கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காரைநகர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்களும், கல்லூரி ஆசிரியர் திரு ச.அரவிந்தன் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு ந. பாரதி அவர்களும், ஓய்வுநிலை அதிபர் திரு தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.