காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தாவும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ.ஜெனால்ட்அன்ரனி,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,வர்த்தகர் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.