வங்கி முகாமையாளர் அ.கெங்காதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலருமான ப.விக்னேஸ்வரன்,காரை இந்துக்கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Category: Google Photos
“சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” அவர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பாடசாலைகளை அமைத்தும், சைவ ஆசிரியர்களை உருவாக்கியும் சைவ சமயத்தின் காவலராக அயராமல் அரும்பணியாற்றிய எமது காரைநகர் ஆசான் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “ என்ற நூல் வெளியீட்டு விழா கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் சனிக்கிழமை(25.07.2015 அன்று பி.ப 2:00 மணிக்கு Scarborough Civic Centre இல் நடைபெற உள்ளது.
இவ்விழாவின் நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.
யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் – 2015
யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் தி.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr. க. கணேஸ்வரராஜா(Yarltonian) அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. ச. சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்