Category: Google Photos

காரைநகர் அபிவிருத்திச் சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

எதிர்வரும் 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் அபிவிருத்திச் சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கௌரவ செயலாளர் அறிவித்துள்ளார்.

 

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் முதன் முறையாக இவ்வாண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது. இந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா கடந்த 3ம் திகதி இடம்பெற்றது.

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 43ம் நாள் மண்டலாபிஷேக விழா (11ம் திருவிழா) பகல், இரவு திருவிழா 16.03.2015 திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோவில் சங்காபிஷேக நிகழ்வுகள். 11.03.2015

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 38வது நாள் மண்டலாபிஷேக விழா (6ம் திருவிழா ) 11.03.2015 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

காரைநகா் பிரதேசசபை உறுப்பினரும் இதிருப்பணிச்சபை செயலாளரும் விழா உபயகாரருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் தனது மாதாந்த பிரதேசசபை வேதனத்தை அப்பிரதேச வறியமாணவா்களுக்கே வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு அமைய காரைநகரின் பாடசாலைகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 185 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திவகவலய கல்விப்பணிப்பாளா் திரு.ஜோன் குயின்ரஸ் மற்றும் பிரமுகா்கள் கலந்து சிறப்பித்ததுடன் யாழ்ற்றன் கல்லூரி, தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் கலைஞா்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது விஷேட அம்சமாகும்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோவில் சங்காபிஷேகம் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு இவ்விணையத்தளத்தில் எடுத்துவரப்படும்

DSC_0093 (Copy)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோவில் சங்காபிஷேகம் நிகழ்வுகள் இலங்கை நேரம் புதன்கிழமை (11.03.2015) அன்று காலை 8:00 மணிக்கு (கனடா நேரம் செவ்வாய்க்கிழமை இரவு 10:30 இற்கு) நேரலை ஒளிபரப்பினை இவ்விணையத்தளத்தில் கண்டு அம்பிகை அடியார்கள் அருள் பெற்று இன்புறலாம் என்று அறியத் தருகின்றோம்.  

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேவஸ்தான மண்டலாபிஷேக நவகுண்டல சகித நவேத்திர சகஸ்ர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 11.03.2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது.

PALAVODAI AMMAN KOVIL NOTICE

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை 35ம் நாள் பகல் இரவு நிகழ்வுகள்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை 35ம் நாள் பகல் இரவு நிகழ்வுகள்.மஹோற்சவ தின 3ம் நாள் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.மண்டலாபிஷேக 38ம் நாள் நிகழ்வு (6ம் திருவிழா)11.03.2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது அன்றையதினம் விஷேட மேளக்கச்சேரிகள்,இரவு நடன நிகழ்வுகளுடன் காரைநகா் பாடசாலைகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சுமார் 175 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

            ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

Sympathy_Candle

எமது இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர் திரு.குலசேகரம் விமலராசா(கண்ணன்) அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சிறிகரலட்சுமி குலசேகரம் அவர்கள் நேற்று சனிக்கிழமை (07.03.2015) அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். 

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

காரைநகர் மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

காரைநகர் மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

காரைநகர் மடத்துக்கரை அம்மன்ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

PART-5

PART-6

காரைநகர் மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 9ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

PART-5

PART-6

PART-7

காரைநகர் மடத்துக்கரை அம்மன் 8ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

PART-1

PART-2

PART-3

PART-4

PART-5

காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 25ம் நாள் மண்டலாபிஷேக நிகழ்வு 26.02.2015 நடைபெற்றது.

காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 25ம் நாள் மண்டலாபிஷேக நிகழ்வு 26.02.2015 நடைபெற்றது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற இந்துசமய விவகார அமைச்சா் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவா்கள் கலந்து கொண்டார் தொழிலதிபா் எஸ்.ரி.பரமேஸ்வரன் உபயமாக நடைபெற்ற இந்நிகழ்வில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 50 மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குதிரையாட்டம், கரகம், விசேட மேளக்கச்சேரி என்பன நடைபெற்றது

காரைநகர் மடத்துக்கரை அம்மன் 4ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

PART-1

PART-2

PART-3

PART-4

மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் மகோற்சவம் முதன்முதலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த மகோற்சவத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மூன்றாம் திருவிழாக் காட்சிகள்

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி ஆலய 19.02.2015 மண்டலாபிஷேக 17 ம் நாள் இரவு நிகழ்வுகள்

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தைப் பணிப்பாளர் தி.விஸ்வருபன்அவர்கள் கலந்துகொண்டுசிறப்பித்தார்.பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வருடாந்த விளையாட்டுப்போட்டி கோலாகலமாக இன்று இடம்பெற்றது.சிறார்களின் குழுப் போட்டிகள்,இடைவேளை இசைவும் அசைவும் நிகழ்வு,தாம்பிழுவைப் போர் என்பன கண்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளாக அமைந்தன.

காரைநகர் மடத்துக்கரை அம்மன் கொடியேற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

அதிபர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்  மகளிர் விவகாரப் பிரதி அமைச்சரும் பழைய மாணவியுமான விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் பழயை மாணவர் நிகழ்சியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்று பிரதி அதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரனினால் பொன்னாடை போர்த்து வெற்றிக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தைப் பணிப்பாளர் தி.விஸ்வருபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிஸ்ணன்,காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

doc 11 003

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

DSC_0096 (Copy)

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி  15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தாவும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ.ஜெனால்ட்அன்ரனி,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,வர்த்தகர் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை 14ம் நாள் பகல் இரவு நிகழ்வுகள்

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மகாசிவராத்திரி விஞ்ஞாபனம்

Sivarathiry  Kr Notice (1)

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 06/02/2015 வெள்ளிக்கிழமை பி.ப. 2 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தபாலகத்தின் தபாலதிபர் திரு.தி. சக்திதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மண்டலாபிஷேக 11ம் நாள் பகல் இரவு நிகழ்வுகளின் தொகுப்பு

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

flaganimation2

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தாவும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ.ஜெனால்ட்அன்ரனி,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,வர்த்தகர் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

KARAI HINDU LOGO

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி த.வாசுகி தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கணக்காளர் திருமதி கவிதா சிவஸ்ரீசாந்திநாயகமும் கௌரவ விருந்தினராக மருத்துவர் வேலாயுதம் ஜங்கரனும் கலந்துகொள்ள உள்ளனர்.

 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு அழைப்பிதழ்

Sports meet Invitiation1 Sports meet Invitiation2