Tag: காரைச் செய்திகள்
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளை மறுதினம் நான்கு சாமங்களும் விஷேட அபிஸேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற உள்ளதுடன் அதிகாலை தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் இருபத்து நான்கு மணிநேரம் ஓதும் அகண்டநாம வழிபாடும் அஷ்டோத்திர நாம அர்ச்சனை ஆகியனவும் அன்றைய நாள் முழுவதும் நடாத்துவதற்கு காரைநகர் மணிவாசகர் சபை எற்பாடு செய்துள்ளது.
மறுநாள் புதன்கிழமை அதிகாலை இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையையடுத்து சுவாமி துர்வாக சாகர சமுத்திரதீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்த நிகழ்வு இடம்பெறும்.தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இரு தினங்களும் யாழ் நகரிலிருந்து ஆலயம் வரை பஸ் சேவையும் இடம்பெற உள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு
காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு
இன்று நடைபெற்ற உள்ளுர் அதிகார சபைகள் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்கு இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்;து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவாகி உள்ளனர்.
இன்று அதிகாலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் பிரதேச சபைக்கான பத்து உறுப்பினர்கள் தெரிவாகினர்.
பத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக எட்டுக் கட்சிகளைச் சேர்ந்த 104 பேர் காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் ஆட்சி அமைப்பதில் நெருக்கடி நிலை தோன்றி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கைத் தழிழரசுக் கட்சியில் 1ம் வட்டாரத்தில் (தங்கோடை,பத்தர்கேணி,மருதபுரம்,செம்பாடு உள்ளிட்ட கிராமங்கள்) 314 வாக்குகளைப் பெற்று கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவாகி உள்ளார். 2ம் வட்டாரத்தில் (காரை மத்தி,வேதரடைப்பு,மல்லிகை உள்ளிட்ட கிராமங்கள்) 479 வாக்குகளைப் பெற்று ஆண்டிஜயா விஜயராசா தெரிவாகி உள்ளார் .3ம் வட்டாரத்தில் (பெரியமணல்,மருதடி,சடையாளி,புதுறோட்,மாப்பாணவூரி,சயம்புவீதி உள்ளிட்ட கிராமங்கள்) 328 வாக்குகளைப் பெற்று விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவாகி உள்ளார்.
மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 4ம் வட்டாரத்தில் (களபூமி,பாலாவோடை,விளானை,பொன்னாவளை,சத்திரந்தை,இடைப்பிட்டி,மொந்திபுலம்,
வலந்தலை, காளிகோவிலடி,திக்கரை,ஊரி உள்ளிட்ட கிராமங்கள்) 356வாக்குகளைப் பெற்று நல்லையா ஜெயக்கிருஸ்ணனும் 5ம் வட்டாரத்தில் (கருங்காலி,வியாவில்,பலகாடு,கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமங்கள்) 263 வாக்ககளைப் பெற்று மயிலன் அப்புத்துரையும் 6ம் வட்டாரத்தில் (துறைமுகம் பிள்ளையார் கோவிலடி, பாலாவோடை, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்கள்) 275 வாக்குகளைப் பெற்று மாணிக்கம் யோகநாதனும் தெரிவாகி உள்ளதுடன்.
காரைநகர் பிரதேசம் முழுவதும் இலங்கைத் தழிழரசுக் கட்சி 1623 வாக்குகளையும் ஜக்கிய தேசியக் கட்சி 1263 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1197 வாக்ககளையும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1080 வாக்ககளையும் பெற்று விகிதாசாரப் பட்டியலில் உறுப்பினர்களைப் பெறும் நிலையில் உள்ளனர்.
அகில இலங்கைத் தழிழ் காங்கிரஸ் மொத்தம் 359 வாக்ககளையும் தழிழர் விடுதலைக் கூட்டணி 156 வாக்குகளைம்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 136 வாக்ககளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 வாக்குகளையும் காரைநகர் மக்களிடம் சுவீகரித்துக் கொண்ட போதும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதும் ஏனைய நான்கு உறுப்பினர்களின் விபரமும் எடுத்து வரப்படும்.
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இன்று 06 .02 .2018 செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் திரு.அ.சாந்தகுமார் (தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
வித்தியாலய மைதானத்தில் இன்று 06 .02 .2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் திரு.அ.சாந்தகுமார் (தலைவர்) தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.கனகரத்தினம் தயானந்தன் (ஆசிரியர்,தர்மபுரம் மத்திய கல்லூரி-கிளிநொச்சி )(பழைய மாணவன்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆ.குமரேசமூர்த்தி(கோட்டக்கல்வி பணிப்பாளர்-காரைநகர்),திரு.வே.புவனேந்திரராஜா (முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்) அவர்களும்,கௌரவ விருந்தினர்களாக திரு.ந.ஹரிகரன்(உரிமையாளர், K.S.M தொலைத்தொடர்பு நிலையம்),திருமதி.பா.திருநீலகண்டன் (ஓய்வு நிலை கிராம சேவையாளர்) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களையும் வெற்றிக்கேடயங்களையும் யாழ். K.S.M தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளர் திரு.ந.ஹரிகரன் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார். அவருக்கான நன்றியினை பாடசாலை சமூகம் விழாவின் முடிவில் கூறியிருந்தனர்.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 04/02/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மணவாளக்கோல நிகழ்வு
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 04/02/2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மணவாளக்கோல நிகழ்வு காலை10.00 மணிக்கு அபிஷேகமும் மாலை 7.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கலியான நிகழ்வும் அதனை தொடர்ந்து தீபாராதனையும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெளி வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரை மற்றும் அவர் பாடியுள்ள பாட்டும் இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது!
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரை
நினைவு பகிர்வு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் பாடிய பாட்டு