காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

மன்றத் தலைவர் நடராசா சோதிநாதன் தலைமையில் காலையில் அரங்கத் திறப்பு விழாவும் மாலையில் கலை நிகழ்வும் இடம்பெற்றன.நிகழ்வில் இசை வேள்வி, நாத சமர்ப்பணம்,நாட்டியாஞ்சலி,கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றன.

கலையரங்கை அமைத்து வழங்கிய சண்முகம் சிவஞானம் அவர்களுக்கு கலைமாடக்கோண் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி கலாமன்றத்தினால் கௌரவிக்கப்பட்டது.யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்கள் கலாமன்றம் சார்பாக பட்டத்தினை வழங்கி கௌiவிப்பு உரையினை நிகழ்த்தினார்.