவநேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து பிரதி அதிபரின் தலைமையுரையும் விருந்தினர்களின் உரையும் கௌரவம் பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் நவரத்தினம் லோகதாஸ் வழங்கிய ஏற்புரையும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய மட்ட போட்டியாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசா இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார். 

அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கும் திட்டத்துக்கு  அன்னாரது மகன் திரு.S.P.S.அரிகரன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக உதவி வருவதுடன் இன்றைய நிகழ்விற்கான முழு அனுசரணையினையும் அவரே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் அதற்காக பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இத்திட்டத்தினை சீரியமுறையில் முறையில் நடைமுறைப்படுத்த சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தையும் பாராட்டி நன்றியும் கூறினார். ஆறு மாணவர்களுக்கும் தலா ஏழாயிரம் ரூபா வீதம் ரொக்கப் பரிசிலும் பாராட்டு விருதும் விருந்தினர்களினாலும் பிரதி அதிபரினாலும் வழங்கப்பட்டிருந்தன. கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவர சங்க நிர்வாக சபை உறுப்பினருமான செல்வி சிவரூபி நமசிவாயம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கும் திட்டத்தின் 3வது கட்டமாக  இந்நிகழ்வில் திரு.அரிகரனால் வழங்கப்பட்ட உதவி அமைந்திருந்தது. முதற்கட்டமாக க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்கள 2014ம் ஆண்டு 2ம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிற்கும் இரண்டாவது கட்டமாக 2015ம் ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசில்கள் திரு.அரிகரனின் உதவியிலிருந்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

cd55c60a8553f2e237c4c23434fe

bb7a90f198747ca129519bc2f4e0

89366501e8582b79a6788846bfd2

1a34776c496066baa17a75be24f3

c31f04ea802958f0c402035c86d5

065a6674975440d6901fc7665082

86ba192f53792b5a0278a6a0df22

ad9cf74e850d1f1b635de261ec42

1769c28c48298a534ec711a20524

f39199e9a38dd1c92d882141f7f9

fbee3d4380269892d5b842e264b2

bd22b21e63c2e5f1a1aac539cef4

05e79e07a67c2709974e3f28cd6f

94a8d73547aa5b51f74ce42393e8

997ceeb649a1b898548c7a109709

c7f794c8887a8fe5687e0a3a4a4c

5174ba20c6b981229f7eed6da978

a59240ab32bcedba532d1519bf58

10cb64167a0576d40b0702181df2

7ec2fcf2d230eb2499d95d71a6c9

b144b760661d8df9410178bc9920

eba051b90f67bd4d41faaac85805

3d978ab820fbaf62909e8f72aae6

82e369ad1d9bdbbb67dae26402de

87e3c9446786139957d304766e4c

ab5a8611f90b3b1fcde0404f6957

0fb3c34b6a57d1c2eea5340ef16f

3877d576ddca17bc5b8361c410db

c5cb395656d29222afe0817aa8a8

f8a1cdcff2034ebc6c66b56fa2b7

211af80be464396827882f3666e7

ffdd31878ae763340388cb42b9fb

8b5db14fcc9697efab4463db2035

c95bd18246c0534df670bd688f18

67c1be2fb6d4d46f56922980ca13

199584b5460c9ca8dbdcf504d551

6e161a384d7db2ac07ef960dc71d

64b3ff8e51f04e165a761817f74e

fc0f558ce606ad45e6b820e2ae66

0be7ef6d1ccf421f8c2ad0bcff54

f696379cfaca13e7ae0360397df1

9d27ba7fc25daf5ed6d5e66cfe80

28845d9054556cbd169af212f6bc

8703189185f7a1f186bbe26d2035

1a47f384ade7b2199cd02a869b2f

1a47f384ade7b2199cd02a869b2f

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற இரண்டாம் அமர்வு 07.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் திரு வு. அகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கௌரவ விருந்தினர் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். மேலும் சபாநாயகர் வருகையுடன் சபை அமர்வு இடம்பெற்றது. இவ் அமர்வில் பத்து அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், அமைச்சர்கள் ஆகியோருக்கு அவர்களது பெற்றோர்களால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

IMG_0973 IMG_0977 IMG_0981 IMG_0983 IMG_0985 IMG_0986 IMG_0989 IMG_0990 IMG_0993 IMG_0995 IMG_0996 IMG_0999 IMG_1000 IMG_1002 IMG_1003 IMG_1007 IMG_1011 IMG_1012 IMG_1013 IMG_1014 IMG_1015 IMG_1020 IMG_1029 IMG_1031 IMG_1033 IMG_1035 IMG_1039 IMG_1042 IMG_1045 IMG_1048 IMG_1050 IMG_1052 IMG_1065 IMG_1069 IMG_1076 IMG_1082 IMG_1088 IMG_1089 IMG_1093 IMG_1097 IMG_1099 IMG_1103 IMG_1105 IMG_1107 IMG_1117 IMG_1118 IMG_1119 IMG_1126 IMG_1152 IMG_1153 IMG_1154 IMG_1157 IMG_1167 IMG_1175 IMG_1179 IMG_1184 IMG_1192 IMG_1194 IMG_1198 IMG_1202 IMG_1204 IMG_1206

Karainagar Hindu College Student Parliament Invitation-2017

STUDENT PARLIAMENT INVITATION

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

Shivanthini

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவியேற்று கடமையாற்றி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டு காலமாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி அதிபராக மாற்றாலாகிச் சென்றமையை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி.சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons) Dip.In Ed. ,SLPS-3 அவர்கள் பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சிவந்தினி வாகீசன் தமது தொடக்கக் கல்வியை வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையிலும் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றவர். 

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியாகிய திருமதி.சிவந்தினி வாகீசன் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தவர் ஆவர். பாடவிதானச் செயற்பாடுகளுடன் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக் குழு பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்த ஒர் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியை ஆவார்.  

இவர் கல்லூரியின் முன்னாள் உப-அதிபரும், கவிஞருமாகிய அமரர்.சி.பொன்னம்பலம் அவர்களின் பெறாமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தாம் கல்வி கற்ற பாடசாலை மீதும் தாம் பிறந்து வளர்ந்த ஊர்மீதும் பற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானையும் வேண்டுகின்றது.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு

கடந்த ஆகஸ்ட் 2016 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு

 மாணவர் பெயர்                                                பெறுபேறு                 மாவட்டநிலை
செல்வி டிலானி கார்த்திகேசு –                            A B C                                 131
செல்வி தீபிகா நவரத்தினம் –                              A 2B                                   155
செல்வன்.தர்மகுலசிங்கம் நாகரஞ்சன் –          A B C                                  221
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை  –                A B C                                  240

 

கலைப்பிரிவு

மாணவர் பெயர்                                                பெறுபேறு             மாவட்டநிலை
செல்வி யாழினி நடேசு  –                                      2B C                          314
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் –                3B                             362
செல்வன் கனகலிங்கம் வினோதன்  –                 B 2C                        413
செல்வி தேவராசா றோமிலா  –                          A B S                          506

 

தொழினுட்பப்பிரிவு

மாணவர் பெயர்                                                              பெறுபேறு     மாவட்டநிலை
செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன்-                    B C S                  79
செல்வி நிரோஜினி பாலகிருஸ்ணன்-                               2 C S                160
செல்வி காயத்திரி புவிராஜசிங்கம் –                                     3S                265
செல்வி பிரசாளினி சிவசுப்பிரமணியம் –                            3S                284

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக்கல்லூரி மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்

Sports Meet Invitation 2017

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.

காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெற்றமையை அடுத்தே எமது பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு:

01. செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

02. செல்வி தர்ஜிகா மூர்த்தி, நுண்கலைப்பீடம் (இசைத்துறை) -கிழக்குப் பல்கலைக்கழகம்
03. செல்வி ஹீந்துஜா முடிராசா, கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
04.  செல்வி கஜிந்தினி நதிசீலன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
05. செல்வி ஷஜிதா பாலசிங்கம், கலைப்பீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்
06. செல்வி றோஜனா தேவராசா, வணிகபீடம் – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
07. செல்வன் நவரத்தினம் லோகதாஸ், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு திறப்பு விழா 2017.01.26ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 
காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு அ. சோமாஸ்கந்தன் அவர்களும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ். கே. சதாசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு ளு. ஆதவன் அவர்களும், காரைநகர் பிரதேச மருத்துவ அதிகாரி அவர்களும், அயற் பாடசாலை அதிபர்களும், பழைய மாணவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் கலந்து விழாவை மேலும் சிறப்பித்திருந்தனர்.

மைதான விளையாட்டரங்கு திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

 

 

 

கடந்த இரண்டு நாள்கள் பெய்த மழைகாரணமாக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

கடந்த இரண்டு நாள்கள் பெய்த மழைகாரணமாக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

 

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டரங்கு திறப்பு விழா அழைப்பிதழ்

STADIUM OPENING

Karainagar Hindu College Annual Inter House Athletic Meet Invitation

SPORTS MEET INVITATION 1SPORTSMEET INVITATION 2

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி.கமலாவதி நடராஜா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னாரின் சேவை நன்றியோடு நினைவுகூரப்படுகின்றது.

Kamalateacher

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி.கமலாவதி நடராஜா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னாரின் சேவை நன்றியோடு நினைவுகூரப்படுகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர்களின் வரிசையில் கல்லூரியில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணியாற்றி பல நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியமணி அமரர்.திருமதி.கமலாவதி நடராஜா அவர்களை மறந்து விட முடியாது. 

அன்னார் இவ்வுலகை நீங்கி பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், பாடசாலைச் சமூகமும், பழைய மாணவர் சங்கங்களும் அன்னாரின் சேவையை நன்றியோடு நினைவு கூருவது பொருத்தமானதாகும். 

காரைநகர் செம்பாடு, தங்கோடையைச் சேர்ந்த அமரர். மருத்துவர் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளான அமரர்.திருமதி.கமலாவதி நடராஜா அவர்கள் தனது தொடக்கக் கல்வியை தங்கோடை அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை(கோவிந்தர் பாடசாலை) இடைநிலை, முதுநிலைக் கல்வியை யாழ், மருதனாமடம், இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும் கற்று 1950 களின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழக திருச்சி  Holy Cross கல்லூரி வளாகத்தில் இரசாயனவியல் இளமாணிப்பட்டம் பெற்றவர்.  
 
தனது ஆசிரியப் பணியை குருநாகல் மாவட்ட அரசினர் பாடசாலையில் சில ஆண்டுகளும், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் சில ஆண்டுகளும் ஆற்றிய பின்னர், காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலத்தில்; 1967 ஆம் ஆண்டு இணைந்து 1988 ஆம் ஆண்டு வரை இரசாயனவியல், கணித பாடங்களைக் கற்பித்து பல நன்மாணக்கர்களை உருவாக்கியதுடன் பல்கலைக்கழக அனுமதியும் பெற வைத்தவர். மாணவியரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டவர். நேரந்தவறாது கற்பித்தலில் ஈடுபட்டதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். தமது மாணவர்களைத் தன்பிள்ளைகள் போல நினைத்து கரிசனையுடனும் கண்டிப்புடனும் கல்வி கற்பித்த நல்லாசிரியை இவர் ஆவார்.

இத்தகைய சேவையுள்ளம் மிக்க ஆசிரியமணி திருமதி.கமலாவதி நடராஜா அவர்கள் 1988 ஆம் ஆண்டு வரை காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய பின்னர் தமது ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நோய்வாய்ப்பட்டு 2006 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 

வட்டுக்கோட்டைத் தொகுதியின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களை உள்வாங்கி பல்கலைகழகங்களுக்கு அதிகமான மாணவர்களை அனுமதி பெறவும், பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யவும் உழைத்த, காரைநகர் பெற்ற நற்பண்பாளர், காரைநகர் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கே.கே.நடராஜா அவர்களின் அன்புத்துணைவியாரே அமரர்.திருமதி.கமலாவதி அவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னார் மறைந்து 10ஆவது ஆண்டு நினைவு கூரப்படும் இவ்வேளையில், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாடசாலை சமூகத்துடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவு கூருகின்றது.   

Kamalateacher 2

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இப்போட்டிகளில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.


மரதன் ஒட்டம் 

முதலாம் இடம் செல்வன் ச.சதீஸ்குமார் (தரம் 11,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வன் சி.பிரகாஸ் (தரம் 13 சயம்பு இல்லம்)

மூன்றாம் இடம் செல்வன் ச.கஜிந்தன் (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வன் ச.ஜோன் (தரம் 10 சயம்பு இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 12 சயம்பு இல்லம்)

 

பெண்களுக்கான சைக்கிலோட்டம் 

முதலாம் இடம் செல்வி என்.யஸ்மினா (தரம் 12,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வி எம்.நிறோசனா (தரம் 13 தியாகராசா இல்லம்)

மூன்றாம் இடம் செல்;வி ரி.ஜென்சிகா (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வி எஸ்.சிந்துஜா (தரம் 12 தியாகராசா இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வி எம.;.சுதர்சனா (தரம் 12 சயம்பு இல்லம்)

காரைநகர் சுற்று வீதியில் சைக்கிலோட்டமும் காரைநகர் துறைமுகத்திலிருந்து பாடசாலை வரையான தூரம் பெண்களுக்கான சைக்கிலோட்டமும் இடம்பெற்றது.

முதல் ஜந்து இடங்களைப் பெற்ற வீர,வீராங்கனைகள் கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன் காணப்படுகின்றனர்.

IMG_0305 (Copy) IMG_0306 (Copy) IMG_0307 (Copy) IMG_0308 (Copy) IMG_0309 (Copy) IMG_0310 (Copy) IMG_0311 (Copy) IMG_0312 (Copy) IMG_0313 (Copy) IMG_0314 (Copy) IMG_0315 (Copy) IMG_0316 (Copy) IMG_0317 (Copy) IMG_0318 (Copy) IMG_0319 (Copy) IMG_0320 (Copy) IMG_0321 (Copy) IMG_0322 (Copy) IMG_0323 (Copy) IMG_0324 (Copy) IMG_0325 (Copy) IMG_0326 (Copy) IMG_0327 (Copy) IMG_0328 (Copy) IMG_0329 (Copy) IMG_0330 (Copy) IMG_0331 (Copy) IMG_0332 (Copy) IMG_0333 (Copy) IMG_0334 (Copy) IMG_0335 (Copy) IMG_0336 (Copy) IMG_0337 (Copy) IMG_0338 (Copy) IMG_0339 (Copy) IMG_0340 (Copy) IMG_0341 (Copy) IMG_0342 (Copy) IMG_0343 (Copy) IMG_0344 (Copy) IMG_0345 (Copy) IMG_0346 (Copy) IMG_0347 (Copy) IMG_0348 (Copy) IMG_0349 (Copy) IMG_0350 (Copy) IMG_0351 (Copy) IMG_0352 (Copy) IMG_0353 (Copy) IMG_0355 (Copy) IMG_0356 (Copy) IMG_0357 (Copy) IMG_0358 (Copy) IMG_0359 (Copy) IMG_0360 (Copy) IMG_0361 (Copy) IMG_0362 (Copy) IMG_0363 (Copy) IMG_0364 (Copy) IMG_0365 (Copy) IMG_0366 (Copy) IMG_0367 (Copy) IMG_0368 (Copy) IMG_0369 (Copy) IMG_0371 (Copy) IMG_0372 (Copy) IMG_0373 (Copy) IMG_0374 (Copy) IMG_0376 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள்அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,செயலாளராக ந.பாரதி,பொருளாளராக க.நிமலதாசன்,உபசெயலாளராக க.நாகராசா,உப பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன்,த.சற்குணராசா,ந.யோகநாதன், செ.அருட்செல்வம்,சி.கந்தசாமி,பொ.சிறிகரன்,க.தில்லையம்பலம்,திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார்,திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.

img_9860-copy img_9862-copy img_9863-copy img_9864-copy img_9865-copy img_9866-copy img_9867-copy img_9868-copy img_9869-copy img_9870-copy img_9871-copy img_9872-copy img_9873-copy img_9874-copy img_9876-copy img_9877-copy img_9878-copy img_9879-copy img_9880-copy img_9881-copy img_9882-copy img_9883-copy img_9884-copy img_9885-copy img_9886-copy img_9887-copy img_9888-copy img_9889-copy img_9890-copy img_9891-copy img_9892-copy img_9893-copy img_9894-copy img_9897-copy img_9897 img_9898-copy img_9899-copy

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை செயலாளரிடம் பெற்று சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் சங்கச் செயலாளர் க.நிமலதாசன் கேட்டுள்ளார்.

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

kathiravetpillaist

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

ஓரு பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கல்விசாரா அலுவலர்களின் பங்கும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும். 

அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்பு மிக்க சிறப்பான சேவையை வழங்கிய வகையில் அமரர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் கல்விசாரா அலுவலர்கள் வரிசையில் முன்னிலை வகித்து மேற்படி கல்லூரிச் சமூகத்தினால் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒருவராக விளங்குகின்றார். 

வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் பதவிக் காலத்தில் அலுவலக எழுதுவினைஞராகவும் பின்னர் ஆய்வுகூட உதவியாளராகவும்; பதவியில் அமர்த்தப்பட்டிருந்த கல்லூரியின் பழைய மாணவரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் அதிபர் தியாகராசா அவர்களினதும் அதன் பின்னர் பதவி வகித்த அதிபர்களினதும் மற்றும்; ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் மனம் கவரும்படியாக மிகுந்த பொறுப்புடனும் செயற்திறனுடனும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கல்லூரியின் நிர்வாக ரீதியான பணிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தின் பாராட்டுக்குரியவராக விளங்கினார். 

கல்லூரியின் விளையாட்டுத்துறை போன்ற கல்விசாரா செயற்பாடுகள் மற்றும் சமய சமூக கலாசார நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியர்களுக்கு இவரால் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு காரணமாக ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தினதும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர். பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கல்லூரிக்கு சமூகமளித்து அவசியமான பணிகளை நிறைவுசெய்ய கல்லூரி நிர்வாகத்துக்கு உதவிவந்ததன் மூலம் அதன் சுமுகமான செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியவர். 
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பது போல, அன்னாரின் நன்மக்களான விக்கினேஸ்வரி, மனோரஞ்சிதம், சத்தியராணி, கிருஷ்ணகுமார் ஆகிய நால்வரும் பாடசாலையில் நல்லொழுக்கமும் கல்வியில் சிறந்து விளங்கியும் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நன்மாணக்கர்களாகத் திகழ்ந்து தம் தந்தை பெயர் சொல்ல வைத்தவர்கள் என்றால் மிகையாகாது.

இத்தகைய உன்னதம் மிக்க சேவையாளரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் சேவையிலிருக்கும் பொழுதே 1980ஆம் ஆண்டு தமது 40வது வயதில் சிவபதம் அடைந்தமை அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான இழப்பாகும். அன்னார் மறைந்த 36வது ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் ஏனையோருடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவுகூருவதுடன் அன்னாரின்  கல்லூரிக்கான சேவை ஏனைய கல்லூரி சார்ந்த பணியாளர்களுக்கும் எடுத்துகாட்டாக அமைந்து விளங்கவேண்டும் என்பதுவும் எமது பெருவிருப்பாகும். 

அன்னாரின் உருவப்படம் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அன்னாரின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்து இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பழைய மாணவர்சங்க கனடாக் கிளையின் முன்னாள் பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாடசாலைக்குப் பயணம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படத்தைக் கீழே காணலாம்.  

kathiravetpillai kathiravetpillaiimg_1921

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்களின் விபரம் வருமாறு: 

1.    செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்

2.    செல்வி தர்ஜிகா மூர்த்தி  நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது. 

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா


விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன்

எமது பாடசாலையில் விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா 2016.09.19 அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் தலைமையில் இடம்பெற்றது. 

விளையாட்டரங்கிற்கான அடிக்கல் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு S. சுந்தரசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு S. ஆதவன் அவர்களும் கலந்து கொண்டனர். பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

sai-veg 13x19-new

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்


தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு புற்றுநோய் தடுப்புத் தொடர்பான சுவரொட்டி வடிவமைப்புப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். 

சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுடன் இணைந்து சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி நாடாளவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது.  "புற்றுநோய் தடுப்பு" எனும் கருப்பொருளில் முதுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட மேற்படி போட்டி 11.07.2016 அன்று நடைபெற்றது. 
இப் போட்டியில் காரை இந்து மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் பங்குபற்றி யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேற்படி மாணவனுக்குரிய பரிசில் தின நிகழ்வு 06.08.2016 அன்று கொழும்பு பொது நூல்நிலையத்தில் காலை 9.00 மணிக்கு கௌரவ சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபனையும், மாணவனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவிப்பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

செல்வன் புலேந்திரன் கஜீபன் பெற்றுக்கொண்ட வெற்றிக்கேடயம், சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியை கீழே காணலாம்.

Poster Cancer TrophyPoster Cancer Certificate