காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.
ஆரம்பக் கிரியைகள் 09.02.2015 திங்கட்கிழமை ஆரம்பமாகின பாலஸ்தாபனத்தையடுத்து அம்பிகையின் ஆலயம் அழகுற அமைத்து விரைவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.
Category: Google Photos
காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.
யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள்
யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப்போட்டிகள் 31-01-2015 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன.
காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.
காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.
மன்றத் தலைவர் நடராசா சோதிநாதன் தலைமையில் காலையில் அரங்கத் திறப்பு விழாவும் மாலையில் கலை நிகழ்வும் இடம்பெற்றன.நிகழ்வில் இசை வேள்வி, நாத சமர்ப்பணம்,நாட்டியாஞ்சலி,கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றன.
கலையரங்கை அமைத்து வழங்கிய சண்முகம் சிவஞானம் அவர்களுக்கு கலைமாடக்கோண் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி கலாமன்றத்தினால் கௌரவிக்கப்பட்டது.யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்கள் கலாமன்றம் சார்பாக பட்டத்தினை வழங்கி கௌiவிப்பு உரையினை நிகழ்த்தினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடப்பவனி இடம்பெற்றது.
இந்தப் பாற்குடப் பவனியில் விசேடமாக யானை கும்பாபிஷேகத்திற்குரிய பொருட்களைச் சுமந்துவர பெருமளவு தவில் நாதஸ்வர வித்துவான்கள் நாதமழை பொழிய நூற்றுக்கணக்கான பெண்களின் பாற்குடப் பவணி இடம்பெற்றதுஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாற்குடப்பவனியில் பங்குபற்றினர்.